உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிராம நத்தம் நிலங்களில் வசிப்போர் பட்டா கேட்டால் மறுக்க முடியாது: ஐகோர்ட்

கிராம நத்தம் நிலங்களில் வசிப்போர் பட்டா கேட்டால் மறுக்க முடியாது: ஐகோர்ட்

சென்னை : 'கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்ட, அரசு புறம்போக்கு நிலங்களை அனுபவிக்கும் நபர்களுக்கு, உச்ச வரம்புகளை காரணம் காட்டி, நிலங்களுக்கு பட்டா வழங்க மறுக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, மருதமுத்து, ராஜேந்திரன், சுப்பிரமணியன் கிராம நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வசிக்கும் தங்களுக்கு பட்டா வழங்க கோரி விண்ணப்பித்தனர்.3 சென்ட்டுக்கு மேல் உள்ள நிலத்துக்கு, பட்டா வழங்க முடியாது என தாசில்தார் விண்ணப்பங்களை நிராகரித்தார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: 'கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்ட, அரசு புறம்போக்கு நிலங்களுக்கு 1905 ஆண்டு நில ஆக்கிரமிப்பு சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. எனவே யாரும் அந்த நிலத்தை ஆக்கிரமித்து உரிமை கொண்டாட முடியாது' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், சட்டத்தின் கீழ், அரசின் அதிகாரம் என்பது, நில வருவாய் நிலுவைத் தொகையை வசூலிப்பதை தவிர, அதற்கு மேல் எதுவும் இல்லை என, கடந்த 1903ம் ஆண்டில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய முழுமையான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.நிலம் கிராம நத்தமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தினாலோ அல்லது உச்சவரம்புகளை மேற்கோள் காட்டியோ, பட்டா கோரும் நபர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டியதில்லை.தனி நபர்கள் பட்டா கோரும் போது, அதில் குடியிருக்கின்றனரா அல்லது காலி நிலமா என்பதை மட்டுமே பரிசீலிக்க வேண்டும். கிராம நத்தம் நிலத்தில் யாரும் குடியிருக்காவிட்டால், அந்த நிலம் அரசுக்கு சொந்தம். ஆக்கிரமிப்புகள் இருந்தால் அரசு அகற்றலாம். இது தொடர்பாக, நில நிர்வாக ஆணையர், நான்கு வாரங்களில் சுற்றறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Manoharan
மார் 27, 2025 19:59

கிராம நத்தம் நிலம் என்பது பட்டா நிலத்தை ஒட்டி அமைந்துள்ள நிலத்தை சுய லாப அரசு ஊழியர்கள் தன் பதவி துஷ் பிரயோகம் செய்து மூன்றாம் நபர்கள் வீடு கட்டிக்கொள்ள அனுமதி அளித்து வீட்டு மனைகளும் சூறையாடல்


Sesh
மார் 27, 2025 08:21

1903 சட்ட ஆணை இப்போதும் சரியா ?


GMM
மார் 27, 2025 07:33

கிரயம் இல்லாத எந்த நிலத்திற்கும் பட்டா வழங்க யாருக்கும் அதிகாரம் இல்லை. வசிக்கலாம். உரிமை கொண்டாட முடியாது.


Ramesh Sargam
மார் 27, 2025 08:42

ஆனால் அரசியல்வாதிகள் ஆட்டை போட்டால் அது பரவாயில்லையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை