உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கூடாது

துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கூடாது

துாய்மை பணியாளர்கள் பிரச்னையை அம்பேத்கர் பார்வையில் தான் அணுக வேண்டும். அவர்களை பணி நிரந்தரம் செய்தால், அந்த தொழிலையே செய்யுங்கள் என கூறுவது போன்றதாகும். குப்பை அள்ளுபவனே, குப்பையை அள்ளட்டும்; சாக்கடையை சுத்தம் செய்பவனே, அதை சுத்தம் செய்யட்டும் என்ற கருத்துக்கு வலிமை சேர்ப்பதாக அமையும். இது, மரபு சார்ந்த அடிமை சிந்தனை. எனவே, அவர்களை அரசு பணியாளர்களாக்க வேண்டும்; பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளில் மாற்றுக்கருத்து உள்ளது. அந்த கோரிக்கைகளை எதிர்த்து தான் பேச வேண்டும். வெட்டியான் தொழில் செய்பவனை அரசு ஊழியராக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி? பணி நிரந்தரம் செய்யக்கூடாது; அந்த தொழிலையே ஒழிக்க வேண்டும் என்பதே மிகச்சரியான கருத்து. அரசு ஊழியராக்குங்கள், பென்சன் கொடுங்கள் என கூற முடியாது. பணி நிரந்தரம் செய்து, அரசு பணி என அறிவித்தால், அந்த அரசு பணிக்கு யார் வருவர்? பட்டியல் இனத்தவர் தான் வருவர். பரம்பரையாக அவர்களே வருவர். குப்பை அள்ளுபவனின் பிள்ளையே, குப்பை அள்ள வேண்டும் என கூற வேண்டுமா? அந்த தொழிலில் இருந்து அவர்களை மீட்பது தான் சமூக நீதி. ---திருமாவளவன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Mohan Kumar K
ஆக 24, 2025 13:59

தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் பொழுது இவர் அந்த கூட்டணியில் தானே இருந்தார். அப்போது தோன்றாத ஞானோதயம் இப்போது எங்கிருந்து வந்தது


Manoharan. S. R.
ஆக 23, 2025 12:51

சரியான கருத்து.


Selvakumar kalidhas
ஆக 18, 2025 20:57

ஏன் சிறிது நாள் மற்ற சமூகங்களும் பார்க்கட்டுமே என்ன தப்பு சொல்லுங்க


Arul Narayanan
ஆக 18, 2025 12:45

அந்த நபர் என்ன சிந்தித்தா சொல்லி இருக்கிறார்? திமுக அரசுக்கு ஜால்ரா தட்டி இருக்கிறார். யாரும் பார்க்க எண்ணாத ஒரு வேலையை குறைந்த கூலிக்கு எத்தனை நாள் பார்க்க வேண்டும்? நிரந்தரமாக்கி நல்ல ஊதியம் கொடுத்தால் அவர்களது பிள்ளைகளை படிப்பித்து நல்ல உத்யோகத்திற்கு அனுப்பி வைக்கட்டும்.


Haja Kuthubdeen
ஆக 18, 2025 12:30

பணி நிரந்தரம் வேணும்னு அந்த மக்கள் போராடுகிறார்கள்.இந்த ஆளு பனிநிரந்தரம் செய்யவேணாம்கிறார்.ஒன்னுமே புரியல....


Minimole P C
ஆக 18, 2025 10:26

After ADMK and BJP joined hands for election, Thiruma lost his mental balance. What we need is a solution to the existing problems. Even Govt. didnt solve the problem, they again going to do the same work, with private company, where nothing is sure including the present salary.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 18, 2025 10:13

மாஸ்டர் ரோல் நியாபகம் வருகிறதே ...


கூத்தாடி வாக்கியம்
ஆக 18, 2025 09:39

அதிலிருந்த்து படித்தவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். நகராட்சி பணியாளர் ஆக்க வேண்டும்.


hari
ஆக 18, 2025 08:38

மிக சரியான சிந்தனை திருமாவை கண்டாலே எனக்கு பிடிக்காது. ஆனால் இந்த கருத்தை சொல்வதற்கு அவருக்குள்ள மனோதிரியம் பாராட்டத்தக்கது எல்லோரும் அரசு வேலை வாய்ப்பை மட்டும் பார்க்கும் போது, அவர் என்ன வேலை வாய்ப்பு என்று சிந்திக்க சொல்கிறார். பாராட்டுக்கள் அரசு உயர் பதவிகளுக்கு படித்த, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு மிக அவசியம். ஆனால் துப்புரவு தொழிலுக்கு ஐடா ஒதுக்கீடு என்பது கூடவே கூடாது யாருக்கு பணி செய்து தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ அவர்கள் இந்த வேளைக்கு வரட்டும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொழில் என்று ஒதுக்கிவைக்க கூடாது


Rajan A
ஆக 18, 2025 07:39

சுத்தமான உளறல்


சமீபத்திய செய்தி