வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சாதி என்பது நம் நாட்டில் நம் கண் முன்னே நிதரிசனமாக நிற்பது. சாதி பிரிவுகள் நம் இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் மிக தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. ஏற்றத்தாழ்வுகளும் பலபிரிவினருக்குள்ளே நடந்த மோதல்கள் மற்றும் அநியாயங்களும் சரித்திர ரீதியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் நிஜத்தையும் தாக்கத்தையும் அறவே மறுப்பதென்பது அறிவுபூர்வமான செயலாக இருக்காது. அதே சமயம், சாதிகளின் வரைமுறை காலங்களுக்கேற்ப மாறுபட்டுவந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. பண்டைய காலங்களில் தொழில் சார்ந்த வர்ணங்களாக இருந்த நிலை மாறி சமூக அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப, சாதிகளின் பெருக்கமும், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சிகளும் நிறையவே உருமாறியிருக்கின்றன. ஒரு காலத்தில் உயர்ந்த நிலையில் இருந்த சாதியினர் தாழ் நிலைக்கு தள்ளப்பட்டதும், தாழ்நிலையில் இருந்தவர்கள் முன்னேற்றமடைந்து உயர்சாதியினர் வரிசையில் இடம் பெற்றதும் நடைபெற்றுருக்கின்றன. குதிரைகளிலும், நாய்களிலும் ஏன் மரங்களிலுமே ஜாதிகள் இருக்கும்போது, மனிதர்கள் மட்டும் என்ன விதிவிலக்காக இருக்கமுடியுமா? இதே நிலை உலகெங்கும் வெவ்வேறு சாயல்களில் இருப்பதை நாம் காணமுடிகிறது. இத்தகைய சூழ்நிலையில் நாம் செய்யவேண்டியதெல்லாம், பாரதி சொன்னதுபோல் உயர்வு தாழ்வுகளை களைந்து அவரவர்கள் தங்கள் கலாச்சார பண்புகளை நினைவார்ந்து வளர்த்துக்கொண்டு, மற்றவர்கள் போற்றும் கலாச்சாரத்திற்கும் மரியாதை அளித்து, மொத்த சமுதாய முன்னேற்றத்துக்கு உகந்த வகையில் பணியாற்றினால், பிரச்சனைகள் எதுவும் இருக்காதே? சாதி என்பது ஒருவருடைய முன்னோர்களின் கலாச்சார அடையாளம் எனும்போது, அதை அழி விட்டொழி என்று கூறுதலும் நியாயமானதல்லவே? ஆகவே, ஜாதிகளை போற்றுவோம், கூடவே ஏற்ற தாழ்வுகளை மறுப்போம் என்பதுதான் சரியான சிந்தனையாக இருக்கமுடியும். 99 சதவிகிதத்தினர் சாதி ஆதரவு நிலையில் இருப்பதால்தானே அரசியல்கட்சிகளும் மேம்போக்காக சாதி இல்லை என்று பேசினாலும், அடிப்படையில் சாதி சார்ந்த அரசியலையே செய்துகொண்டிருக்கிறார்கள்? ஆகவே, எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில் ஏற்ற தாழ்வு ஒழிப்பு தான் லட்சியம் என்ற தெளிவை அடைந்தால்தான் நாடு அமைதியான பாதையில் செல்லமுடியும்.