உதயநிதி வருகைக்கு கோவை காத்திருப்பு; மேடைக்கு தொடரும் போலீஸ் பாதுகாப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கோவை:கோவையில், மார்ச் 23ல் நடத்த திட்டமிட்டிருந்த அரசு விழாக்கள், தமிழக துணை முதல்வர் உதயநிதி வருகை திடீரென ரத்தானதால், ஒத்திவைக்கப்பட்டது. அவரது வருகைக்காக, அதிகாரிகள் காத்திருப்பதோடு, விழா மேடைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, கடந்த மாதம் 23ம் தேதி துணை முதல்வர் உதயநிதி வருவதாக இருந்தது. ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டிருந்தன. ஆர்.எஸ்.புரம் பள்ளி மைதானத்தில் விழா மேடை, பந்தல் அமைக்கப்பட்டது. பள்ளி நுழைவாயில் அலங்கரிக்கப்பட்டது. சாலைகள் சீரமைக்கப்பட்டன.