உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உங்கள் இடம்: முட்டாளா, முழு ஆளா?

இது உங்கள் இடம்: முட்டாளா, முழு ஆளா?

எஸ்.சின்னராசு டேவிட், தென்காசியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

திராவிட மாடலின், 'கடவுள்' ஆன, ஈ.வெ.ரா., தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்பவர்களிடம், 10 ரூபாய் வாங்கி கொண்டு தான், படம் பிடிக்க அனுமதிப்பார்.சென்னையில், அண்ணாசாலை, அண்ணாசிலைக்கு அருகில், பிளாட்பார ஜோதிடர்கள், பிரபலமானவர்களுக்கு கை ரேகை பார்த்து சொன்னது போல புகைப்படம் எடுத்து, வரிசையாக அடுக்கி வைத்திருப்பர்.நிற்க...'பா.ஜ.,வுடனும், பிரதமரோடும் கள்ளக் கூட்டணி வைத்திருப்பவர் ஸ்டாலின் தான். பதவி வெறி பிடித்த கட்சி அல்ல அ.தி.மு.க., நாங்கள் யாருக்கு மறைமுக ஆதரவு செலுத்த வேண்டிய அவசியம் இல்லை' என, துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிச்சாமி பரப்புரை நிகழ்த்தி இருக்கிறார்.அன்னாரது அந்த பரப்புரையை படித்தபோது, 'இவரெல்லாம் எப்படி முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து நிர்வாகம் நடத்தினார்... இவர் முட்டாளா, முழு ஆளா?' என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.ஏனெனில், பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் இருப்பது போன்றதொரு புகைப்படத்தை காட்டி இருக்கிறார்.இப்போது இக்கடிதத்தின் முதலில் குறிப்பிட்டுள்ளவற்றை சற்று வாசித்து பாருங்கள்.பிரபலமானவர்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொள்வது, சாதாரணமான விஷயம் தான்.அதிலும் பிரதமரும், முதல்வரும் அருகருகே இருந்தபடி புகைப்படம் எடுப்பதும், சர்வ சாதாரணமான விஷயம் தான்.இதே பழனிச்சாமி முதல்வராக கோலோச்சியபோது, இதே பிரதமருடன் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம்.நாளை அல்லது அதற்கு மறுநாள், தி.மு.க., பிரசார மேடைகளில், பிரதமரும், பழனிச்சாமியும் இருப்பது போன்ற புகைப்படத்தை காட்டி, வழக்கமாக வழங்கும், 'அர்ச்சனை' சொற்களை, ஸ்டாலின் பொழிந்தாரானால், பழனிச்சாமியால் ஏற்றுக் கொள்ள முடியுமா?மீண்டும் அதே கேள்வி... மூவன்னாவா, மு.ஆவன்னாவா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
ஏப் 03, 2024 11:38

வாசகர் இதே போல ஸ்டாலினின் பிரதாபங்களை எடுக்காமல் விட்டதேனோ


mindum vasantham
ஏப் 03, 2024 07:07

முக்கியம் ஆதாரங்களுடன் அம்மையார் பிடித்து கொடுத்த ஆ ராசா பிஜேபி ஆட்சியில் விடுதலையானது எப்பிடி


ஜஜ
ஏப் 03, 2024 06:37

இந்த கடிதம் எழுதியவர்க்ககு ஒன்னும் புரியவில்லையே முதலில் போட்டோவை காட்டி பல்லை கூட்டிட்டு இருக்கிறார் என்று சொன்னது இந்த உதவாநிதி அதுவும் ஒரு அமைச்சர் எப்படி பேச வேண்டும் என்று மேடை நாகரிகம் தெரியாத ஒரு அமைச்சர் இந்த த்தி மக்களுக்கு நல்லது செய்ய போகுது அந்த 4000 கோடி பற்றியும் 30000 கோடி பற்றியும் வாய் திறக்கிறது தில் யஉஇருந்தா


raja
ஏப் 03, 2024 06:16

இந்த திராவிட என்று வரும் கட்சிகளையும் க உறுப்பினர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது தமிழன் என்றால் தேர்ந்தெடுங்கள் மற்றவர் என்றால் விரட்டி அடியுங்கள் T


Kasimani Baskaran
ஏப் 03, 2024 05:19

கழுதைக்கழிவில் முன்னால் வந்தது , பின்னால் வந்தது என்ற வேறுபாடெல்லாம் கிடையாது எல்லாம் ஒன்றுதான்


Durai
ஏப் 03, 2024 05:14

நமது தமிழகத்தில் படித்தவர்கள் சிந்திக்கத்தெரிந்தவர்கள் ஏராளம் அண்ணாமலை அவர்களின் பேச்சு அனைத்துவிதமான மக்களின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியதாகவே இருக்கும் ஆனால் திராவிடக் கட்சித் தலைவர்களின் பேச்சு?


Aanand
ஏப் 03, 2024 03:47

முன்னாள் முதல்வர் இப்படி பேசுவதற்கு காரணமே தீய மு க இளவரசர் இவர் மோடியுடன் இருக்கும் படத்தை காட்டியதால் தான்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை