உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கிய டாஸ்மாக் செக்யூரிட்டி கைது; 900 மதுபாட்டில்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கிய டாஸ்மாக் செக்யூரிட்டி கைது; 900 மதுபாட்டில்கள் பறிமுதல்

தென்காசி: தென்காசி அருகே சட்டவிரோதமாக வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த டாஸ்மாக் செக்யூரிட்டியை போலீசார் கைது செய்தனர். கீழப்பாவூர் அருகே அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் செக்யூரிட்டியாக தங்கசாமி, 40, என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், கடையில் மதுபானங்கள் திருடு போவதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், சந்தேகத்தின் பேரில் செக்யூரிட்டி தங்கசாமியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக, வீட்டில் மதுபாட்டில்களை தங்கசாமி குவித்து வைத்துள்ளார். இதனையடுத்து, சுமார் 942 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

RAMESH
ஜன 23, 2025 05:00

பத்து ரூபா வசூல் செய்யும் நபர்களை கைது செய்ய முடியுமா


Ramesh Sargam
ஜன 22, 2025 19:48

அவர் பதுக்கவில்லை. குளிர் காலத்தில் அதிகம் தேவைப்படும் என்று சேமித்து வைத்திருக்கிறார், என்று அவருக்காக வாதிடும் வழக்கறிஞர் அப்படி வாதாடுவார் நீதிமன்றத்தில். உடனே நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் கொடுத்துவிடும்.


சம்ப
ஜன 22, 2025 19:28

அப்பப்ப வித்திடனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை