| ADDED : டிச 03, 2025 06:40 AM
சென்னை: தமிழகத்தில், பத்திரப்பதிவு வாயிலாக, டிச., 1ல் ஒரே நாளில், 302.73 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தமிழகத்தில் முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்ய, அதிக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதை கருத்தில் வைத்து, சார் - பதிவாளர் அலுவலகங்களில், பத்திரங்கள் பதிவு செய்ய, நேற்று முன்தினம் கூடுதல் 'டோக்கன்'கள் வழங்க அனுமதிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகின. இதனால், முதல் முறையாக, பதிவுத்துறைக்கு, ஒரே நாளில், 302.73 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.