உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 6 வரை மழை

தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 6 வரை மழை

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல், 6ம் தேதி வரை மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வலுவடைந்துள்ளது. இதனால், நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது.இதற்கிடையே நேற்று, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 6 செ.மீ., மழை பெய்துள்ளது. கோவை மாவட்டம் சோலையார், வால்பாறை; திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் உள்ளிட்ட இடங்களில், தலா 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல், 6ம் தேதி வரை மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை