உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநி பஞ்சாமிர்தம்; அலறியடித்து ஓடோடி வந்த தமிழக அரசு

பழநி பஞ்சாமிர்தம்; அலறியடித்து ஓடோடி வந்த தமிழக அரசு

சென்னை: பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்க விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுவது வதந்தி என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

லட்டு

திருப்பதி லட்டு இன்று திரும்பிய பக்கம் எல்லாம் தேசிய அளவில் பேசப்படும் பிரச்னையாக மாறிவிட்டது. லட்டுவில் கலக்கப்பட்டதாக கூறப்படும் நெய் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு டெய்ரி நிறுவனம் அனுப்பியதும் தெரியவந்தது. ஆந்திர அரசு, மத்திய அரசு விளக்கம், அறிக்கை, விசாரணை என்று செல்லும் இந்த விவகாரம் ஆன்மீகம் மீது அதிக நாட்டம் கொண்டவர்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளதாக தெரிகிறது.

பஞ்சாமிர்தம்

இந் நிலையில் திருப்பதி லட்டு பிரச்னைக்கு இணையாக, பழநி பஞ்சாமிர்தம் விவகாரம் எழுந்தது. திருப்பதி லட்டு தயாரிக்க விலங்கு கொழுப்பு கலந்து அனுப்பப்பட்ட நெய்யை அனுப்பிய அதே நிறுவனம்தான், பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யையும் அனுப்புகிறது என்று சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தது.

கடும் அதிர்ச்சி

அதாவது பழநி பஞ்சாமிர்தத்திலும் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்ற ரீதியில் செய்திகள் பரவின. இதை அறிந்த ஆன்மீகவாதிகள் கடும் அதிர்ச்சியில் இருக்க, அதுபோன்ற செய்திகளில் உண்மை இல்லை, அனைத்தும் வதந்தி என்று தமிழக அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்கள்

இது குறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது; திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்ட நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பு கலந்து விற்ற AR Foods பழநி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்யப்படுகிறது என்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.

ஆவின் நெய்

இது முற்றிலும் தவறான செய்தி. பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது என்று அறநிலையத்துறை விளக்கம் அளித்து உள்ளது.இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Minimole P C
செப் 27, 2024 07:08

They say that we buy from Aavin but did not say that we didnt buy from the alleged company.


NATARAJAN R
செப் 25, 2024 19:23

பழனி பஞ்சாமிர்தம் தயார் செய்ய ஆவின் நெய் மட்டுமே வாங்கப்படுகிறது என்று அவசரமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. "ஆவின் ஏதோ உலகத்தரம்" வாய்ந்த நிறுவனம் என்று நினைத்து அரசு அறிவித்துள்ளது. ஆவின் தயாரிப்பு பொருள்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன என்பது எல்லாருக்கும் தெரியும். அடுத்து பழனி அறங்காவலர் குழு கலைக்கப்பட்டது என்று அரசு முன்பே அறிவித்து உள்ளது. பழனி அறங்காவலர் யார் தெரியுமா? திருப்பதி கோவில், நெய் சப்ளை செய்து, புகார் காரணமாக, ஆர்டர் ரத்து செய்யப்பட்ட, ஏ ஆர் நிறுவனங்களின் உரிமையாளர். இவர்கள் அறங்காவலர் குழு, அறங்காவலர் நியமனம் என அனைத்து ஆலயங்களிலும், கண் துடைப்பு நாடகம் நடத்தி, தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும், தேர்வு செய்தார்கள். நான் மருதமலை முருகன் கோவில், அறங்காவலர் பதவி மற்றும் கோவை மாவட்டம் அறங்காவலர் குழு பதவிக்கு விண்ணப்பம் செய்து காத்திருந்தேன். எந்த வித நேர்முக தேர்வும் இன்றி, அவர்களுக்கு வேண்டிய நபர்களை நியமனம் செய்தார்கள். இதுதான் இவர்கள் இந்து ஆலயங்களை பாதுகாக்கும் லட்சணம்.


karthik
செப் 21, 2024 09:08

AR DAIRY FOODS ஓனர் திமுக அரசால் பழனி அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் . .தற்போது அந்த குழு கடந்த மாதம் கலைக்கப்பட்டுள்ளது.. ஏன் கலைக்கப்பட்டது? கடந்த மாதமே திருப்பதி லட்டு நெய் சோதனை விஷயம் தெரிந்து கலைக்கப்பட்டதா? நான்கு லோடு நெய் திருப்பதி கோவில் திருப்பி அனுப்பியதை வெளியில் ஏன் சொல்லவில்லை? எந்த ஊடகமும் சொல்லவில்லை ஏன்?


Murugesan
செப் 21, 2024 00:19

தேவஸ்தான பொருட்களை எவன் வாங்கறான் ,கடைந்தெடுத்த அயோக்கிய திருட்டு அயோக்கியனுங்க தான் அறநிலையத்துறையில் கேவலமான கேடுகெட்ட துறை இந்து கோயில்நசொத்துக்களை திருடிய திராவிட அரசியல்வாதிங்க பண்றிங்க கூட்டம் அவனுங்களே பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போடுகின்ற கேவலமான கேடுகெட்ட அயோக்கிய குடிகார மக்கள்


சமூக நல விரும்பி
செப் 20, 2024 22:16

850 தமிழக அரசு அதிகாரிகளுக்கு போதை மருந்து விககாரத்தில் தொடர்பு இருப்பது இப்போது நிரூபணம் ஆகி விட்டது அதனால் மத்திய அரசு நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது என்று மாடல் அரசுக்கு தெரிந்து விட்டது. அதனால் இப்படி பல செய்திகளை வெளியிட்டு மக்கள் மனநிலையை திசை திருப்ப பார்க்குது திமுக அரசு


Ramesh Sargam
செப் 20, 2024 20:40

திமுக ஆட்சியில் பஞ்சாமிர்தத்துக்கு பதிலாக, தலப்பாக்கட்டு பிரியாணி கொடுத்தாலும் கொடுப்பார்கள் பிரசாதமாக. அதையும் முண்டியடித்து வாங்கி தின்பார்கள் நம் மானம் கெட்ட ஹிந்துக்கள். வெட்கம். வேதனை.


jayvee
செப் 20, 2024 19:34

இனி பல அப்பாவிகள் கைதுகள் குண்டாஸ்க்கள் என்று போலீஸ் பிஸியாகிவிடும் ..திசை திருப்ப எவனாவது இளிச்சயவைய ஹிந்து வை கைதுசெய்து rsb மீடியாக்களுக்கு புது அசைன்மென்ட் கொடுத்து ஆலந்தூர் ஆபாசவயரை பேசவைத்து திசை திருப்பிவிடுவார்கள்


M Ramachandran
செப் 20, 2024 19:08

குத்துதய்யா குடையுதய்யா.


கோவிந்தராக
செப் 20, 2024 17:57

யாரவது பரிசே தனக்கு அனுப்புங்க வெளி மாநில ஆய்வகத்துக்கு தெரிந்து விடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை