உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கைது

கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வரதராஜன் என்பவரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்புபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அவர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து வருகின்றனர். அவர்களில் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் மாரிதாஸ் ஆகியோர் முக்கியமானவர்கள். பெலிக்ஸ் ஜெரால்டை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்துவிட்டார். மாரிதாசை விசாரணைக்கு பிறகு விடுவித்த போலீசார், தேவைப்படும் போது மீண்டும் ஆஜராகும்படி கூறியிருந்தனர்.இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார், இச்சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவு பிறப்பித்தார். விசாரணையின் போது தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை பண்பு இல்லை'என கருத்து தெரிவித்து இருந்தார்.நீதிபதியின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் சிலர் ஆதரவாகவும், சிலர் அவதூறு பரப்பும் வகையிலும் கருத்து தெரிவித்தனர். இந்த விமர்சனங்களை புன்னகையுடன் புறந்தள்ள வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார். அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக நான்கு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், நீதிபதி குறித்து விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜன் என்பவரை சென்னை தெற்கு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இவர் நேதாஜி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

சாமானியன்
அக் 08, 2025 08:39

திமுக எதிர்ப்பு ஊடகவியளார்களிடயே ஒருமித்த கருத்து இல்லை. அண்ணாமலை மாதிரி வளர்ந்து வரும் தலைவர்களையும் மாற்றினால் எப்படி பாஜகவிற்கு எப்படி ஓட் கிடைக்கும் ? பிரந்திய கட்சியின் வளர்ச்சிக்கு தலைவனை மாற்றாமல் இருப்பதே சிறந்நது. என்ன கிருக்குத்தனமான அரசியலோ ?


தமிழ்வேள்
அக் 07, 2025 20:48

போதைப்பொருள் புழக்கம் விற்பனை கடத்தல் தொடர்பாக வெளிநாடுகளில் பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் திராவிட ஆசாமிகள் ஜாப்பர் ஆட்டு புரூஸ் பெத்து நாயகர் மீது இன்டர்போல் நடவடிக்கைகள் எடுப்பது எப்போது?


ஈசன்
அக் 07, 2025 19:59

திரு. வரதராஜன் அவர்கள் திமுக அரசியல்வாதிகள் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். அவற்றை எல்லாம் கண்மூடித்தனமாக நம்பி வந்தேன். ஆனால், அண்ணாமலை மீது இவருக்கு இருந்த வெறுப்பு காரணமாக அவர் மீதும் புழுதி வாரி இறைத்தார். அண்ணாமலை ஆதரவாளர்கள் இவர் நடத்தும் யூட்யூப் சேனலில் இவரை திட்டி தீர்த்தனர். அதனால் அவர்கள் மீதே வழக்கு தொடருவேன் என்றும் மிரட்டினர். எனவே திமுக மந்திரிகள் மீது இவர் சுமத்திய குற்றம் அனைத்தின் மீதும் சந்தேகம் எழுகிறது.


Kasimani Baskaran
அக் 07, 2025 19:29

தீம்க்கா ஆட்சியில் ஊடக சுதந்திரம் படு மோசமாக நசுக்கப்படுகிறது.


தலைவன்
அக் 08, 2025 10:58

அதை சொல்ற தகுதி உங்களுக்கு இருக்குதான்னு?? சீர் தூக்கி பாருங்கள்?? உதிர்ப்பிரதேசத்தில மட்டும் எத்துணை பத்திரிக்கை காரங்களை காவல்ல வச்சிருக்கீங்க?? இப்போ சொல்லு?? ஊடக சுதந்திரம்னா என்னா?


நிக்கோல்தாம்சன்
அக் 07, 2025 19:25

செந்தில்குமார் தனது பதவியை துறந்து விட்டு திமுகவில் ஐக்கியமாகிவிடலாம்


SRINIVASAN S
அக் 07, 2025 19:23

அவர் சொன்ன தகவல் பொதுவானவை. பொறுத்துக் கொள்ளும் மனோபாவம் அரசுக்கு வேண்டும்


திகழ்ஓவியன்
அக் 07, 2025 19:11

சந்தோசமா இருக்கு கொஞ்சமாவா பேசுவார். இவர் என்னவோ யோக்கியர் போல பீலா விடுவார்...


V Venkatachalam
அக் 07, 2025 20:18

பீலா விடுவதில் சாராய யாவாரிய மிஞ்ச யாருமே இல்லை. பல்லவி அனுபல்லவி மாதிரி திராவிட மூடல் ஆட்சின்னு வேற பீலாவுக்கு மேல இன்னொரு பீலா உடுவாரு. விஞ்ஞான ஊழல் அகராதியில் இடம் பிடித்தது போல் இந்த பீலா என்ற சொல்லும் அகராதியில் இடம் புடிக்கும். பீலா பீலா நீ இல்லாத இடமே இல்லை. பீலா பீலா.


Mohamed Ali
அக் 07, 2025 18:45

I have a doubt whether he retired as regular police officer or finger print personnel retired.


Modisha
அக் 07, 2025 18:45

இம் என்றால் சிறைவாசம் , ஏன் என்றால் வனவாசம் - யாரோ என்றோ சொன்னது .


Sitaraman Munisamy
அக் 07, 2025 18:27

நீதிபதி அவர்களே விமர்சனங்களை புறம் தள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். எனவே அரசு விமர்சனம் செய்பவர்களை கைது செய்யக் கூடாது . அதேபோல நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் அதுவே நல்ல ஆட்சிக்கு துணை போகும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை