உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சனிக்கிழமை மட்டும் வெளியே வரும் நபர் நான் அல்ல: விஜய்யை சீண்டிய உதயநிதி

சனிக்கிழமை மட்டும் வெளியே வரும் நபர் நான் அல்ல: விஜய்யை சீண்டிய உதயநிதி

சென்னை; வாரத்தில் 5 நாட்கள் வெளியூரில்தான் இருப்பேன். சனிக்கிழமை மட்டும் வெளியே வரும் நபர் அல்ல என்று துணை முதல்வர் உதயநிதி, தவெக தலைவர் நடிகர் விஜயை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது; தமிழகம் முழுக்க 1 கோடியே 20 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் 2023ம் ஆண்டு ஆரம்பித்த திட்டம், இப்போது 2025 செப்டம்பர் மாதம் ஆகிவிட்டது. ஒவ்வொரு மகளிருக்கும் 24 ஆயிரம் ரூபாய் முதல்வர் கொடுத்துள்ளார். நான் பல மாவட்டங்களில் மக்களை சந்திக்கிறேன். வாரத்தில் 4, 5 நாட்கள் வெளியில் சுற்றுகிறேன். நான் வெறும் சனிக்கிழமை, சனிக்கிழமை மட்டுமே வெளியே வருபவன் நான் அல்ல. ஞாயிற்றுக்கிழமை கூட வெளியில் சுற்றிக் கொண்டு இருப்பேன். இன்றைக்கு என்ன கிழமை என்று கூட தெரியாது.நான் பல மாவட்டங்களுக்கு போகும் போது மக்கள் கூட்டமாக நிற்பார்கள். வண்டியை நிறுத்தச் சொல்வேன். மனுக்களோடு நிறைய பேர் வருவார்கள், வாழ்த்துவார்கள். தம்பி..அப்பாவிடம் சொல்லிவிடு. ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது, தேங்க்ஸ் என்று கும்பல், கும்பலாக வந்து சொல்லிவிட்டு செல்வார்கள்.ஆயிரம் ரூபாயை என்ன செய்வீர்கள் என்று நான் அவர்களிடம் கேட்பேன், 90 சதவீதம் பேர் மருத்துவச் செலவுக்கு பயன்படுகிறது, மாத்திரை வாங்குகிறேன், பேரன், பேத்தி கல்வி செலவுக்கு பயன்படுகிறது என்று சொல்கின்றனர்.சிலர் வரவில்லை, எதனால் என்று சொல்ல மாட்டேன் என்கிறார்கள் என்று கூறுவார்கள். நிச்சயம் சொல்கிறேன், முதல்வர் சில விதிகளை தளர்த்திவிட்டார். இன்னும் இரண்டு மாதங்களில் கூடுதலாக தகுதி வாய்ந்த நிறைய மகளிருக்கு உரிமை தொகையை முதல்வர் கொடுப்பார். இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Nathansamwi
செப் 26, 2025 21:08

மற்ற நாளெல்லாம் வந்து இவரு என்ன சாதிச்சிட்டாராம் ? மக்களை பார்த்ததை விட சினிமா கூட்டத்துக்கு போனது தான் அதிகம் ....


sankaranarayanan
செப் 26, 2025 21:00

சனிக்கிழமை மட்டும் வெளியே வரும் நபர் அல்ல இதெல்லாம் ஓர் அரசியல் வியாதிக்கு ஒரு பேச்சா. எப்போ வந்தால் என்ன அந்த இரண்டு நாட்கள் அவர் மக்களை சந்தித்து வாரம் ஏழுநாட்களுக்கு சந்திப்பதுபோன்றே மக்கள் கருதுகிறார்கள் கழகம் கருதா விட்டால் அது உங்களுடைய துர்பாக்கியம்


எஸ் எஸ்
செப் 26, 2025 20:43

சனிக்கிழமை மட்டும் வரும்போதே இப்படி அதிருகிறது அவர் தினம் வந்தால் என்ன ஆகுமோ?


R.MURALIKRISHNAN
செப் 26, 2025 21:37

டிராபிக் ஜாமை தவிர ஒன்றும் ஆகாது


Vasan
செப் 26, 2025 19:42

அன்பு சகோதரர் உதயநிதி அவர்களே, விஜய் இப்பொழுது வாரத்திற்கு ஒரு முறை வெளியே வருகிறார். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வாரம் இரு முறை வெளியே வருவார். மார்ச் மாதத்தில் வாரம் மூன்று முறை வெளியே வருவார். ஏப்ரல் மாதத்தில் நான்கு நாட்கள் வெளியே வருவார். மே மாதத்தில் ஆட்சி அமைத்து ஏழு நாட்களும் வெளியே வருவார்.


குடிகாரன்
செப் 26, 2025 19:34

திருட்டு திராவிட கும்பல்


அருண் பிரகாஷ் மதுரை
செப் 26, 2025 19:22

மனுக்கள் கொடுப்பார்கள் என்று கூறும் இவர் அந்த மனுவிற்கு என்ன நடவடிக்கை எடுத்தார் என்று கூறினாரா.எப்போ பார்த்தாலும் 1000 கொடுத்தோம் என்று சொல்லியே காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்.. உங்களுடன் ஸ்டாலின் சிறப்பாக போய்க் கொண்டு இருக்கிறது என்று கூறுகிறீர்கள்.. அப்புறம் ஏன் திரும்ப திரும்ப மனு கொடுக்கிறார்கள்..எங்கும் எந்த வேலையும் ஒழுங்காக நடக்கவில்லை.. ஆனால் வெட்டிப் பேச்சு, தற்பெருமை இதை தவிர அப்பாவும் மகனும் ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை