உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவண்ணாமலை மகாதீபம்; மலையில் மண்ணின் தரம், பாறைகள் நிலைமை பற்றி வல்லுநர் குழு ஆய்வு

திருவண்ணாமலை மகாதீபம்; மலையில் மண்ணின் தரம், பாறைகள் நிலைமை பற்றி வல்லுநர் குழு ஆய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்த நிலையில், வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=45biurx6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சமீபத்தில் வங்கக்கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல் காரணமாக, புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில், வ.உ.சி., நகர் பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. மண் சரிவு, வெள்ளம் காரணமாக வீடுகள் புதைந்ததில், ஐந்து குழந்தைகள் உள்ளிட்ட, ஏழு பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.இந்த சூழலில், இந்தாண்டு திருவண்ணாமலை மகாதீபத்தின் போது பக்தர்களை மலையேற அனுமதிக்கலாமா? என ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் இன்று திருவண்ணாமலை வந்துள்ளனர். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் இடத்தில், மண்ணின் தரம், பாறைகளின் நிலை குறித்து வல்லுநர் குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கலெக்டர் பேட்டி

'திருவண்ணாமலை தீபமலையில் இன்று புவியியல் நிபுணர்கள் ஆய்வு செய்த பிறகே, திருக்கார்த்திகை அன்று 2500 பேருக்கு மலையேற அனுமதி அளிக்கப்படுமா என்பது தெரிவிக்கப்படும்' என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Naagarazan Ramaswamy
டிச 09, 2024 04:28

Settlement near the base of the hill should be vacated. This is not one year affair. Rains may come again in big measure. Hence, to avoid repeated accident, the houses close to the base of the hill up to about 3 m should be prohibited, by the Govt. The current residents can be give nately safe locations


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 08, 2024 16:57

வேறு எந்த மலையிலும் மழை பெய்து மண்சரிவு ஏற்பட்டதில்லையா? அங்கெல்லாம் ஆராய்ச்சிக்கு ஆள் அனுப்பியதா அரசு?


SRINIVASARAGHAVAN.S
டிச 09, 2024 11:31

சரியான கேள்விதான். இதற்கான பதிலும் தாங்கள் அறிந்ததே. கோவில் உத்ஸவங்களையும், நித்ய பூஜைகளையும் சீர்குலைக்கும் வாய்ப்பைத் தேடி பல ஹிந்து த்வேஷிகள் ஆலாய்ப் பறக்கிறார்கள். மலைச் சரிவா ? உத்ஸவத்தை நிறுத்த முயற்சி செய். யானைக்கு மதமா ? கோவில்களில் யானையைத் தடை செய்ய முயற்சி செய். கோவிலில் தீ விபத்தா ? பக்தர்கள் வருகையைத் தடை செய்ய முயற்சி செய். சபரிமலைக் கோவில் சம்ப்ரதாயமா ? வழக்குப் போட்டு அதனை உடைக்க முயற்சி செய். இது போன்று வெளிப்படையாகவே நடப்பதை பலரும் கூற நாம் கேட்டு வருகிறோம்.


வைகுண்டேஸ்வரன்
டிச 08, 2024 14:23

அனுமதி மறுக்கப்படும். 1000 பேர் போனால் போதும் என்று அறிவிப்பு வரும். எல்லோரும், குறிப்பாக கிரிவலம் போகாதவர்களும், தீபம் அன்று கூட்ட நெரிசலில் கோவிலுக்கு போகாதவர்களும், "ஐயோ இந்துக்களுக்கு ஆபத்து " என்று கூவுவார்கள். அதெப்படி இத்தனை பேர் தான் போக வேண்டும் என்று சொல்லலாம்? எல்லோரும் போக வேண்டும் என்று உசுப்பேத்தி விட்டுட்டு ஒரு கும்பல் வீட்டில் இருந்து கொண்டு டி வி யில் தீபம் பார்க்கும்.


Puliyur Raju
டிச 08, 2024 14:21

இந்த குழு உண்மையாகவே மலை ஏறிச் சென்று ஆய்வு செய்கிறதா என்று உள்ளூர் நிருபர்கள் தயவுசெய்து கண்காணிக்கவும்.


Puliyur Raju
டிச 08, 2024 14:16

இந்தக் குழு உண்மையாகவே மலை ஏறிச் சென்று ஆய்வு செய்கிறார்களா என்று உள்ளூர் நிருபர்கள் தயவு செய்து கண்காணிக்கவும்.


rasaa
டிச 08, 2024 13:43

நிலைமை மோசம். இந்த ஆண்டு திருவிழா கிடையாது. மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். இதுதான் தீர்ப்பு.


Ramesh Sargam
டிச 08, 2024 13:08

ஆய்வு செல்ல அத்தனைப்பேர் சொல்லவேண்டுமா? பாரம் தாங்காமல் மீண்டும் நிலச்சரிவு ஏட்பட்டால்...? ஏதோ ஒரு நல்ல முடிவு எடுங்க. தீபம் ஏற்றவாவது அனுமதி கொடுங்க.


kesavan.C.P.
டிச 08, 2024 12:40

நோய் எதிர்ப்பு சக்தி உள்ள சத்துகள் நிறைந்த நெய் உணவாக மாறும் .


சம்பா
டிச 08, 2024 11:59

எனத் தய்யா தரம் தகரம்னுட்டு அனுமதி இல்லனு சொல்லிட்டு போ


aaruthirumalai
டிச 08, 2024 11:25

பயங்கரமான ஆய்வா இருக்கும் போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை