உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்கள் தாமதம்: ஆவடி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருப்பு

ரயில்கள் தாமதம்: ஆவடி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆவடி ரயில் நிலையத்தில் ரயி்ல்கள் வர தாமதம் ஆனதால் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில்களுக்காக காத்திருக்கின்றனர்.வெளியூர் ரயில்கள் சென்னை சென்ட்ரலிருந்து புறப்படும் சில ரயில்கள் ஆவடி ரயி்ல் நிலையத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில்கள் 12 மணி புறப்படும் என கூறப்படுகிறது. இதனால் ரயில் புறப்பட தாமதமானதால், வெளியூர் செல்வதற்காக அங்கு பெண்கள், குழந்தைகள் போதிய வசதி இல்லாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர். சென்னையில் வாடகை கார்கள், டாக்ஸிகள் இயக்கப்படாததால், விமான நிலையம் செல்பவர்களுக்கு அரசு பேருந்து ஏற்பாடு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சாண்டில்யன்
அக் 17, 2024 16:47

குறைந்த கட்டணத்தில் சுபர்பன் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகத்துக்குஆர்வமில்லை இனி அவைகளை நம்பி பிரயோஜனமில்லை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இதற்கு இழப்பீடு தருவதை நிறுத்தி விட்டார்கள் போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை