உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் நிலையங்களுக்கு குழுவாக வரும் திருடர்கள்; பயணியர் உஷாராக இருக்க ஆர்.பி.எப்., எச்சரிக்கை

ரயில் நிலையங்களுக்கு குழுவாக வரும் திருடர்கள்; பயணியர் உஷாராக இருக்க ஆர்.பி.எப்., எச்சரிக்கை

சென்னை : ரயில் நிலையங்களில் பயணியரை திசை திருப்பி, பொருட்களை திருடிச் செல்ல, பயணியர் போர்வையில் குழுவாக வரும் திருடர்களை பிடிக்க, ரயில்வே பாதுகாப்பு படையான, ஆர்.பி.எப்., கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. தெற்கு ரயில்வேயில், சென்னை உட்பட ஆறு கோட்டங்களில், 725 ரயில் நிலையங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருவனந்தபுரம் உட்பட, பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில், பயணியரின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ரயில் நிலையங்களுக்கு பயணியர் போல வரும் சிலர், மொபைல் போன், நகை மற்றும் பணம் திருடுவதுடன், கஞ்சா, ரேஷன் அரிசி கடத்தல் போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர்.

சோதனை

குறிப்பாக, நெரிசல் மிக்க நேரங்களில், பயணியரை திசை திருப்பி, பொருட்களை திருடிச் செல்ல இவர்கள் குழுவாக வருகின்றனர். இவர்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து நடவடிக்கை எடுக்க, ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:

முக்கிய ரயில் நிலையங்களில், கடந்த ஒரு வாரத்தில், பயணியரின் மொபைல் போன், பர்ஸ், நகைகள் திருடுபோவது, திடீரென அதிகரித்துள்ளன. இதுகுறித்து ஆய்வு நடத்தியதுடன், கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பார்வையிட்டோம். அதில், நெரிசல் மிக்க இடங்களில், சிலர் குழுவாக வந்து, பொதுமக்களிடம் பொருட்களை திருடிச் செல்வது தெரிய வந்தது. இந்த நபர்கள், கடற்கரை, வணிக வளாகங்கள், ரயில் மற்றும் பஸ் நிலையங்களில், கூட்ட நெரிசலில் திருடுகின்றனர். ஒரு இடத்தில் திருடினால், ஒரு மாத இடைவெளிக்கு பிறகே, மீண்டும் அங்கு திருட்டு சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். இதுவரை, 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பண்டிகை ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் வர உள்ளதால், பயணியர் உஷாராக இருக்க வேண்டும் என, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குழுவாக செயல்படும் திருடர்களை பிடிக்க, ரயில் நிலையங்களில் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பிடிபட்டவர்களின் புகைப்படங்களை, 'வாட்ஸாப்' குழுக்களில் பகிர்ந்து எச்சரிக்கை விடுத்தும் வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Padmasridharan
செப் 10, 2025 15:31

குழுக்களாக திருடுவது, காக்கி உடை அணிந்த காவலர்களும் அதிகார சீருடையுடன் செய்து வருகின்றனரே சாமி, சாமானிய மக்கள் இவர்களை உடனே பிடித்து தர toll free எண்ணை அறிவியுங்கள். மொபைலை பிடுங்கி அதிகார பிச்யெடுக்கிறார்கள் பலரும்


அப்பாவி
செப் 09, 2025 13:25

புடிபட்ட பத்து பேரில் நாலு பேரை போட்டுத் தள்ளினால் குற்றமும் குறையும். கூட்ட நெரிசலும் குறையும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 09, 2025 10:12

ஊராட்சி நகராட்சி மாநகராட்சி தலைவர்கள் கவுன்சிலர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் இடமும் பத்திரமாக இருக்க வேண்டும். வணிக வளாகங்கள் கட்டிக் கொண்டு இருப்பார்கள். உங்களை தேடி உங்களுடன் உங்கள் ஊருக்கே வருவார்கள். வரும் வழியில் போகும் வழியில் மகிழ்ச்சிக்காக திருடுவார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


Ramesh Sargam
செப் 09, 2025 09:47

ஒரு சில மேலை நாடுகளில் ரயில் நிலையங்கள் உள்ளே ரயிலில் பயணிப்பவர்கள் மட்டுமே பரிசோதிக்கக்கப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்திய ரயில் நிலையங்களில் எவன் வேண்டுமானாலும் உள்ளே செல்லலாம். முதலில் அது நிறுத்தப்படவேண்டும். டிக்கெட் வைத்திருக்கும் பயணியர் மட்டுமே ரயில் நிலையங்கள் உள்ளே அனுமதிக்கப்படவேண்டும். அட போன வாரம் ஒரு செய்தி படித்தேன். ஒரு பிராடு டிக்கெட் பரிசோதகர் போல உடை அணிந்து ரயில் பெட்டிக்குள்ளேயே ஏறி, பயணிகளை ஏமாற்றி இருக்கான். பிறகு சிக்கிக் கொண்டான். அந்த அளவுக்கு அலட்சியம் நம் ரயில் நிலையங்களில். கொஞ்சம் ஏமாந்தால் ரயில் ஓட்டுபவராக உடை அணிந்து என்ஜின் உள்ளே சென்று ரயிலை கடத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


V RAMASWAMY
செப் 09, 2025 09:20

எச்சரிக்கை கொடுத்தவகையில் நல்ல காரியம் செய்திருக்கிறார்கள் ஆர் பி எப் துறை. ஆனால் அவர்களும் தூங்கி வழியாமல் கடமையை செவ்வனே செய்வார்களெனில் இவைகளை கண்டிப்பாக கட்டுப்படுத்துவதுடன் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் கொடுக்கமுடியும்.


V K
செப் 09, 2025 06:50

அவங்க திருப்பவும் வரங்களாம் உங்களுடன் ஸ்டாலின் மக்கள் உஷாரா இருக்கவும்


raja
செப் 09, 2025 06:27

ஒரு குடும்பமாக திருட்டு ரயில் ஏறி வந்து பரம்பரையா தமிழகத்தை கொள்ளை அடிச்சிக் கிட்டு இருகானுவொண்ணும் சொல்லுங்கப்பா...


ஜெய்ஹிந்த்புரம்
செப் 09, 2025 05:04

பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து வருகிறார்கள் இதையும் சொல்லுங்க.


Barakat Ali
செப் 09, 2025 11:27

மேற்கு வங்கத்தில், ஜார்க்கண்டில் ஆள்வது பாஜகவா ???? என்னவொரு அறிவு அறிவாலய கொத்தடிமைகளுக்கு ????


நிக்கோல்தாம்சன்
செப் 09, 2025 04:49

எத்துணை மெரினா கடற்கரை வடைகள் காக்கப்படுமோ


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 09, 2025 07:13

மெரினா கடற்கரையில் வடைகள் அதிகமாக இருக்கின்றதா, சொல்லவேயில்லையே?


Natarajan Ramanathan
செப் 09, 2025 04:24

ரயில் நிலையங்களில் பேட்டரி வாகனங்களில் பயணியருக்கு தலா பத்துரூபாய் என்று ஸ்டிக்கர் இருக்கிறது. ஆனால் அதை மறைத்து தலா இருபது ரூபாய் வசூல் செய்கின்றனர். எல்லா ரயில் நிலையங்களிலும் இந்த அநியாயம் ரயில்வே போலீஸ் கண்முன்னாடியே நடக்கிறது.


சமீபத்திய செய்தி