உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி மனு: மார்ச் 28 ல் தீர்ப்பு

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி மனு: மார்ச் 28 ல் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனக்கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வரும் 28 ல் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இல்லை என செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.இதனை எதிர்த்த அமலாக்கத்துறை தரப்பினர், 2015, 2016 மற்றும் 2017 ம் ஆண்டுகளில் செந்தில்பாலாஜியின் வங்கிக்கணக்கில் அதிகளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டது. அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளதால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டனர்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட முதன்மை அமர்வு அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, இந்த வழக்கில் வரும் 28 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.

காவல் நீட்டிப்பு

இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 28 வரை நீட்டிக்கப்பட்டது. புழல் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக செந்தில் பாலாஜி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரின் காவல் நீட்டிக்கப்படுவது இது 29 வது முறையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

lana
மார் 22, 2024 22:44

ED ஐ விசாரணைக்கு சொன்னது உச்சநீதிமன்றம். இது போன்ற வெட்டி வழக்கில் அதிகம் அபராதம் விதிக்க வேண்டும்


vadivelu
மார் 22, 2024 20:23

Go to ….. u will be released and can become a minister again


Godfather_Senior
மார் 22, 2024 20:10

DMK corrupt men need not worry at all The highest judiciary is for them only to protect from any legal actions Even a convicted person Ponmudi is made as Minister again, just only because of SC wanted him to get reinstalled as minister Indian election bearer bonds are nothing, the chinese and sores funds are flowing like a river for the top few judiciary officials No, I am not saying this, the NYT reported the truth last year and now our judges are proving it right Havala funds, drug mafia funds and illegal sand mining funds all these make the DMK a trillionaire, multiple times richer than the TN state And that is working perfectly, to get all the deliverance according to your part, so as long as the present CJI & his teams are there, worry not, they will grant you all the freedom and may even relieve you from the proven, documented and established ges That is the power of SC, that they have the right to question anyone but themselves After seeing the recent deliverance, now I fully believe the NYT reports, that must be true


Jai
மார் 22, 2024 18:36

இவருடைய தம்பி இன்னும் சரண்டர் ஆகவில்லை. இருந்தாலும் உச்ச மன்றத்திற்கு சென்றால் திமுக ஆதரவு நிலைப்பாடுதான் எடுக்கப்படும் போல் தெரிகிறது. ஜாமினில் வந்தவுடன் இவர் அமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கலாம். சட்டம் தன்கடமையை சாமன்யனிடம் வெச்சு செய்யும்.


Saai Sundharamurthy AVK
மார் 22, 2024 18:24

தேர்தல் நேரத்தில் செந்தில் பாலாஜியை ஜாமினில் விடக் கூடாது. அவருக்கு ஆபத்து நேரிடலாம். ☺️☺️


ss
மார் 22, 2024 18:01

ok ok ok


ss
மார் 22, 2024 18:01

ok ok ok


Lion Drsekar
மார் 22, 2024 17:51

Governor should be ready to install him as a senior cabinet minister from now onwards VANDHE Matharam


Barakat Ali
மார் 22, 2024 17:31

பொன்முடி போல இவருக்கு அதிர்ஷ்டம் இல்லீங்களே ஏனுங்க ????


மேலும் செய்திகள்









புதிய வீடியோ