உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூக ஆர்வலர்கள் கொலை அதிகரிப்பு கேள்வி கேட்டால் மிரட்டப்படுகின்றனர்: சீமான்

சமூக ஆர்வலர்கள் கொலை அதிகரிப்பு கேள்வி கேட்டால் மிரட்டப்படுகின்றனர்: சீமான்

சென்னை: 'தி.மு.க., ஆட்சியில் சமூக ஆர்வலர்கள், கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. கேள்வி கேட்டாலே மிரட்டப்படுகின்றனர்' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மயிலாடுதுறையில், இரண்டு இளைஞர்களை, கள்ளச்சாராய கும்பல் படுகொலை செய்துள்ளது. சாராய விற்பனை குறித்து, பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க தவறிய, காவல் துறையின் அலட்சியத்தால், இருவர் இறந்துள்ளனர்.தமிழகத்தில் ஆட்சியாளர்கள் இழைக்கும் அநீதிக்கு எதிராகவும், தினமும் நடக்கும் சமூக அவலங்களுக்கு எதிராகவும், கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகி விட்டது. சில நாட்களுக்கு முன்பு, அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை எனக்கூறிய நடிகர் கஞ்சா கருப்பு மிரட்டப்படுகிறார்.தி.மு.க., ஆட்சியில், கள்ளச்சாராய விற்பனையிலும், கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கத்திலும், டாஸ்மாக் மது விற்பனையிலும், தமிழகம் முதன்மை மாநிலமாக நிற்கிறது. இதனால், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காதே நாட்களே இல்லை என்ற அளவிற்கு, குழந்தைகள், பெண்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், அரசு பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர்.இதில், மயிலாடுதுறையில் இருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு, முன்விரோதம் காரணம் என, போலீசார் விளக்கம் அளிப்பது வியப்பளிக்கிறது. முன் விரோதம் ஏற்படக் காரணம் சாராய விற்பனைதானே. அரசிற்கு அவப்பெயர் ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனப் போலீசார் நினைத்தால், குற்றத்தை தடுக்க முனைய வேண்டும். குற்றம் நடந்ததற்கான காரணத்தை மறைக்க முயலக்கூடாது. இனியாவது கள்ளச்சாராய விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மிரட்டலுக்கு பயந்த கஞ்சா கருப்பு!

சென்னை சின்னப்போரூர் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, சில தினங்களுக்கு முன்பு, கால்வலிக்கு சிகிச்சை பெற, நடிகர் கஞ்சா கருப்பு சென்றார். வெகுநேரம் காத்திருந்தும், டாக்டர்கள் வரவில்லை. நர்ஸ்களிடம் விசாரித்தபோது, முறையாக பதில் இல்லை. கோபமடைந்த அவர், மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ வெளியானது.அடுத்த நாள், இதுகுறித்து பேசிய, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், ''இதற்கு மேல் பேசினால், கஞ்சா கருப்புக்கு தான் பிரச்னை'' என்றார்.இதையடுத்து, அமைச்சர் சுப்பிரமணியனை சந்தித்த கஞ்சா கருப்பு, நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார். மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை எனக் கூறிய, பிரபல காமெடி நடிகரே, மிரட்டலுக்கு பயந்த நிலையில், ஏழை மக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 16, 2025 08:48

நாட்டிற்கே பாதுகாப்பு நீங்கள் தான் என்று கூறினீர்கள். உங்கள் பாதுகாப்பிலேயே இப்படியா. என்னடா இது இந்த மதுரைக்கு வந்த சோதனை


Kasimani Baskaran
பிப் 16, 2025 07:05

சமூகம் என்பதை கட்சி என்ற அளவுக்கு ஆகிவிட்டது. ஆகவே ஆள்பவர்கள் கேள்வி கேட்டால் அதிகாரம் எங்களிடம் இருக்கிறது என்று பிளைட் மோடில்த்தான் குற்றவாளி பேசினான் - சார் என்ற ஒருவர் கிடையாது என்று கூட காவல்துறையை விட்டு பேசச்சொல்வார்கள். குற்றவாளிக்கு வாக்கி டாக்கி மற்றும் சீருடை கூட கொடுத்து உதவி இருக்கிறது காவல்துறை என்று நினைக்கையில் குலை நடுங்குகிறது. டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டிய ஆட்சியை விட்டு வைத்து இருப்பது ஓட்டுப்போட்டவர்கள், போடாதவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் துன்பம் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்


நிக்கோல்தாம்சன்
பிப் 16, 2025 03:42

மிரட்டல் மாடல் அரசு , மாசு செய்தது மன்னிக்க முடியாத குற்றம் , ஜெகபர் அலி போன்றோரை கொலை செய்தபோதே அரசு விழித்திருக்க வேண்டும் , கள்ளச்சாராய சாவுக்கு அள்ளி கொடுத்த மாடல் அரசு , இன்னமும் கள்ளசாராயங்களை அழிக்காமல் இருப்பது இருண்ட காலத்திற்கு எடுத்த்க்காட்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை