உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சின்ன வெங்காயம் விலை சரிவு; ஏற்றுமதி தடையை நீக்க வலியுறுத்தல்

சின்ன வெங்காயம் விலை சரிவு; ஏற்றுமதி தடையை நீக்க வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சிறிய வெங்காயம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், ஏற்றுமதியை மீண்டும் துவங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.அரியலுார், பெரம்பலுார், திருச்சி, ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், சிறிய வெங்காயம் சாகுபடி நடந்து வருகிறது. இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேஷியா, அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வட மாநிலங்களில் பெரிய வெங்காயம் சாகுபடி, 2023ம் ஆண்டு பாதித்தது. இதனால், விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, வெளிநாடுகளுக்கு அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், பெரிய வெங்காயம் விலை கட்டுக்குள் உள்ளது. கிலோ 30 ரூபாய்க்கு கீழ் விற்பனையாகி வருகிறது. ஏற்றுமதியை கட்டுப்படுத்தாவிட்டால், கிலோ 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்திருக்கும். பெரிய வெங்காயத்துடன் சிறிய வெங்காயம் ஏற்றுமதிக்கும் தடை நீடிக்கிறது. இதனால், அதன் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில், கிலோ சிறிய வெங்காயம், 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தடை விதிப்பதற்கு முன், 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனையானது. ஏற்றுமதி தடையால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விலை வீழ்ச்சியால், விவசாயிகள் கடும் அவதிக்குஉள்ளாகி வருகின்றனர். எனவே, ஏற்றுமதிக்கான அனுமதியை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுத வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ராஜா
பிப் 16, 2024 07:02

மதிப்புக்கூட்டு மற்றும் தர உயர்வு இல்லாமல் இருப்பது கஷ்டம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளது.


Ramesh Sargam
பிப் 16, 2024 06:22

விலை சரிந்தால் விவசாயிகளுக்கு பிரச்சினை. விலை கூடினால் வாங்கும் மக்களுக்கு பிரச்சினை. ஆனால் இதைவைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிக்கு மட்டும் சந்தோஷம்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை