உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொடைக்கானலில் இதமான சீதோஷ்ண நிலை

கொடைக்கானலில் இதமான சீதோஷ்ண நிலை

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இதமான சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.கொடைக்கானலில் கடந்த வாரம் அடர் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. வார விடுமுறைக்கு வந்த சுற்றுலா பயணிகள் நேற்று காலையில் பளிச்சிட்ட வெயில், காற்றில் ஈரப்பதம் உள்ளிட்ட இதமான சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர். இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக் , வெள்ளி நீர்வீழ்ச்சி, வன சுற்றுலா தலங்கள் மன்னவனுார் சூழல் சுற்றுலா மையத்தை பார்வையிட்டனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரியும், ஏரியில் நீருற்றின் பின்னணியில் உருவான வண்ணமிகு வானவில் போன்ற நிறத்தை ரசித்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை