உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சதியால் சிக்கிய பேராசிரியர் போக்சோ வழக்கில் விடுதலை

சதியால் சிக்கிய பேராசிரியர் போக்சோ வழக்கில் விடுதலை

மூணாறு: தேர்வெழுதிய மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பேராசிரியருக்கு எதிராக சதி செய்தது கண்டறியப்பட்டு, அவரை கோர்ட் விடுவித்தது. கேரள மாநிலம், மூணாறு, சொக்கநாடு எஸ்டேட், சவுத் டிவிஷனை சேர்ந்தவர் ஆனந்த் விஸ்வநாதன். மூணாறு அரசு கல்லுாரி பொருளாதார துறை தலைவராக இருந்தார். கல்லுாரியில், 2014 ஆக., முதல் செப்., 5 வரை எம்.ஏ., பொருளாதாரம், இரண்டாம் செமஸ்டர் தேர்வு நடந்தது. அப்போது தேர்வு எழுதிய ஐந்து மாணவியரை, ஆனந்த் விஸ்வநாதன் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கல்வித்துறை அமைச்சர், மகளிர் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. மூணாறு போலீசார் விசாரித்து, ஆனந்த்விஸ்வநாதன் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தேவிகுளம் செஷன்ஸ் கோர்ட்டில், இரு வழக்குகளில் ஆனந்த் விஸ்வநாதனை விடுவித்த நீதிமன்றம், இரண்டு வழக்குகளில், மூன்று ஆண்டுகள் தண்டனை விதித்தது. ஆனந்த் விஸ்வநாதன் பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். தேவிகுளம் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆனந்த் விஸ்வநாதன், தொடுபுழா கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மாணவியர் புகார் குறித்து பல்கலை விசாரணை ஆணையம் நடத்திய விசாரணையில், மா.கம்யூ., கட்சியின் மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவியர், தேர்வில் காப்பி அடித்ததை பேராசிரியர் கண்டுபிடித்ததால், அவர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டதும், அதற்கான ஆலோசனை மூணாறில் மா.கம்யூ., அலுவலகத்தில் நடந்ததும் தெரிந்தது. வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் கோர்ட், அரசியல் சதி மூலம் தொடரப்பட்ட வழக்கு என, போலீசாருக்கு எதிராக கடுமையாக விமர்சித்ததுடன், ஆனந்த்விஸ்வநாதனை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 03, 2025 14:20

பொய் சொன்ன மாணவிகளுக்கு தண்டனை இல்லையா


Rangarajan Cv
செப் 03, 2025 13:53

Unfortunately when case was filed with malfide intentions, still why court is not pronouncing strong action on them? Similar harassment was meted out to isro leader Shri Nambi Narayanan (NN), by Kerala Police. After so many years of stuggle , NN proved he is not guilty, but by then his life has been ruined.


Kanns
செப் 03, 2025 13:36

Hang All FalseCase/ BiasedNews/Vote/ Power Hungry Dreaded Criminals With Heavy Compensatn from them to False-Accused. This Includes SaidStudents CommunistRulingParty Govts Police LowCourt Judges Media Women Commission Etc. No Mercy


Ram
செப் 03, 2025 13:17

தவறாக வழக்கு பதிந்த போலீசாரை பணிநீக்கம் செய்யவேண்டும்


Sun
செப் 03, 2025 09:58

நல்ல நீதிபதி மன்ற அமர்வு என்பதால் பேராசிரியர் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார். முந்தைய தேவிகுளம் நீதிமன்றம் போல் விசாரணை செய்திருந்தால் காலமெல்லாம் செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவித்திருக்க வேண்டும். அவரது குடும்பத்தினரும் இந்த சமுதாயம் முன்பு குறுகி நின்றிருப்பார்கள்.


ஜேம்ஸ்
செப் 03, 2025 09:56

மணம் தளராது வழக்கு நடத்தி வெற்றி பெற்ற பேராசிரியர் அவர்களுக்கு பாராட்டுகள். பொய் குற்றசாட்டு கூறிய அனைவருக்கும் தக்க தண்டனை விதிக்கப்படவேண்டும். மேலும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்


GMM
செப் 03, 2025 08:52

கல்வித்துறை அமைச்சர் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடை. ஓட்டுரிமை நீக்கம். நான்கு பொய் வழக்குகள் பதிவு செய்து கைது செய்த போலீஸ் டிஸ்மிஸ். மகளிர் ஆணைய தலைவி பதவி நீக்கம். பொய் புகார் கொடுத்த மாணவியர் சான்று முடக்கம். எந்த தனியார், அரசு பணி வாழ்நாள் முழுவதும் சேர முடியாத தடை. வெளிநாடு செல்ல தடை. பாதிக்க பட்ட ஆசிரியருக்கு நிவாரணம். தேர்தல் ஆணையம் கட்சியை தடை செய்ய வேண்டும். மந்திரிசபை மன்னிப்பு கேட்டு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது போன்ற குற்றம் விசாரித்து தடுக்க, தண்டனை வழங்க தான் நீதிமன்றம்.


Dandanakka
செப் 03, 2025 08:35

இது தான் மெத்த படித்த கேரளம் நிலை. வாழ்க கேரளம். வாழ்க Commis


VENKATASUBRAMANIAN
செப் 03, 2025 08:02

அவர் மீது அவதூறு கூறியவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள். அப்போதுதான் அடுத்தவர்களுக்கு பொய் புகார் கொடுக்க பயம் வரும்.


நிக்கோல்தாம்சன்
செப் 03, 2025 06:58

அந்த பெண்களின் பெயரையும், அவர்களின் படத்தையும் வெளியிட்டிருந்தன இன்று சமத்துவம் பேசும் நடுநிலை இந்துக்களுக்கு ஒரு உண்மை புரிந்திருக்கும், இது போன்றதொரு சம்பவம் சமீபத்தில் கருநாடக அரசு கல்லாரியில் நடந்தது, மர்ம நபர்கள் அவர்கள் சார்ந்த மதத்தின் உடையை போட்டுகொண்டு வந்து தேர்வு எழுதியுள்ளனர், பெண்கள் கல்லூரியில் பெண் பேராசிரியர்கள் மத்தியிலும் இப்படி என்று யோசித்த ஒரு தமிழரான பேராசிரிய பெண்மணி ஒரே ஒரு பெண் வித்தியாசம் காட்டி எழுதிக்கொண்டிருந்ததை கண்டுபிடித்ததால் கூர்ந்து கவனித்துள்ளார், அப்போது தான் உடம்பெல்லாம் பிட்டு பேப்பர், கண்டுபிடித்து நடவடிக்கை என்று ஆரம்பித்தாள் கூட இருந்த மற்ற மர்ம பெண்களும் போராட்டம் அது இது என்று, நடப்பதென்னவோ ... ஆட்சி. கண்டித்து விட்டு செல்லும் மனநிலைக்கு அந்த பேராசிரியர் வற்புறுத்தப்பட்டார், இது வெளியிலேயே வராமல் போன நிகழ்வு, இப்போ நீங்க அரசு அலுவலகத்தில் பல மர்ம நபர்களை பார்க்கையில் அவர்கள் எப்படி பாஸாகிரியிருப்பர் என்றும் ஒரு நினைப்பு வருமே?


முக்கிய வீடியோ