உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஸ் ஊழியர் ஊதிய ஒப்பந்தம் தாமதம்; போராட்டத்துக்கு தயாராகும் சங்கங்கள்

பஸ் ஊழியர் ஊதிய ஒப்பந்தம் தாமதம்; போராட்டத்துக்கு தயாராகும் சங்கங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் தாமதமாவதால், அடுத்தகட்டமாக போராட்டங்களில் தொழிற்சங்கங்கள் ஈடுபட உள்ளன.அரசு போக்குவரத்து கழகங்களில், 1.43 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், அடுத்த ஊதிய ஒப்பந்தம் போடப்படவில்லை. தொழிற்சங்கங்களின் பல கட்ட போராட்டங்களுக்கு பின், ஊதிய ஒப்பந்தத்துக்கான முதல்கட்ட முத்தரப்பு பேச்சு, சென்னை குரோம்பேட்டையில், ஜூலை 27ல் நடந்தது. முதல் கூட்டம் என்பதால், தொழிற்சங்கங்கள் தரப்பில் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சு, ஒரு வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை நடத்தப்படாததால் ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, சி.ஐ.டி.யு., தொழிற்சங்க பொதுச்செயலர் ஆறுமுகநயினார் கூறியதாவது: முதல்கட்ட முத்தரப்பு பேச்சில், தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஓய்வூதியர்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்; போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத்தை அரசு ஏற்க வேண்டும்; தனியார்மயமாக்கல் கூடாது உள்ளிட்டவை குறித்து பேசினோம்.அடுத்தகட்ட பேச்சு, 10 நாளில் துவங்கும் என அறிவித்தது நிர்வாகம்; தற்போது மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது. இன்னும் அடுத்தகட்ட பேச்சுக்கான தேதியை கூட அறிவிக்கவில்லை. இது, ஒட்டுமொத்த போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் இணைந்து கூட்டம் நடத்த உள்ளோம். அதில், போராட்டங்கள் குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தீபாவளி பண்டிகையொட்டி, சிறப்பு பஸ்கள் இயக்குவதில் நிர்வாகம் கவனம் செலுத்தியதால், தாமதம் ஏற்பட்டது. அடுத்தகட்ட பேச்சு தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

J.Isaac
நவ 12, 2024 21:51

கர்நாடகாவில் பி எம் டி சி, கே எஸ் ஆர் டி சி யில் தொழிற்சங்கங்களே கிடையாது.


S.L.Narasimman
நவ 12, 2024 08:28

கார் ரேசு வெற்றிகரமா நடத்தி முடிச்சதிலே தொழிலாளார்களின் பாதி பிரச்சனை தீர்ந்திருக்கும். இனி பேனா ஒன்னை கடலில் வச்சிட்டா மீதி பிரச்சனையும் முடிஞ்சிறும். அப்புறம் குடும்பத்தோடு ஓட்டு போடவேண்டியதுதான்.


sridhar
நவ 12, 2024 07:11

எல்லாத்துக்கும் சேர்த்துதான் குடும்பத்துக்கு மாசம் ஆயிரம் ருபாய் திட்டம் . சும்மா சும்மா சம்பள உயர்வு கேட்காதீங்க . வேற எந்த செலவுக்கும் பணம் கிடையாது . வழக்கம் போல சமத்தா திமுகவுக்கு வோட்டு போட்டுட்டு போங்க . ஆயிரம் கோடி செலவுல கலைஞர் பூங்கா கட்டறோம் , அப்புறம் உங்க கஷ்டம் எல்லாம் தீர்ந்துடும் .


Kasimani Baskaran
நவ 12, 2024 05:28

அடுத்த ஆண்டு முடிந்தும் சம்பளம் தெரியாமல் வேலை பார்க்கும் இவர்கள் மாடல் ஆட்சியின் நிர்வாகத்திறமைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை