உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு; உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றார் தருமை ஆதீனம்

பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு; உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றார் தருமை ஆதீனம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தால் கட்டித் தரப்பட்ட மகப்பேறு மருத்துவமனை இடிக்கப்படாது என்ற நகராட்சி ஆணையரின் கடிதத்தை தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவித்தார்.மயிலாடுதுறை, சின்னக்கடை வீதியில், பொதுமக்களின் மருத்துவ வசதிக்காக, தருமபுரம் ஆதீனம் சார்பில் இலவச மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 24வது குருமஹா சன்னிதானம் சண்முகதேசிக சுவாமிகள், 1943ல் அப்போதைய கவர்னரை அழைத்து பூமி பூஜை செய்தார். கட்டுமான பணிகள் முடிந்து, 25வது குருமஹா சன்னிதானம், 1951ல் இலவச மருத்துவ சேவையை துவக்கி வைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yo9wrujy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மயிலாடுதுறை நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அதிகளவில் சிகிச்சை பெற்றனர். முக்கியமாக மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், நகராட்சி நிர்வாகத்திடம் மருத்துவமனை ஒப்படைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது. கட்டடம் சிதிலமடைந்ததை அடுத்து கூறைநாடு பகுதியில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு, அங்கு இடமாற்றம் செய்யப்பட்டது. சண்முக தேசிக சுவாமிகள் இலவச மருத்துவமனை கட்டடம் மூடப்பட்டு பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது.உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அந்த கட்டடம் பழுதடைந்தது. இதனையடுத்து அந்த கட்டடத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தருமபுரம் ஆதினத்தின் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் சார்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதற்கு பதில் வராத நிலையில் அந்த கட்டடத்தை இடிக்கப் போவதாக தகவல் வந்தது. இதனையடுத்து முன்னோர் அமைத்த நினைவு அமைப்பை சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து காப்போம். என ஆதினம் கூறியிருந்தார். இதன் பிறகு அந்தக் கட்டடம் இடிக்கப்படுவது நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது, கட்டடத்தை நகராட்சி நிர்வாகம் இடிக்கப்போவதாக தகவல் வெளியானதால் தருமை ஆதீனம் கோபம் அடைந்தார். இலவச மருத்துவமனையை இடிப்பதை கண்டித்து, ''உயிர் போகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்,'' என, நேற்று தருமபுரம் ஆதீனம் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது அறிவிப்பு வெளியானவுடன், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதீனத்தின் அறிவிப்புக்கு ஆதரவும் அரசுக்கு கண்டனமும் தெரிவித்தனர். இதையடுத்து, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சேகர்பாபு, நேரு ஆகியோர் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.இதன் காரணமாக, மகப்பேறு மருத்துவமனை இடிக்கப்படாது என்ற நகராட்சி ஆணையர் கடிதம் வழங்கினார். இதை ஏற்று உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

என்னத்த சொல்ல
அக் 08, 2025 15:01

இப்படியே ஒன்னொண்ணையும் தீர்க்க பட்டால், அண்ணாமலை, நைனார் எப்படி அரசியல் செய்வது.


Venugopal S
அக் 08, 2025 14:23

இந்த பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து ஏதேனும் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் தருமபுரம் ஆதீனம் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்!


கூத்தாடி வாக்கியம்
அக் 08, 2025 13:09

எல்லா சொத்தையும் வித்து காலி பண்ணிட்டு வர்றீங்க. மொத்த மா அரசியல் கட்சிகள் கிட்ட சரண்டர் ஆகி கிடகீங்க. இப்போ என்ன பிரச்ினை. அவனுங்க சும்மா இருக்க விட மாட்டானுங்க. எதுல சிக்குவீங்கன்னு பாப்பானுங்க...வெயிட் அண்ட் சீ


Rathna
அக் 08, 2025 12:54

திருநாவுக்கரசர், ஞான சம்பந்தர், நிறுவிய மடங்கள் சைவ சமயத்தை வளர்க்கவும், மடாதிபதிகள் இறைவழியில் நடந்து மக்களை நல்வழி படுத்தவும், உழவார பணி, கல்வி, தர்ம உணவு வழங்குதல், மருத்துவ வசதி, அந்த அந்த சமூகங்களுக்கு நல்வழி காட்டவும் ஏற்படுத்தப்பட்டன. பிறப்பில் இருந்து இறப்பு வரை மனிதர்களுக்கு வழி காட்டுபவர்களாக இருந்தனர். இந்த பணிகளுக்கு தமிழக அரசர்கள், செல்வந்தர்கள் பல ஆயிரம் ஹெக்டர் நிலங்களை தானமாக அளித்தனர். தர்மபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள், மதுரை, பேரூர் ஆதீனம்கள் சைவ நெறியை வளர்க்கவும், கல்வியை பெருக்கவும், நாயனம், தேவாரம் போன்ற திருமுறை ஓதுதல், சிவ உமையை வழிபடவும், வருமானம் இல்லாத கோவில்களில் ஒரு முறையாவது பூசை செய்யவும், சிவவாத்தியங்கள் கோவில்களில் ஒலிக்கவும், மாதம் தோறும் பல கோவில்களுக்கு சென்று நல்வழி காட்டவும் வேண்டும். சன்யாசிகள் ஒரு இடத்தில வசிக்க கூடாது. தற்போதைய காலத்தில், இந்த செயல்களில் இருந்து தவறியதால் பல பிரச்சனைகள் வருகிறது.


ஆரூர் ரங்
அக் 08, 2025 13:20

1 ஆதீனங்களின் கைகள் கட்டப்பட்டு வெகுநாட்களாகி விட்டது. ஒவ்வொரு செலவுக்கும் அறநிலையத்துறை அனுமதி தேவையாக உள்ளது. 2. ஆதீன கர்த்தர் சன்யாசம் பெற்றிருந்தாலும் மடத்தின் நிர்வாகத்தை கவனிக்க வேண்டியிருக்கும். அங்கேயே தங்குவது தவிர்க்கமுடியாதது.


JAGADEESANRAJAMANI
அக் 08, 2025 12:00

புதியதாக எதுவும் செய்யாவிட்டாலும் நமது முன்னோர்கள் ஏழை மக்களுக்கு தானம் அளித்ததை பிடுங்காமல் இருந்தால் சரி.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
அக் 08, 2025 11:55

திரு.அண்ணாமலை அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். எதற்கு வம்பு என திராவிட மாடல் பல்டி.


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 08, 2025 10:43

புலி பதுங்குவது பயத்தினால் அல்ல பாய்வதற்கு தான். வேறெங்காவது ரூபத்தில் மீண்டும் கட்டிடம் இடிக்கப்படும். எதற்கும் இரவு பகலாக கட்டிடத்தை காவல் காக்க வேண்டும். கட்டிட சேதம் அடைந்தது விழுமாறு செய்தாலும் செய்வார்கள் விஞ்ஞானிகள். எச்சரிக்கை தேவை


Raja k
அக் 08, 2025 09:24

அய்யோ புஸ்னு போயிருச்சே, நான் கூட நீங்க உண்ணாவெரதம் இருப்பீங்க, டிவிகாரங்க எல்லாம் லைவ் போடுவாங்க, உங்களை பார்க்க டெல்லி ஆட்கள் வருவாங்க, ஒருமாசம் உண்ணாமல் இருந்து மெலிஞ்சு போவீங்க


M L SRINIVASAN
அக் 08, 2025 10:50

கடேசியா பாத்தா கலைஞர் உண்ணாவிரதம் போல நாஷ்டாக்கு அப்புறம் ஆரம்பிச்சு லஞ்சுக்குள்ள முடிஞ்சுபோச்சு


ஜெய்ஹிந்த்புரம்
அக் 08, 2025 08:47

பணிக்குமில்லே?


Prabu
அக் 08, 2025 08:39

இலவச மகப்பேறு மருத்துவமனையை இடித்துவிட்டு புது மருத்துவமனை கட்ட அடுத்த கட்ட அழுத்தத்தைத் தர வேண்டும். அம்ரிதா அம்மா மற்றும் சங்கர மடம் ஆகியவை திறம்பட மறுத்துவ சேவை செய்கின்றனர். அவர்களின் உதவியை நாடலாம். இம்மடத்திற்கு சொத்துக்கள் பல கோடி உள்ளன


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை