வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சகாயம் கமிட்டீ அறிக்கை என்ன? அதன் பயன் என்ன? யார் மாட்டினார்கள்? யார் தப்பித்தார்கள்? இளம் நிருபர்கள் இது பற்றி ஆராய வேண்டும்.
தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரியில் கனிமவள கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர்களை பிடித்த போலீஸ்காரர் பிரபாகரனுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டது. பறிமுதல் வாகனங்களை கடத்தல்காரர்களிடமே அதிகாரிகள் ஒப்படைத்ததால் பணியிலிருந்து ராஜினாமா செய்து கடிதத்தை டி.ஜி.பி.,க்கு அனுப்பினார் பிரபாகரன்.தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் ஸ்டேஷனில் முதல் நிலை காவலராக பணிபுரிபவர் பிரபாகரன் 32. இவர் 2013 ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். மூன்று மாதங்களாக சிவகிரி ஸ்டேஷனில் பணிபுரிந்தார்.டிச., 18ல் அவர் பணியில் இருந்த போது ஒரு டிராக்டரில் ஒரு யூனிட் எம் சாண்ட் மணலை சுரங்கத்துறையினர் பாஸ் இல்லாமல் கொண்டு சென்றனர். ஒரு கம்ப்யூட்டர் பில் மட்டுமே வைத்திருந்தனர். சிவகிரி நீதிமன்றம் அருகே அந்த டிராக்டரை அவர் பறிமுதல் செய்து போலீஸ்ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.பிறகு ஜல்லிகற்களை ஏற்றிய ஒரு டிராக்டர், மணல் ஏற்றிய இரண்டு மாட்டு வண்டிகளையும் அவர் பிடித்து ஸ்டேஷனில் ஒப்படைத்தார். வாகனங்களை பறிமுதல் செய்ய முயன்ற போது வாகன உரிமையாளர்கள் பிரபாகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு பிரபாகரன் தகவல் கொடுத்தார். இதற்கிடையில் பறிமுதல் வாகனங்களை மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடமே போலீசார் ஒப்படைத்தனர்.சுரங்கத்துறையினர் பாஸ் போலியாக தயாரித்துள்ளதாகவும் பிரபாகரன் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. மனமுடைந்த பிரபாகரன் டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: முறையான அனுமதியின்றி கனிம வளம் கொண்டு சென்ற வாகனங்களை நிறுத்திய போது பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். வாகனங்களையும் கைப்பற்றி அபகரித்து கொண்டு சென்றனர்.மேலும் ஒரு நபர் இப்போது தான் ஸ்டேஷனிலிருந்து ஒரு வாகனத்தை எடுத்துட்டு வந்தேன். திரும்பவும் எங்கள் ஏரியா வாகனத்தை பிடித்தால் வேறமாதிரி ஆயிடும் என தொடர் கொலை மிரட்டல் விடுத்தார்.இதனால் பணிபுரிய அச்சமாக உள்ளது. காவலர்களின் உயிருக்கு எந்த பாதுகாப்பும் இன்றி மணல் கடத்தும் மாபியாக்களின் பிடியில் உள்ளதுடன் கடத்தலுக்கு உடந்தையாக நிற்கும் உயரதிகாரிகளை கண்டு அச்சமாக உள்ளது.எஸ்.ஐ., வரதராஜன் பறிமுதல் செய்த கஞ்சா வாகனத்தை நீதிமன்றத்தில் காட்டாமல் உடனே கொடுக்க சொல்லி கஞ்சா குற்றவாளிகள் மிரட்டினர். நான்காண்டுகளில் 300க்கும் மேற்பட்ட போலீசார் தற்கொலை செய்துள்ளனர். 1400 போலீசார் விபத்து மற்றும் நெஞ்சு வலியால் மரணமடைந்தனர். 12 ஆண்டுகளில் 4125 போலீசார் சஸ்பெண்ட், 344 போலீசார் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.அரசுக்கு விரோதமாக செயல்பட்டு ரூ.பல கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் மணல் மாபியாக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஆதாரங்களை இணைத்துள்ளேன்.என்மீது தாக்குதல் நடந்தால் மணல் மாஃபியாக்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தான் காரணம் என கூறியுள்ளார்.
சகாயம் கமிட்டீ அறிக்கை என்ன? அதன் பயன் என்ன? யார் மாட்டினார்கள்? யார் தப்பித்தார்கள்? இளம் நிருபர்கள் இது பற்றி ஆராய வேண்டும்.