உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்றைய ஒழுக்க நடைமுறை வித்தியாசமானது; காதலித்து ஏமாற்றிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

இன்றைய ஒழுக்க நடைமுறை வித்தியாசமானது; காதலித்து ஏமாற்றிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காதலித்த பெண் தொடர்ந்த பலாத்கார வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்றைய ஒழுக்க நடைமுறையே வித்தியாசமாகி விட்டதாக கருத்து தெரிவித்தது.திருமணம் செய்வதாக உறுதி அளித்துவிட்டு, பின் காதலை முறித்துக் கொண்ட ஆண் மீது பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்தார்.திருமண உறுதி அளித்ததாலேயே, அவருடன் உறவு கொண்டதாகவும் தற்போது ஏமாற்றியதால் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் தண்டனை அளிக்கும்படியும் மனுவில் கோரி இருந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், ராஜேஷ் பிந்தால் அமர்வு முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:இன்றைய ஒழுக்க நடைமுறைகளே வித்தியாசமாகி விட்டது. முறிந்து போகும் உறவை அந்தப் பெண் ஏற்றாரா? தோல்வியடையும் காதல் உறவில், இரு தரப்பினருமே பாலியல் உறவை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேஜரான ஒரு பெண், திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றப்பட்டிருக்கக் கூடாது. ஒழுக்கம், நல்லொழுக்கம் போன்றவை எல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு வித்தியாசமாக தெரிகிறது. நீங்கள் கூறும் கருத்தை ஏற்றால், கல்லூரியில் மாணவர், மாணவி இடையிலான எந்தவொரு உறவும் கூட தண்டனைக்குரியதாகி விடும்.காதலை முறித்துக் கொள்ள முடியும் எனும் போது உடலுறவை ஏற்றுக் கொண்டிருக்கிறார். சில நேரங்களில், பழமைவாத ஒழுக்க அமைப்பின் குறைபாடு காரணமாக, இதுபோன்ற புகார்களில் ஆண் மீது பழி சுமத்தப்படுகிறது. எந்தவொரு தோல்வியுறும் காதலும் இந்த அளவுக்கு தண்டிக்கப்பட முடியுமா?இவ்வாறு தெரிவித்தனர்.இதையடுத்து, பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாதவி திவான், ''இது ஒரு காதல் உறவு அல்ல என்பதால்தான் முறிந்து விட்டது. இது ஏற்பாடு செய்யப்பட்ட உறவு. இந்த விஷயத்தில் பெண்ணின் சம்மதத்தை, சுதந்திரமான சம்மதம் என கூற முடியாது.''சம்மதிக்காவிட்டால், திருமணம் செய்ய மாட்டார் என நம்பினாள். ஆணுக்கு சாதாரண உடலுறவாக இருக்கலாம். பெண்ணுக்கு அப்படி இல்லை,'' என்றார். இதையடுத்து, நீதிபதி சுந்தரேஷ், “இந்த சூழ்நிலையை பாலின தொடர்பின்றி, இரு தரப்பு கண்ணோட்டத்தில் ஆராய வேண்டும். என் மகள் இந்த நிலையில் இருந்தாலும் கூட, நான் ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.''இந்த விஷயத்தில், இவ்வளவு பலவீனமான விஷயங்களைக் கொண்டு பாலியல் வன்கொடுமைக்கான தண்டனையை அளிக்க முடியுமா?” என்றார். மேலும், ''இறுதியாக, அந்தப் பெண் தான் பாதிக்கப்பட்டவள்,'' எனக் கூறிய நீதிபதிகள், குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கக் கோரிய ஆணின் மனு மீது தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Varadarajan Nagarajan
ஏப் 03, 2025 07:18

பெண்களுக்கான திருமண வயது 21 என சட்டம் சொல்லும்போதும், பெற்றோர்கள் சம்மதம் இல்லாத பதிவுத் திருமணங்களை சட்டம் ஏற்றுக்கொள்ளும்போதும் பெண்ணின் வயதைக்கருத்தில்கொண்டு அவர்களுக்கு திருமணத்தில் முடிவெடுக்க அனுமதிக்கின்றது. அதாவது முடிவெடுக்கும் திறமையும் முழு பொறுப்பும் பெண்ணினுடையது என ஏற்றுக்கொள்ளும்போது உடலுறவை என்ற விஷயத்தில் மட்டும் பெண்ணிற்கு எதுவுமே அறியாமல் நடந்தது போல் சட்டம் ஆணை மட்டும் குற்றவாளியாக பார்ப்பது ஏற்றுக் கொள்ளமுடியாது. இன்றைய காலகட்டத்தில் பலாத்காரம் தவிர மாற்று உடலுறவு விஷயத்தில் ஆண் பெண் இருவருரின் சம்மதத்துடன் நடைபெறுவதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த சட்டப்பிரிவைக்கொண்டு நிறைய ஆண்கள் பழிவாங்கப் படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது


D.Ambujavalli
ஏப் 03, 2025 06:02

காதலில் ஒருவரை ஒருவர் எவ்வளவுதான் நம்பினாலும், தங்களுக்கென ஒரு எல்லையை வகுத்துக்கொள்ளாவிட்டால் பாதிப்பு பெண்ணுக்குத்தான். அப்படி உடலுக்காக அலைபவனின் காதல் முறிந்தாலும் நஷ்டமில்லை என்று தன்னைத்தான் காத்துக்கொள்ள வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை