உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சி நிர்வாகிகளால் மன உளைச்சல்; திருமாவளவன் விரக்தி வீடியோ!

கட்சி நிர்வாகிகளால் மன உளைச்சல்; திருமாவளவன் விரக்தி வீடியோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''கட்சி நிர்வாகிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடியும் வரை கட்சி நிர்வாகிகள் யாரும் யுடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க கூடாது'' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: கட்சி கட்டுப்பாடு என்பது மிக முக்கியமானது. வளர்ச்சி அடைய, வளர்ச்சி அடைய கட்சிக்குள்ளே, முன்னணி தலைவர்கள் இடையே, முதிர்ச்சி வெளிப்பட வேண்டும். கட்டுப்பாடுகள் பிறருக்கு முன் மாதிரியாக அமைய வேண்டும். ஆனால் முன்னணி பொறுப்பாளர்கள் சமூகவலைதளங்களில் கட்சிக்கும், தலைமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவிடுவது மிகுந்த வேதனையை தருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jpr9zel9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் என்பார்களே, அப்படி பல்வேறு நெருக்கடிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் நாம், கட்சி முன்னணி தோழர்களின் அணுகுமுறைகளாலும் காயப்பட வேண்டி இருக்கிறது. வேதனைப்பட வேண்டி இருக்கிறது என்பது தான் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிற ஒன்றாகும்.

முரண்பாடுகள்

நமக்குள் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள கூடாது. பதிவு செய்ய கூடாது. கடந்த 10 ,15 ஆண்டுகளாக இதை நான் திரும்ப திரும்ப சொல்லி வருகிறேன். இயக்கத்தின் முன்னணி தோழர்கள் யுடியூப் போன்ற சேனல்களில், யாராவது பேட்டிக்கு அழைத்தால், அந்த சேனல் எத்தகைய பின்னணியை கொண்டது. அதை நடத்துகிறவர்கள் யார்? என்ன நோக்கத்திற்காக அழைக்கிறார்கள் என்று கணக்கில் கொள்ளாமல், கருத்தில் கொள்ளாமல், ஏதோ ஒரு வாய்ப்பு தருகிறார்கள் என்கிற அடிப்படையில் பங்கேற்பது கவலைக்குரியது ஆகும். பேட்டிக்கு அழைத்தால் கட்சி தலைமையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டும்.

பேட்டி கொடுக்காதீங்க!

பழனிசாமி அமித்ஷாவை சந்தித்தது அகில இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போதே தேர்தலுக்கான சூடு பிடித்துவிட்டது. மனம் போன போக்கில் கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும். கட்சியின் தலைவர்கள் என்ற முறையில் இதை சொல்ல வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. சட்டசபை தேர்தல் முடியும் வரை கட்சி நிர்வாகிகள் யாரும் யுடியூப் சேனலுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ராமகிருஷ்ணன்
மார் 31, 2025 03:23

இனிமேலும் திமுகவினயை நம்பி பிரோசனம் இல்லை தோல்வி உறுதி ஆகிவிட்டது, ஜெயிக்கிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து பொழைக்கிற வழியை பாருங்கள். அசுர பலத்துடன் கூட்டணி அமைத்து திமுகவை வாஷ்அவுட் செய்து விடுவார்கள். மத்தியில் பி ஜே பி யின் காலில் விழுந்து உனக்கு வேண்டிய சீட்களை வாங்கி கொண்டு திமுகவுக்கு எதிராக கூவ ஆரம்பித்து விடு இதெல்லாம் உனக்கு பழகியது தானே. வெக்கம் மானம் ஈனம் சூடு சொரணை எல்லாம் பார்த்தால் பொழைக்க முடியாது


sridhar
மார் 30, 2025 19:45

உன்னால் தமிழகத்துக்கே மன உளைச்சல் .


rama adhavan
மார் 30, 2025 19:26

உன் வழி தான் உன் தொண்டனும். திமுக முட்டு இல்லையென்றால் நீ செல்லாகாசு. உனக்கு தொண்டன் என சொல்ல யாரும் இருக்க மாட்டான்.


SIVA
மார் 30, 2025 18:37

அடங்க மறு , அத்து மீறு , திமிறி ஏழு , திருப்பி அடி என்று சொன்னதுல்லாம் பொய்யா கோபால் , இத நம்பி இவர் பேசும்போது சில்லறை எல்லாம் சிதற விட்டாங்க , தேர்தல் பாதை திருடர் பாதை என்று சொன்னார் , அப்ப புரியல இப்ப அப்பா கூட கூட்டணில இருக்கும் போது தான் புரியுது ....


sankaranarayanan
மார் 30, 2025 17:35

கட்சி நிர்வாகிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன் என்று கூறிக் கொண்டே இவரும் மீசையை முறுக்கிக்கொண்டு அரசியலில் வலம் வருகிறார் இவருக்கு தொண்டர்கள் தேடவேண்டும் அப்பப்போ அரசியல் கட்சிகளிடமிருந்து ஒரு பெரிய பெட்டி வரும். மேடை மீது ஏறி பேசுவார் பிறகு காணாமல் போயிடுவார். திடிரென்று மீசையை முறுக்கிக்கொண்டு அரசியல் தலைவர்களுக்கு துண்டு போற்றிவிடுவார் இவரது உயிர் நண்பர்கள் இவரை விட்டு பிரிந்து செல்வதே வழக்கம் ஐயோ பாவம்


raghavan
மார் 30, 2025 17:11

பிளாஸ்டிக் சேரைத் தவிர வேறு எதற்கும் ஆசைப்படக் கூடாது.


theruvasagan
மார் 30, 2025 15:50

நீங்க வெளியில போய் எக்கு தப்பா பேசினா எனக்கு அந்த ஒடஞ்சு போன பிளாஸ்டிக் சேர் கூட கெடைக்காது. நான் ஏதோ உள்ளுக்குள்ள உதறல் இருந்தாலும் வெளிய அது தெரியாம இருக்க வடிவேலு மாதிரி வெறப்பா பேசிகிட்டு திரியறேனே். அத்தையும் கெடுத்துராதீங்க அப்ரன்டிசுகளா.


பேசும் தமிழன்
மார் 30, 2025 15:34

எதையாவது உளறி கொட்டி.... ஆட்டத்தை கலைத்து..... நடு தெருவில் நிறுத்தி விடாதீர்கள்.....வேண்டுமானால் உங்கள் கால்களில் வேண்டுமானலும் விழுகிறேன்..... தரை லெவலுக்கு இறங்கி விட்டான்யா !!!


Murthy
மார் 30, 2025 15:31

தேர்தலுக்கு பிறகு ??.....இதற்க்கு எதற்கு கட்சி ??...பேசாமல் திமுக தலித் அணியாக போய்விடலாம்....


SIVA
மார் 30, 2025 18:28

அப்புறம் அதிவேய் பழகி போய் விடும் , வாயை மூடிக்கிட்டு சும்மா இருங்கடா APPRESNDIGALA என்று மட்டும் தான் சொல்ல வில்லை


Rajarajan
மார் 30, 2025 15:27

வேணா, வலிக்குது, விட்டுரு, அழுதிருவேன்.


புதிய வீடியோ