உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதியோர் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் இனி வீட்டிற்கே!

முதியோர் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் இனி வீட்டிற்கே!

சென்னை: தமிழகத்தில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் 'முதல்வரின் தாயுமானவர்' திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இதன்படி ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பயனாளிகளின் வீடுகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.தமிழக ரேஷன் கடைகளில், 2.25 கோடி கார்டு தாரர்களுக்கு மாதந்தோறும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை வாங்க முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர்.எனவே, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும், 'முதல்வரின் தாயுமானவர்' திட்டத்தை, சென்னை தண்டையார்பேட்டை கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகரில், முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.மாற்றுத்திறனாளி சக்திவேல் வீட்டிற்கு நேரில் சென்று, அவருக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். பின், கோபால் நகரைச் சேர்ந்த சரஸ்வதி, தேவிகா, மீனாட்சி ஆகிய முதியவர்களின் வீடுகளுக்கும் சென்று பொருட்களை வழங்கி கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

நுாலகத்தை பார்த்தார்

அப்போது அங்கிருந்த புனித இருதய மெட்ரிக் பள்ளி மாணவியர் திரண்டு நின்று கைதட்டி, முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர். அங்கிருந்தவர்கள் முதல்வருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அங்கு, தி.மு.க.,வினர் அமைத்துள்ள கருணாநிதி நுாலகத்தையும் ஸ்டாலின் பார்வையிட்டார். பின், பல்வேறு பகுதிகளில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை, ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் தலைமை செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து இத்திட்டத்தை, அமைச்சர்கள் தங்களது மாவட்டங்களில் துவக்கி வைத்தனர். அதன்படி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை ஒ.புதுார் ஊராட்சியிலும், உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சிந்தலவாடம்பட்டி ஊராட்சியிலும், பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கினர்.

21.70 லட்சம் பேர்

அரசு வழங்கும் பல்வேறு சேவைகள், மக்களின் வீடு தேடி சென்றடையும் வகையில், மாநிலம் முழுதும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, சிறப்பு கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன், உணவு பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.இத்திட்டம் மூலம், 34,809 ரேஷன் கடைகளைச் சேர்ந்த 21.70 லட்சம் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இத்திட்டம் செயல்படுத்தப்படும். திட்டத்தின் வாயிலாக, மின்னணு எடை தராசு, விற்பனை முனைய கருவி உள்ளிட்ட உபகரணங்களுடன் கூடிய வாகனங்களில், ரேஷன் பொருட்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, தகுதியுள்ள பயனாளிகளின் வீடுகளில் வினியோகம் செய்யப்படும்.பயன்பெற தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களின் விபரம், உணவு துறையிடம் இருந்து பெறப்பட்டு, ரேஷன் ஊழியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, அரசுக்கு ஆண்டுக்கு, 36 கோடி ரூபாய் செலவாகும்.இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பயனாளிகளின் வீடுகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். அதற்கு முன்னரே, அவர்களுக்கு பொருட்கள் தேவைப்பட்டாலும், கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.பொருட்களை எடுத்து வரும் போது, வீட்டில் ஆட்கள் இல்லை என்றால், கடைக்கு வந்து பொருட்களை வாங்கி கொள்ளலாம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பயனாளிகள் விபரம் சரிபார்க்கப்பட்டு, புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கு ஏற்ப, கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Barakat Ali
ஆக 13, 2025 20:49

கிட்டினி திருடும் கும்பல் வருது ...... உஷாரய்யா உஷாரு .......


மனி
ஆக 13, 2025 18:19

ஏற்கனவே காது குத்தி யாச்சு இனி வேண்டாம் விடியலு


எஸ் எஸ்
ஆக 13, 2025 17:40

நடைமுறையில் சாத்தியம் இல்லாத திட்டம். விரைவில் கைவிடப்படும்


Balasubramanyan
ஆக 13, 2025 15:05

This tem was announced by Late Vijayakanth. Not by any other party. Now as usual strike. Doubt. How the department knows about the old people who gets the ration. In a house there will be parents and children the g.parents will be old and invalid. The other persons will get the ration. How dept identify the old people who live alone.will they take the weight machine with them. The rice, and wheat are free from central govt quota. What is the contribution o TamilNadu govt. the photo shoot is very good. Surprise to read the name of the chief secretary. Now only we know that we have a n IAS person as chief Seretary.How they a place and house where there is memorial to his father.why this scheme at the fag end of the regime.


Karthik Madeshwaran
ஆக 13, 2025 12:45

அதவாது இந்த திட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்திருந்தால் ஆகா ஓகோ என்று ஒப்பாரி வைத்திருப்பார்கள். திமுக அரசு கொண்டு வந்தால் தவறு. அப்படி தானே ?? இந்தியாவில் அடுத்த பாராளமன்ற தேர்தல் 2029 மே மாதம்.. அப்படி என்றால் 2028 மே மாதம் பிறகு ஒன்றிய பாஜக அரசு எந்த புதிய திட்டங்களையும் அறிவிக்க மாட்டார்களோ?? காரணம், தேர்தலுக்காக புதிய திட்டங்களை கொண்டு வருகிறார் என்று இன்று திமுகவை திட்டும் அதே வாய், அப்போது என்ன பேசும் ?


Ajay Ajay
ஆக 13, 2025 15:06

தேர்தல் பக்கம் வருது அதுனால இனி எல்லாம் பண்ணுவாங்க கொஞ்ச நால தேர்தல் mudunja பண்ண மாட்டாங்க


Kjp
ஆக 13, 2025 21:04

கொண்டு வந்தது எல்லாம் சரி நாலரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார் முதல்வர். நாலரை ஆண்டுகளாக முதியவர்கள் கஷ்டம் முதல்வருக்கு தெரியவில்லையா. தேர்தல் வரும்போதுதான் ஞானோதயம் பிறக்கிறதா. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம்தான் இருக்கிறது. இப்போதுதான் மக்கள் கஷ்டங்கள் எல்லாம் தெரிகிறதா? இப்போதுதான் திட்டங்கள் வருகிறது. நண்பரே ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நலமாக இருந்தவர்களா இல்லையா?


Karthik Madeshwaran
ஆக 13, 2025 12:35

தாயுமானவர் திட்டம் உண்மையில் அற்புதமான பாராட்டப்பட வேண்டிய திட்டம் தான். வயது மூப்புடையோர், மாற்று திறனாளிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் சென்று ரேஷன் பொருள்களை கொடுமையான வெயிலில் கீவில் நின்று வாங்குவது எல்லாம் ரொம்ப பாவம். அவர்களுக்கு இந்த திட்டம் உண்மையில் வரம். இந்த திட்டத்தை பார்த்து, அதிமுக அடிமைகளுக்கும், பாஜக கொத்தடிமைகளுக்கும் வயிற்றில் பற்றி எரிகிறது பொறாமை, பாவம். தேர்தலுக்காக தான் செய்கிறார்கள், ஏன் இவ்வளவு நாட்களாக செய்யவில்லை என்று தான் பேசுகிறார்கள் தவிர திட்டத்தை ஆதரிக்க மறுக்கிறார்கள். அதாவது தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நல்லதும் செய்ய கூடாது என்கிறார்கள் அடுத்த ஒருவருடத்திற்கு... திட்டம் எப்போது வந்தால் என்ன ? யார் செய்தால் என்ன? திட்டம் நல்லதா இல்லையா என்று தானே பார்க்க வேண்டும்? பாராட்ட மனமில்லை எதிர்க்கட்சிகளுக்கு. அதாவது திமுக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய கூடாது என்று கதறுகிறார்கள். அய்யோ பாவம்.


Kjp
ஆக 13, 2025 21:06

எந்த அருமையான திட்டத்தை நாலரை ஆண்டுகளாக ஏன் செய்யவில்லை என்பது தான் கேள்வி? தேர்தல் தான் காரணம் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?


raghavan
ஆக 13, 2025 12:07

எடை மெஷினோடு வருவார்களா? இல்லை வழியில் எலிகள் கொஞ்சம் கொரித்து விடுமா??


R.PERUMALRAJA
ஆக 13, 2025 10:15

OTP கொடுத்தால் தான் ரேஷன் பொருட்கள் கொடுப்போம் என்று முதியோரை தி மு க மிரட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை


V RAMASWAMY
ஆக 13, 2025 09:41

முதியோர் நினைவு தேர்தல் சமயத்தில் மட்டும் தான் வருமா?


angbu ganesh
ஆக 13, 2025 09:36

இந்த அறிவு 2022ல வந்திருந்த சந்தோசம் ஆனா அடுத்த தேர்தலுளுக்கு வருதே 2026 பட்ட நாமம்தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை