உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு

நீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சீமான் பேட்டி அளித்து இருந்தார். அப்போது அவர்நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், புகார் மீது வழக்குப்பதிய உத்தரவிடக் கோரி எழும்பூர் கோர்ட்டில் சார்லஸ் அலெக்சாண்டர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், புகார் மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.இந்நிலையில் இன்று நீதிமன்ற உத்தரவை அடுத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Kasimani Baskaran
அக் 19, 2025 14:04

தீம்க்கா அமைப்புச்செயலர் பேசிய பேச்சுக்கெல்லாம் சிறையில் தூக்கி வைத்து இருக்கவேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு மீதமிருந்த நொங்கை சாப்பிட்டவன் மீது வழக்குப்போடுவது தவறு.


GMM
அக் 19, 2025 13:10

நீதிமன்றம் தமிழக நிர்வாக எல்லையில் வராது? அது தனி அமைப்பு. தமிழக போலீஸ் வழக்கு பதிவு எப்படி? ஆனால் சீமான் மீது தேர்தல் ஆணையம் மூலம் புகார் தரலாம். இதில் பிரதிவாதி எந்த நீதிபதி? மத்திய அரசு தான் வழக்கு பதிவு செய்ய முடியும். கவர்னர், ஜனாதிபதி கால கெடு போல் உள்ளது. கால கெடுவில் ஒப்புதல் தராவிட்டால், நடவடிக்கை எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. உச்ச நீதிமன்ற கால நிர்ணயம், விசாரணை, தீர்வு தள்ளி வைப்பு அத்தனையும் சட்ட விரோதம்.


V Venkatachalam
அக் 19, 2025 12:40

விஜய்க்கு அடுத்தது டாப்பில் இருப்பது சைமன்தான்.‌விஜய்யை இப்போதைக்கு ஒரு வழியாக முடக்கிட்டோம். இவனையும் அது மாதிரி எலக்ஷன் வரை முடக்கிட்டா, இப்போதைக்கு பெரிய எதிரி யாருமில்லே. ஏலக்ஷனை ஈஸியா எதிர் கொள்ளலாம். வழக்கு போடுறது யாரு? எப்புடி எங்க ஐடியா?


திகழ்ஓவியன்
அக் 19, 2025 13:33

உங்கள் லெவலுக்கு விஜய்க்கு அடுத்தது டாப்பில் இருப்பது சைமன்தான் அனால் உங்களை எல்லாம் விஜய லிஸ்ட் இல் சேர்க்கவே இல்லை போட்டி DMK உடன் மட்டுமே ஆகவே நீங்கள் இருப்பதே வாஸ்டெட் என்று சொல்லி லிட்டர்


Modisha
அக் 19, 2025 12:34

ஒவ்வொரு நீதிமன்றத்திலும் ஒவ்வொரு தீர்ப்பு, ஒவ்வொரு நீதிபதிக்கும் ஒரு தீர்ப்பு.


duruvasar
அக் 19, 2025 12:19

நாடகமே உலகம்


senthilanandsankaran
அக் 19, 2025 12:00

அலேக்சாணடர் தி great..


Gnana Subramani
அக் 19, 2025 11:56

ஹெச் ராஜா பேசியதை விடவா அதிகம் பேசி விட்டார்


N Sasikumar Yadhav
அக் 19, 2025 12:19

நீதிபதிகளை திமுக நிர்வாகி ஆர்எஸ் பாரதியைவிட மிக மிக கேவலமாக யாரும் விமர்சிக்கவில்லை. அதற்கு வராத கோபம் சீமான் போன்ற தற்குறிகள் பேசுவதற்கு கோபம் வருகிறதென்றால் அப்ப திமுக நிர்வாகி ஆர்எஸ் பாரதி சொன்னது உண்மைதான் போலிருக்கிறது


vadivelu
அக் 19, 2025 12:34

இருக்கும், அது அவர் என்ன சொன்னார்?


V Venkatachalam
அக் 19, 2025 13:17

எச்.ராஜா நீதி மன்றத்தை பத்தி அவதூறாக பேசினார்ன்னு எங்க இருக்கு?


raghavan
அக் 19, 2025 11:43

கைக்கூலி களுக்கு வழக்கு மட்டும், அது ஒரு கண்துடைப்புக்கு நடக்கும் நாடகம்.


Field Marshal
அக் 19, 2025 11:03

மன்னிப்பு கடிதம் கொடுத்து பழகி இருக்கார் ..


திகழ்ஓவியன்
அக் 19, 2025 12:12

பெட்டிஷன் போட்டு பென்ஷன் வாங்கிய மாதிரியா


ديفيد رافائيل
அக் 19, 2025 10:59

தவறு கண்டுபிடிப்பது அடுத்தவர் பார்க்கும் பார்வை அல்லது கேட்பதை பொறுத்து தான் அமையும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை