உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை வந்த விமானம் பெங்களூரில் தரையிறக்கம்

சென்னை வந்த விமானம் பெங்களூரில் தரையிறக்கம்

சென்னை:டில்லியில் இருந்து சென்னைக்கு நேற்று மாலை 6:07 மணிக்கு 165 பயணியருடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானம் நேற்று இரவு 8:00 மணிக்கு சென்னை வான்வெளியை நெருங்கியது. விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு கோபுரத்தில் இருந்து விமானத்தை தரையிறக்க அனுமதியும் கிடைத்தது. ஆனால், விமானம் மூன்று முறை தரையிறங்க முயற்சித்தும், முடியாததால் தொடர்ந்து வானில் வட்டமடித்த விமானத்தை பெங்களூரில் இரவு 8:40க்கு தரையிறக்கினர். இதனால் பயணியர் அவதியடைந்தனர். இதுகுறித்து ஏர் இந்தியா கூறுகையில், 'பயணியர் தடங்கலுக்கு வருந்துகிறோம். இயக்க காரணங்களால் விமானம் திருப்பி விடப்பட்டது' என, குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !