உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம்: கவர்னர் ரவி வருத்தம்

ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம்: கவர்னர் ரவி வருத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருத்தம் தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக் கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில் சுற்றிலும் ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில், படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில் விலையுயர்ந்த கான்கிரீட் கட்டுமானம் ஒரு நினைவுச்சின்னமாக அமைந்திருப்பது முரணானது. தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம். இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Indian
ஜன 29, 2024 18:13

இவர் உத்திரப்பிரதேசம், பிஹார் எல்லாம் போகாமல் தமிழ் நாட்டுக்கு வந்து இருக்கிறார் தமிழ் நாடும் இந்தியாவில் தான் இருக்கிறது அமெரிக்காவில் இல்லை என்று அவருக்கு தெரியாதா


அசோகன்
ஜன 29, 2024 17:05

கள்ளசாராயம் குடித்து செத்தால் 10 லட்சம் பணம் அரசுவேலை....... கொலை மற்றும் கொள்ளை அடித்தால் அங்கே கருணாநிதி சிலை வைப்போம்.......இதுதாண்ட திராவிடியா மாடல்..........ஆளுநர் ஆளுநர் உங்களுக்கு ஒன்னும் தெரியாது அப்படி ஓரமா போய் உட்காருங்க


DVRR
ஜன 29, 2024 16:22

ஐயோ இந்த வார்த்தையை கேட்ட திமுக மடியில் அரசு என்ன சொல்லும் தெரியுமா ???ஆளுநர் தனக்கு கொடுத்த அதிகாரத்தை வரம்பை மீறி மிஞ்சி பேசுகின்றார் என்று சொல்லும். வேறே என்ன தெரியும் இந்த மடியல் அரசுக்கு


அப்புசாமி
ஜன 29, 2024 15:23

அங்கே வடக்ல அள்ளிக்.குடுத்தாலும் அவன் பஞ்சம்.பொழைக்க ரயிலேறி இங்கே வர்ரான். இதுலே அமைச்சர் அதிகம் அள்ளிக் குடுத்துட்டாராம். கெவுனர் வருந்திட்டாராம்.


Priyan Vadanad
ஜன 29, 2024 16:26

இதுக்கு நீங்க ஏன் கருத்து போடுறீங்க? அண்ணாமலைதான் கருத்து போடணும். தமிழ்நாடு பாஜக தலைமைக்கு கவர்னர் போட்டி போடுவது அவருக்கு தெரியாதா?


Godyes
ஜன 29, 2024 11:48

மத்தியில் குடுக்கறத தின்னு ஏப்பம் விட்டால் எந்த ஏழையும் முன்னுக்கு வரமாட்டான்.


RAMAKRISHNAN NATESAN
ஜன 29, 2024 11:48

திமுகவின் மனம் குளிர கவர்னரை இகழும் திருமா இதற்காக போராடிய வரலாறு உண்டா ??


சேகர்
ஜன 29, 2024 11:33

அதானே, பீகார் மாதிரி தானே வளர்ச்சி இருக்கனும்... எப்ப உங்க ஊரை கவனிக்க போறீங்க


Malarvizhi
ஜன 29, 2024 14:29

இவர் பதவியில் இருக்கும் மாநிலத்தை பற்றிதான் இவர் பேசமுடியும்.


Rajathi Rajan
ஜன 29, 2024 11:17

விலையுயர்ந்த கான்கிரீட் கட்டுமானம் ஒரு நினைவுச்சின்னமாக அமைந்திருப்பது முரணானது.... தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம்..


Sakthi Parthasarathy
ஜன 29, 2024 15:39

சிலை வைத்தா சந்தோசப்பட்டு இருப்பார்


ஆரூர் ரங்
ஜன 29, 2024 10:56

1970 வரை நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சை போன்ற டெல்டா மாவட்டங்கள் மாநிலத்திலேயே அதிக வளர்ச்சி பெற்றிருந்தன. காங்கிரஸ் திமுக உருவாக்கிய காவிரிநீர் பிரச்னைதான்???? டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக ஆக்கிவிட்டது. போதாததற்கு கம்யூனிஸ்டு ஆட்கள் விவசாயத் தொழிலாளர்களை தவறாக வழிநடத்தி வெளியேற வைத்துவிட்டனர். பாதுகாக்கப்பட்ட வேளாண்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வேறு தொழில் எதுவும் துவங்க அனுமதியில்லாமல் வேலைவாய்ப்பின்மை. இப்போது மாநிலத்திலேயே மிகவும் பிற்பட்ட மாவட்டங்கள் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம்.


S.F. Nadar
ஜன 29, 2024 10:35

எல்லா பணமும் உபி கும் ம பி கும் குடுத்து விட்டால் இங்கே கிராமம் இப்படி தான் இருக்கும்.. மொத்த தமிழகம.வறுமையால் வாடினாலும் ஆச்சர்யம் இல்லை ....வரி வருவாய் எல்லா மாநிலக்களுக்கும் நேர்மையாக பகிர்ந்து அளிக்கப்படுவதில்லை....


தமிழ்வேள்
ஜன 29, 2024 10:53

முன்னேறிய மாநிலமான உங்களுக்கு நிதி அதிகம் வேண்டும் ..அனால் சமூகத்தில் முன்னேறியவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பெயரால் அவமானம் புறக்கணிப்பு ..இது எந்த ஊர் நியாயம் ...குடிகார, திரை அடிமை தமிழனுங்களுக்கு எத்தனைதான் கொட்டிக்கொடுத்தாலும் தரித்திரம் தீராது ....திருட்டு திராவிடத்துக்கு ஓட்டுப்போடுவதை நிறுத்தும்வரை, இப்படியேதான் இருக்கும் ....தமிழகம் உருப்படாது ..


sridhar
ஜன 29, 2024 11:09

Public பைனான்ஸ் என்றால் கிலோ என்ன விலை என்று தெரியுமா.


S.F. Nadar
ஜன 29, 2024 12:41

யார் நிதி அதிகம் வேண்டும் என்று கேட்டது ? நியாயமான பகிர்வை தான் கேட்டார்கள் .. தமிழ் வேல் என பெயரை வைத்து கொண்டு தமிழனுக்கு துரோகம் நினைக்கிறியே ..உன்னை போன்றவர்கள் இருந்தாலும் நமக்கு தரித்திரம் தான்.


KavikumarRam
ஜன 29, 2024 14:39

தமிழகத்துக்கு வரவேண்டிய அனைத்து நிதிகளும் அடடவனை பிரகாரம் மத்தியில் இருந்து பைசா பாக்கி இல்லாமல் இன்றைய தேதி வரைக்கும் செட்டில் செய்யப்பட்டு விட்டது. நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் உங்கள் தமிழக எம்பிக்கள் அனைவர்க்கும் முன்னாலேயே தெளிவாக கணக்கு காட்டிவிட்டார். ஆனால் அந்த மத்திய அரசு நிதி தமிழத்தின் எந்த நிதியால் சுருட்டப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் கேட்டு சொல்லவும் மிஸ்டர் நாடார்.


Dharmavaan
ஜன 29, 2024 14:40

நியாயத்தின் அளவென்ன இந்திய மக்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்த கடமைப்பட்டவர்கள், மாநில அரசுக்கு மட்டுமே சொந்தமல்ல. அதன் பங்கை கொடு என்று சொல்ல அரசுக்கி அதிகாரமில்லை.


DVRR
ஜன 29, 2024 16:38

When a taxable transaction occurs in a state or a Union Territory with its legislature, then both CGST and SGST is collected. The CGST goes to the Central Government and the SGST goes to the State Government. Monthly GST Collection 1) Maharashtra is the state with the highest GST at₹23,598 crore. 2) Karnataka becomes second with a collection of ₹ 10,061 crore. பிரித்துக்கொடுக்கும். திராவிடம் போல இல்லாமல்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை