உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வைகோ அதை சொல்லியிருக்க கூடாது: கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா பேட்டி

வைகோ அதை சொல்லியிருக்க கூடாது: கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா பேட்டி

காஞ்சிபுரம்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாயில் இருந்து அந்த வார்த்தை வந்திருக்கக் கூடாது என்று மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா கூறினார்.கட்சிக்கு விரோதம் செய்ததன் அடிப்படையில் மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கப்பட்டதாக, அக்கட்சியில் பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை அறிவித்தார்.இதனை தொடர்ந்து, மல்லை சத்யா காஞ்சிபுரத்தில் அளித்த பேட்டி:'என் மீது சுமத்தியிருக்கின்ற குற்றச்சாட்டு அபாண்டமான குற்றச்சாட்டு, எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது, ஜனநாயகப் பண்பு கொண்ட தலைவர் வைகோவின் வாயில் இருந்து அந்த வார்த்தை வந்திருக்கக் கூடாது என்பது நாட்டு மக்களின் கருத்தாகவும், அரசியல் பார்வையாளர்கள் கருத்தாகவும் உள்ளது,எந்த லட்சியத்திற்காக கழகத்தை தோற்றுவித்தாரோ அந்த லட்சியத்தை அடையவதில் உறுதியாக உள்ளோம்.கொள்கைக்காக போராடுவோம். நாங்கள் கருத்தியல் ரீதியாக மாறவில்லை. வைகோ, அவரது மகன் வருகைக்கு பின் மாறிவிட்டார்,' என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Chandhra Mouleeswaran MK
செப் 08, 2025 23:18

அண்ணாத்துரை வாரிசு அரசியலைக் கொண்டு வந்த ஈவெராமசாமியை எதிர்த்து திமுகவை ஆரம்பித்தது வைக்கோ பால்ச்சாமி கருணாநிதி கொண்டு வந்த வாரிசு அரசியலை எதிர்த்து மதிமுகவை ஆரம்பித்தது அரசியல் கட்சிகள் எல்லாமே, பிஜேபி நீங்கலாக, அவரவர் குடும்பக் கம்பேனிகள் தாணே? அப்படி இருக்கையில் வாரிசுதானே கம்பேனியைக் கண்ணும் கருத்துமாக நடத்த முடியும்? வாரிசுவளை அடுத்த தலைவராகக் கொண்டு வருவதற்கு முழு முதற் காரணமே கட்சியில் தலீவரது கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்கள் தானே? வெளியாளைத் தலைவராக விட்டால் கணக்கு வழக்கு உதைக்குமே நிறையப் பணம் திருப்பித் தரவேண்டி வந்து விடுமே அதைவிட அதுவரை அடித்த கொள்ளைகளைப் பலர் அறிய அறிவிக்க வேண்டி வரும் எம்ஜியார் கணக்குக் கேட்டபோது கருணாநிதி கணக்குத் தராததற்கு, அதாவது கணக்கைத் தர முடியாத நிலைக்கு இருந்தபோது, அதுமட்டுமேதானே காரணம்


Arasu
செப் 08, 2025 22:51

மிகவும் சரி


KR india
செப் 08, 2025 20:21

முன்பு, திரு.வைகோ அவர்கள், அடிக்கடி கூறுவது, கருணாநிதி, தனது மகன் ஸ்டாலின்-க்கு பட்டாபிஷேகம் செய்விக்க, நான் இடையூறாக இருப்பதாக கருதி, தி.மு.க வில் இருந்து கொலைப்பழி சுமத்தி, வெளியேற்றப்பட்டேன் என்றும், எனது இளமை காலத்தை எல்லாம், தி.மு.க விற்கு உழைத்து தொலைத்து விட்டேன் என்றும் பல பேட்டிகள் மற்றும் பொது மேடைகளில் கூறி இருந்தார். இன்று, அவரே, தன் மகனுக்கு "பட்டாபிஷேகம்" செய்ய, 30 வருடங்களுக்கும் மேலாக, ம.தி.மு.க கட்சிக்காக இரவு பகலாக உழைத்த உண்மையான உழைப்பாளி மல்லை சத்யா அவர்களை "துரோகி" பட்டம் சுமத்தி வெளியேற்றி உள்ளார். அன்று, திரு.கருணாநிதி மீது, திரு.வைகோ கூறிய குற்றச்சாட்டாவது, ஓரளவு ஏற்க கூடியதாக இருந்தது. ஆனால், மல்லை சத்யா மீது, "வலுவான குற்றச்சாட்டு" எதுவும் இல்லை. ம.தி.மு.க என்றாலே, திரு.வைகோ-வுக்கு அடுத்த படியாக, அறியப்பட்டவர், திரு.மல்லை சத்யா தான். "வாரிசு அரசியலுக்கு" வளைந்து கொடுக்காததால், கட்சியை விட்டு தூக்கி எறியப் பட்டார் என்று நாளைய வரலாறு கூறும். அந்தோ பரிதாபம் வாழ்க உட்கட்சி ஜனநாயகம் ?