உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல்வாதிகளை கேள்வி கேளுங்கள்: அண்ணாமலை

அரசியல்வாதிகளை கேள்வி கேளுங்கள்: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: '' ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளை மக்கள் நேரடியாக கேள்வி கேட்கும்போது தான், அரசியல்வாதிகளுக்கு பொறுப்பு ஏற்படும், '' என கோவையில் நடந்த தொழிலதிபர்களுக்கு விருது வழங்கும் விழாவில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.கோவையில் தொழிலதிபர்களுக்கு விருது வழங்கும் விழாவில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் உள்ள மொத்த கல்லூரிகளில் கோவையில் மட்டும் 27 சதவீதம் உள்ளது. இந்தியாவில் சிறுகுறு தொழில் அதிகமுள்ள மாநிலம் தமிழகம். இதில் கோவையில் 2.41 லட்சம், சென்னையில் 3.40 லட்சம் சிறுகுறுதொழில்கள் உள்ளன.தமிழகத்தின் ஜிடிபி.,யில் கோவையின் பங்கு 7.5 சதவீதம் ஆகும். ஆண்டுதோறும் கோவையில் இருந்து தமிழக அரசுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வரி வருவாயாக செல்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u0dfas78&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாடு வேகமாக வளர்ச்சி பெறுகிறது. அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து வளர்கிறது. இது கோவையின் பங்கு அதிகம் உள்ளது.அரசியல்வாதிகள் வேகமாக செயல்படுகிறோமா என்பதை பார்க்க வேண்டும். நீங்கள் அழுத்தம் கொடுத்து வேலை வாங்க வேண்டும். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த 15 ஆண்டுகள் ஆகி உள்ளது. திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த 14 ஆண்டுகளும், மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த 5 ஆண்டுகள் ஆகி உள்ளது.தமிழகத்தில் ஒதுக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் 26 சதவீத நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு உள்ளது. 74 சதவீதம் நிலுவையில் உள்ளது. நெடுஞ்சாலை திட்டங்களில் 40 ல் 18 திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். கோவையில் 3 ஆண்டுகளில் 36 ஆயிரம் கோடி வரி கொடுத்துள்ள நிலையில், திரும்ப அரசு எவ்வளவு கொடுத்துள்ளது.நல்ல அரசியல் மாற்றத்திற்கான மாவட்டமாக கோவை இருக்க வேண்டும். வளர்ச்சி சார்ந்த அரசியல் இருக்க வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் கேள்வி கேளுங்கள். கேள்வி கேட்க கேட்க அரசியல்வாதிகளுக்கு பொறுப்பு ஏற்படும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 19, 2024 09:56

அண்ணாமலை கோவையை பற்றி நிறைய விஷயங்கள் பேசினார். விமான நிலையங்கள் திட்டம் நெடுஞ்சாலை திட்டம் நிலம் கையகப்படுத்தும் வேலை எவ்வளவு தாமதமாக உள்ளது என்று கூறினார். கோவையில் உள்ள தொழிற்சாலைகள் சென்னை தொழிற்சாலை பற்றி கூறினார். ஆனால் கருத்து கூறிய ஒருவரும் அதைப் பற்றி ஒரு கேள்வியும் கேட்கவில்லை. மாறாக ஒருவர் இலவசமாக பதினைந்து இலட்சம் கிடைக்கவில்லை என்று ஏக்கத்துடன் கேள்வி கேட்டு உள்ளார். ஒருவர் கைகடிகாரத்துக்கு பணம் எப்படி கொடுத்தேன்னு கேள்வி கேட்டுள்ளார். இது தான் தமிழகத்தின் நிலை. இலவசமாக எல்லாம் வேண்டும். கொடுத்த பணத்திற்கு இரசீது காட்டியும் காழ்ப்புணர்ச்சியில் ஒரு கேள்வி. இப்படியே திராவிட கட்சிகள் எவ்வளவு நாட்களுக்கு தான் மக்களை மங்கிகளாக வைத்திருக்க போகுதே தெரியவில்லை. ஏன் நிலம் எடுக்க தாமதம். ஏன் மத்திய அரசு மாநில அரசை சீக்கிரமாக நிலம் கையகப்படுத்த சொல்லவில்லை. 12000 கோடி வரி வருடத்திற்கு கோவையில் இருந்து உண்மையிலேயே மாநில அரசிற்கு செல்கிறதா 240000 குறுந்தொழில் கோவையில் இருப்பது உண்மை என்றால் ஏன் மாநில அரசு கோவையில் மாநில அரசின் வர்த்தக செயல் மையம் கோவையில் அமைத்து தொழில் மேம்பட வழிவகை செய்யவில்லை. இது போன்று யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆக்கப்பூர்வமான கேள்வி தான் பதிலுக்கு வளர்ச்சி தரும். திமுகவிற்கு எதிராக பேசினால் சங்கி என்றால் திமுகவில் உள்ளோர் எல்லாம் மங்கிகள் தானே.


பேசும் தமிழன்
டிச 19, 2024 07:58

தமிழக மக்கள் இப்போது தான் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டு இருக்கிறார்கள்.... மாடல் அமைச்சர் மீது சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்து விட்டார்கள்.....இனியும் அவர்களை ஏமாற்ற முடியாது.


அப்பாவி
டிச 19, 2024 07:43

தோ...நான் கேக்குறேன். எங்கே அந்த பாஞ்சி லட்சம்?


Bala
டிச 20, 2024 00:17

எங்க அந்த PTR சொன்ன 30 ஆயிரம் கோடி? அபேசா?


சம்பர
டிச 19, 2024 04:29

அடுத்த நாள் ரோட்டுல நடக்க வேண்டாமா


SRIRAM
டிச 18, 2024 22:45

தமிழ் நாட்டில் உள்ளவர்களு பிஜேபி மட்டும் தான் அரசியல் கட்சி... மற்றவரிடம் கேட்டால் ஜெயில் காங்பிர்ம்....


SANKAR
டிச 18, 2024 22:18

one question to you on how you paid three lakhs for a watch yet to be answered dear!


Bala
டிச 19, 2024 03:55

முதலமைச்சர் பாணியில் பதில் சொல்லவேண்டும் என்றால் " இதெற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை "


veera
டிச 19, 2024 06:41

sankar he has shown the bill. are you in coma stage till date?


K.Ramakrishnan
டிச 18, 2024 22:16

உங்களை செய்தியாளர்கள் கேள்வி கேட்டாலே, அவர்கள் மீது லஞ்ச முத்திரை குத்துகிறீர்கள்? அமைச்சர் முருகனிடம் கேள்வி கேட்டால், ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லிக் கொண்டு ஓடுகிறார். பிரதமரை சந்திக்க முடியுமா? நடப்பதை பேசுங்கள் சார். மைக் கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசாதீர்கள்.


venugopal s
டிச 18, 2024 22:15

ஒட்டுமொத்த தமிழகத்தையும் குறிப்பாக கோவையை பாரபட்சமாக நடத்தி முன்னேற்றத்துக்குத் தேவையான திட்டங்களை தராமல் ஏமாற்றுவது உங்கள் மத்திய பாஜக அரசு தான்!


SRIRAM
டிச 18, 2024 22:43

சார் 200 காங்பிர்ம்


Barakat Ali
டிச 18, 2024 21:35

விருது வாங்க உட்கார்ந்துகிட்டு இருக்குற அளவுக்கு அவங்க பிசியா இருக்காங்களா ????


ghee
டிச 18, 2024 21:34

நம்மூர் ஓநாய்கள் அழுவுது..... கதருது....


சமீபத்திய செய்தி