உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை:

ஏப்.,27ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை

அடுத்த 5 நாட்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் அதிக பட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 -28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Hari Bojan
ஏப் 27, 2024 15:04

வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்தால்தான் தப்பிப்போம் எங்கெல்லாம் சற்று இடமிருக்கின்றதோ அங்கெல்லாம் மரங்களை நடவு செய்தால் நமக்கும் நாட்டிற்கும் நல்லது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை