உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சனாதன தர்மத்தின் துறவி திருவள்ளுவர்

சனாதன தர்மத்தின் துறவி திருவள்ளுவர்

பல நாடுகள் ஆட்சியாளர்களாலும், ராணுவத்தாலும் கட்டமைக்கப்பட்டவை. ஆனால், பாரத தேசம் ரிஷிகளாலும், துறவிகளாலும், சனாதன தர்மத்தாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் என்பது ஒன்றுதான். அது சனாதன தர்மம் மட்டும் தான். சமூகமும், தர்மமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. தர்மம் அழிந்தால், நாடு அழிந்துவிடும். உலக நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த போதெல்லாம், நம் நாடு சரிந்து விழாமல் நிமிர்ந்து நின்றதற்கு காரணம் சனாதன தர்மம். உலக நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் கேந்திரமாக நம் நாடு திகழ்கிறது. மனிதகுலம் தழைக்க, ஆன்மீகம் தழைக்க வேண்டும். திருக்குறள் ஒரு ஆன்மீக புத்தகம். முக்தி பற்றி பேசவில்லை என கூறி, சில அரசியல் சிந்தனையாளர்கள் ஆன்மிகத்தில் இருந்து திருக்குறளை பிரிக்கப் பார்க்கின்றனர்.சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர். - ஆர்.என்.ரவிதமிழக கவர்னர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

J Leo
மே 31, 2025 09:31

வைத்தியம் அவசர தேவை.


ஜெகதீசன்
மே 31, 2025 08:57

சனாதன தர்மம் மதமல்ல, கோட்பாடு இந்து மதத்திற்கு முந்தய நிலை RSS மற்றும் பாஜக மாதிரி. மிக மிக பண்டைய காலத்துல தோன்றியது என்பதால் அதில் இடைச்செருகல் பல உண்டு. அதில் ஒன்று வருண தர்மம். அதை இடைச்செருகல் என்று நீக்க வேண்டும். இந்து மதம் பல சமய தத்துவங்களை உள்ளடக்கியது என்பதால், பல இன மக்களுக்கு பொதுவாக இருக்க வேண்டி சனாதனம் என்பதற்கு பதிலாக இந்து தர்மம் என்றே அழைக்கனும். பல பிரிவுகளுக்கு இடையே, பொதுவான கலாச்சாரத்தால் ஒன்றுபட்டு நிற்கிறோம். வேதம் சாராத சமயப் பிரிவுகளையும் இந்து மதம் எனும் பெரிய குடையின் கீழ் அரவணைக்கனும்.


மூர்க்கன்
மே 31, 2025 08:33

யாரு பெத்த புள்ளையோ ?? சின்ன வயசிலிருந்து இப்படித்தானாம் புத்தி சுவாதீனம் இல்லையாம்?? எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் தான் சொல்றதையே திரும்ப திரும்ப சொல்ற வியாதியஸ்தர்? பாவம் நாம் பரிதாப பட்டு என்ன பிரயோஜனம்.


அப்புசாமி
மே 31, 2025 08:31

திருவள்ளுவர் சிவன், விஷ்ணு, முருகன், வினாயகர் , சரஸ்வதி, லஷ்மி பற்றி திருக்குறளில் நிறைய சொல்லியிருக்காரு. திரு.ரவி அவர்கள் இன்னும் நன்றாக திருக்குறளைப் படித்து நமக்கு விளக்க வேண்டும். மறைக்கபட்ட புராணங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்.


புரொடஸ்டர்
மே 31, 2025 08:11

திருவள்ளுவர் துறவி இல்லை. மனைவியுடன் வாழ்ந்த குடும்பஸ்தர். சனாதன நவீன துறவி இளம் வயதிலிருந்து இன்றுவரை மனைவியுடன் வாழாத நரேந்திரமோடி.


மூர்க்கன்
மே 31, 2025 08:24

ப்ரொடெஸ்டர் இல்லின்னா எப்புடி தெரியும்???


VENKATASUBRAMANIAN
மே 31, 2025 07:53

திமுகவிற்கும் ஆர்எஸ்பாரதி ஊடகங்களுக்கும் இன்று காட்டில் மழை. தலைப்பு கிடைத்து விட்டது.


மூர்க்கன்
மே 31, 2025 12:23

ஓஹோ உனக்கும் தெரிஞ்சு போச்சா?? இவரு பேசுனதெல்லாம் பிதற்றல் என்று.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை