| ADDED : மார் 04, 2025 02:33 PM
திருச்சி: உடல் நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கவிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான திருச்சி நந்தலாலா இன்று (மார்ச் 04) காலமானார்.இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவராக இருந்துள்ளது. இவரது மறைவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநிலக்குழு அறிவித்துள்ளது. இவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர், கள்ளழகர் படத்தில் ஓ மாணாளே, சின்ன வயசுல, ஜெயம், உள்ளிட்ட படத்தில் பாடல்களை எழுதி உள்ளார்.