உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக ஆட்சியில் ரூ.5 ஆயிரம் கோடி கோயில் சொத்துகள் மீட்பு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திமுக ஆட்சியில் ரூ.5 ஆயிரம் கோடி கோயில் சொத்துகள் மீட்பு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''திமுக ஆட்சியில் 1,400க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன; ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகளை மீட்டுள்ளோம்'' என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.மயிலை கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகம் முழுவதும் சுற்றினாலும், கொளத்தூர் வந்தால் எழுச்சியும், மகிழ்ச்சியும், புது எனர்ஜியும் ஏற்படுகிறது. முன்மாதிரி தொகுதியாக கொளத்தூரை மாற்றி வருகிறோம். சுயநலத்தால் சொல்வதாக நினைக்க வேண்டாம். தமிழகத்தின் 234 தொகுதிகளும் என் தொகுதிகள் தான். அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்திலேயே பார்க்கிறேன். எந்த விருப்பு, வெறுப்பும் இன்றி எதிர்க்கட்சியினரின் தொகுதிகளுக்கும் முக்கியத்துவம் தந்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். தமிழகத்தில் ஹிந்துசமய அறநிலையத்துறை சிறந்து விளங்கி வருகிறது. 3 ஆண்டு திமுக ஆட்சியில் அறநிலையத்துறையில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அறநிலையத்துறை சார்பில் செயல்படும் கல்லூரிகளில் இலவச கல்வி தரப்படுகிறது. திமுக ஆட்சியில் 1,400க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன; ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகளை மீட்டுள்ளோம்.

அறிவுத்துறை

கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் துவங்கியுள்ளோம். இறைப் பணியோடு சேர்த்து கல்விப் பணியும் செய்து வருகிறோம். அறநிலையத்துறையாக மட்டுமல்லாமல் அறிவு துறையாகவும் செயல்பட்டு வருகிறது. கல்வி தான் ஒருவரிடம் இருந்து திருட முடியாத சொத்து. அனைத்து திறமைகளையும் கொண்டவர்களாக மாணவர்கள் வரவேண்டும்; விளையாட்டு, உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

R Kay
ஆக 01, 2024 00:33

யாரிடமிருந்து என்ற விபரம் வெளியிட முடியுமா? ஆலயங்கள் அரசின் தலையீடு இல்லாமல் இருந்தால் இந்து மதம் தழைக்கும்.


பாரதி
ஜூலை 31, 2024 22:50

பரவாயில்லை 50000 கோடி மீட்டு விட்டு 5000 கோடி என்று சொல்லக்கூடிய உங்களது திறமையே திறமை... நீங்க ரொம்ப விவரம்... கொள்ளையடிப்பதில்....


கத்தரிக்காய் வியாபாரி
ஜூலை 31, 2024 21:54

தலீவரே, உங்க பையனும், மறுமவனும், மூணு மாசத்துல மூவாயிரம் கோடி சம்பாதிச்சு அம்பானியை கூப்பிட்டு விருந்து வைக்கிறாங்கன்னு கேள்விப்பட்டோம்?


ManiK
ஜூலை 31, 2024 20:08

இடிச்சது எவ்வளவு...துட்டு அடிச்சது எவ்வளவுன்னு கணக்கு சொல்லிடுங்க தலைவரே!!


Anu Sekhar
ஜூலை 31, 2024 17:49

அது சரி . எவ்வளவு ஆட்டையை போட்டிங்க. மீதி எவ்வளவு இருக்கு.


ஆரூர் ரங்
ஜூலை 31, 2024 15:33

நுங்கம்பாக்கம் கோயிலின் மனையில் ஒரு சர்ச் கட்டி இருப்பதாக அறநிலைத்துறை பொறுப்பு உள்ளவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த தேவாலயத்தை காலி செய்ய வைக்க முயன்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனராம். இதுவே ஒரு திமுக கவுன்சிலரின் இடத்தை யாராவது ஆக்கிரமித்திருந்தால் இதே பதிலைத்தான் கூறுவார்களா?


ஆரூர் ரங்
ஜூலை 31, 2024 15:31

கொஞ்ச காலமாக ( கோவிட் ஊரடங்கு, பொருளாதார பிரச்சினைகள் காரணமாக) குத்தகை கொடுக்காமலிருந்த இடங்களைப் பிடுங்கி வேண்டப்பட்ட ஆட்களுக்கு குத்தகைக்கு விட்டிருக்கலாம். அது ஒரு சாதனையல்ல. பல்லாயிரம் ஏக்கர் நிலங்களின் ஆவணங்கள் அறநிலையத் துறையிடம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் எங்கிருக்கின்றன என்பது அறநிலையத்துறைக்கே தெரியவில்லை. காணாமல் போனது கோயில்கள் மட்டுமா அல்லது அவற்றின் சொத்துக்களுமா?


ஆரூர் ரங்
ஜூலை 31, 2024 14:57

இதுக்கும் அணில் தான் வாங்கிய லஞ்சப்பணத்தை தானே திருப்பிக் கொடுத்ததற்கும் ஒற்றுமை இருக்கிறது.


Sridhar
ஜூலை 31, 2024 14:37

தமிழக மக்கள் உண்மையாலுமே அவ்வளவு முட்டாள்களா? ஒன்னும் புரியல போங்க


vikram
ஜூலை 31, 2024 14:11

சரி அதெல்லாம் இருக்கட்டும் அந்த 5000 கோடி எங்கே


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை