உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு

பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு

கூடலுார் : முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1467 கன அடியாக குறைக்கப்பட்டது.முல்லைப் பெரியாறு அணையில் சில நாட்களாக நீர்வரத்து குறைந்து நீர்மட்டமும் குறைந்து வந்தது. இதனால் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதால் நீர்திறப்பை குறைக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழகப் பகுதிக்கு குடிநீர், முதல் போக சாகுபடிக்காக திறக்கப்பட்டிருந்த 1511 கன அடி நீர் நேற்று காலை 6:00 மணியிலிருந்து 1467 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 596 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 3812 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் 125.90 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). கடந்த இரண்டு நாட்களாக நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பெய்த போதிலும் தொடர்ந்து மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை