உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அர்ஜுன் சம்பத் மகனிடம் விசாரிக்க அனுமதி

அர்ஜுன் சம்பத் மகனிடம் விசாரிக்க அனுமதி

கோவை:கோவை ஈஷா யோகா மையம் குறித்து, 'நக்கீரன்' இதழில் அவதுாறு பரப்பி வருவதாக கூறி, அதன் ஆசிரியர் கோபாலை கண்டித்து, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய, அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி, கொலை மிரட்டல் விடுத்து பேசியதாக கூறப்படுகிறது.புகாரின்படி, ரேஸ்கோர்ஸ் போலீசார், ஓம்கார் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி கோவை ஜே.எம்., 3, கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், ஒரு நாள் மட்டும், போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து, மாஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை