உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்ளாட்சி தேர்தல்: காங்., தனித்து போட்டி!

உள்ளாட்சி தேர்தல்: காங்., தனித்து போட்டி!

அரசே மதுபான தொழிலை நடத்தும் தமிழகத்தில், மது ஒழிப்பு மாநாடு நடத்த விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்து திரும்பு முன், மற்றொரு கூட்டணி கட்சியான காங்கிரசும், தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்க கிளம்பியிருக்கிறது. 'உள்ளாட்சி தேர்தலில், 20 சதவீதம் இடங்கள் தந்தால், தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கலாம்; இல்லையேல், தனித்து போட்டியிடலாம்' என, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம், செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. மேலிட பொறுப்பாளர்கள் அஜோய்குமார், சூராஜ் ஹெக்டே பங்கேற்றனர். 'ராஜிவ் கனவுப்படி, தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்பதே நம் நோக்கம். அதற்கான வாய்ப்பு எப்போது கிடைக்கிறதோ, அப்போது அந்த முயற்சியில் இறங்க வேண்டும். இதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

20

அதைத்தொடர்ந்து நடந்த விவாதத்தில், கூட்டணி ஆட்சி பற்றியும், உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்தும், மாநில, மாவட்ட தலைவர்கள் மாற்றம் குறித்தும் பலரும் பேசினர். அகில இந்திய காங்கிரஸ் செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான விஸ்வநாதன், உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தை மையமாக வைத்து பேசினார். ''20 சதவீதம் இடங்களை, தி.மு.க., தலைமையிடம் கேட்க வேண்டும். காங்கிரஸ் போட்டியிடும் பதவிகள் குறித்து, குழு அமைத்து தி.மு.க.,வுடன் கறாராக பேரம் பேச வேண்டும். அதில், உடன்பாடு எட்டாவிட்டால் தனித்து போட்டியிடும் முடிவை தைரியமாக எடுக்க வேண்டும்,'' என்றார்.அடுத்து பேசியவர்கள் அந்தக் கருத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். 'தி.மு.க., பெரிய கட்சி தான். ஆனால், அதன் வெற்றிக்கு கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட கூடாது. உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை, தி.மு.க., தராவிட்டால் தனித்து போட்டியிட வேண்டும்' என்றனர்.

கூட்டணி ஆட்சி

கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசுகையில், ''மாநில கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி வெறும் நான்கு எம்.எல்.ஏ.,க்களை வைத்துக் கொண்டு, தைரியமாக கூட்டணி ஆட்சி கோரிக்கையை எழுப்புகிறது. ''நம்மிடம் ஒன்பது எம்.பி.,க்களும், 18 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். எனவே, ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை, நாம் திருமாவளவனை விடவும் உரத்த குரலில் கேட்க வேண்டும்,'' என்றார்.தங்கபாலு பேசுகையில், ''ஆட்சியில் பங்கு என்பது நியாயமானகோரிக்கை, அது, நிறைவேற வேண்டும். நான் தலைவராக இருந்த போது, முதல்வராக இருந்த கருணாநிதியிடம் இந்த கோரிக்கையை ஓப்பனாக கேட்டேன். அவரும், 'காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு தருவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை; ஆனால், உங்கள் கட்சியின் தேசிய தலைவர் சோனியா, அந்த கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அப்படி நடந்தால் இது குறித்து பேசலாம்' என்றார். ஆனால், ஸ்டாலின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது நமக்கு தெரியாது. அதனால், அவசரப்பட்டு பொது இடங்களில் இதை பேசி, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்,'' என்றார்.மற்றொரு முன்னாள் தலைவர் இளங்கோவனும் அதே பாணியில், ''கூட்டணி ஆட்சி வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், அதற்கான நேரம் வரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்,'' என்றார்.

சீர்திருத்தம்

மேலிட பொறுப்பாளர் சூரஜ் ஹெக்டே, ''அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கோஷ்டிகளாக செயல்படக் கூடாது,'' என்றார். மற்றொரு பொறுப்பாளர் அஜோய்குமார், ''இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்கும் நிர்வாகிகள் நியமனத்தில் முக்கியத்துவம் தரும் சீர்திருத்த திட்டம், 10 நாட்களில் அறிவிக்கப்படும்,'' என்றார்.

'ரூ.1.50 லட்சம் கோடி சொத்து உள்ளவருக்கு தான் கட்சியா?'

கே.ஆர்.ராமசாமி பேசுகையில், ''நான் ஆறு முறை, என் மகன் இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தோம். எங்களையும், மூன்று முறை எம்.பி.,யாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனையும் புறக்கணித்து விட்டு, நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துகின்றனர். ஒன்றரை லட்சம் கோடி சொத்து வைத்திருப்பவருக்கு தான், இந்த கட்சி சொந்தமா?'' என்று ஆவேசமாக கேட்டார்.குறுக்கிட்ட தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன், ''தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி பேச வேண்டாம்,'' என்றார். உடனே ராமசாமி, ''கருத்து சொல்ல எனக்கும் உரிமை இருக்கிறது. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்,'' என்றார் கோபமாக. வாக்குவாதம் முற்றியதும், பீட்டர் அல்போன்ஸ் இருவரையும் சமாதானப்படுத்தினார்.

'குப்பை தொட்டியிலா எங்களை வீச முடியும்?'

முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், ''நிர்வாகிகள் பதவிக்கு வயது வரம்பு நிர்ணயித்தால், 70, 80 வயதானவர்களை குப்பை தொட்டியிலா தள்ள முடியும்? எனவே, 50 சதவீதம் இளைஞர்களுக்கும், 50 சதவீதம் அனுபவசாலிகளுக்கும் பதவி தர வேண்டும்,'' என்றார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

venugopal s
செப் 20, 2024 22:30

எந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்தத் தேர்தலிலும் தமிழகத்தில் பாஜக ஜெயிக்கப் போவதில்லை, அப்புறம் என்ன?


MADHAVAN
செப் 20, 2024 21:15

திமுக வை தனித்து நிக்கச்சொல்லும் மூர்க்கனுங்க எதுக்கு 10 கட்சிக்கூட கூட்டணி வச்சு 40 தொகுதிலும் மண்ணை கவ்வுறீங்க ? டெபாசிட் வாங்க துப்பில்லாம இருக்குற மூக்கனுங்களுக்கு இதுயெல்லாம் தேவையா ?


Kasimani Baskaran
செப் 20, 2024 20:53

பலமான கட்சியாயிற்றே... கேட்பதுதான் கேட்கிறார்கள் ஒரு 50% கேட்கக்கூடாதா..


பேசும் தமிழன்
செப் 20, 2024 19:23

அது தான் உங்கள் ஆள் இளங்கோவன் ஏற்கெனவே சொல்லி விட்டாரே..... இப்போது நடக்கும் திமுக ஆட்சி காமராஜர் ஆட்சி தான் என்று ...பிறகு எதற்க்கு தனியாக கடை நடத்தி கொண்டு....பேசாமல் கடையை இழுத்து மூடி விட்டு.. திமுக கட்சியில் ஐக்கியமாகி விட வேண்டியது தானே ???


M Ramachandran
செப் 20, 2024 19:00

ராகுலுக்கு அமெரிக்க ஒரு சதி காரன் நம் நாட்டிற்கு எதிராகா ஏற்காதோர் அச்சிஞ்மேங்ட் கொடுத்திருக்கு அது ஹான் தலிய்ய மறைவ்வு ப்படியென இத்தாலிக்கு என்று இடும் திரும்பி வருவதுசந்தேகம் உச்ச நீதி மன்றம் காத்து கொண்டிருக்கு வந்தால் அவ்வளவு தான் ஜாமீனு கேசு திகார் கதவு திறந்து விழுங்கி விடும்


M Ramachandran
செப் 20, 2024 18:56

5 கட்சியை தாவி முதலில் உங்கள் ராகுலை தேடு அமெரிக்காவிலிருந்து எஙகோ சென்று விட்டது. எந்த நம் விரோதி நாட்டிற்கு சென்று குழிபறிக்க சென்றுள்ளது. நீங்களும் தேச விரோதியாவீர்களா


M Ramachandran
செப் 20, 2024 18:53

சுண்டெலி சிங்கத்தை பார்த்து சத்தம் கொடுத்து பாத்திச்சாம். உறுமல் சத்தம் கேட்டால் அதன் ஈரல்குலை நடு நடுங்கும்.


என்றும் இந்தியன்
செப் 20, 2024 17:06

20 சதவிகிதம் என்றால் 46 சீட் அது மட்டும் போதாது ஒவ்வொரு சீட்டுக்கும் ரூ 500 கோடி அதாவது ரூ 23,000 கோடி ஒதுக்கவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் - இப்படிக்கு முஸ்லீம் நேரு காங்கிரஸ். இது அந்த அதன் உள்விவகாரம்


nagendhiran
செப் 20, 2024 17:02

சும்மா மிரடிட்டு"விட்டுறுவிங்கள பெருந்தகை?


nisar ahmad
செப் 20, 2024 15:39

காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது தற்கொலைக்கு சமம்.


சமீபத்திய செய்தி