உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை ரஜினி வலியுறுத்தல்

பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை ரஜினி வலியுறுத்தல்

சென்னை: ''காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்,'' என, நடிகர் ரஜினி தெரிவித்தார்.சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:காஷ்மீரில் அமைதி நிலவுவது, சகஜ நிலை திரும்பி இருப்பது எதிரிகளுக்குப் பிடிக்கவில்லை. அதைக் கெடுக்க வேண்டும் என்று,காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்; இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை செய்தவர்களின், பின்னால் இருப்பவர்களை விரைவாகக் கண்டுபிடித்து, கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இதுபோல் மறுபடியும் செய்ய, அவர்கள் கனவிலும் எண்ணக்கூடாது. அதை மத்திய அரசு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. எவ்வளவு விரைவாக செய்ய முடியுமோ, அதை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ellar
ஏப் 26, 2025 08:14

ஐயா பேசிவிட்டார்..... அதனால் இனி தண்டனை உறுதி தான்...... அது என்ன இவருடைய பட கிளைமாக்ஸ் மாதிரி கையை இரண்டு திருப்பி திருப்பினால் போதுமே ........ ஆமாம்....எப்படி துண்டுச்சீட்டு கரெக்டா கையில் இருந்திருக்கிறது .....பயங்கர தாக்குதல் வேற இவருக்கு தெரிஞ்சி இருக்கிறது ......பிரமாதம் போங்கள்.... இனி கவலையில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை