உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது

பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது

மரக்காணம்: பட்டா மாற்றம் செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓ.,வை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், முன்னுாரை சேர்ந்தவர் சுரேந்தர், ஆட்டோ ஓட்டுநர். குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். சில மாதங்களுக்கு முன் ஆலங்குப்பத்தில், தன் மனைவி பெயரில், வீட்டு மனைக்கு பட்டா மாற்றம் செய்ய கணினி மூலம் பதிவு செய்து இருந்தார்.ஆனால், பட்டா மாற்றம் செய்யாமல், ஆலங்குப்பம் வி.ஏ.ஓ., சரவணன் தாமதம் செய்து வந்தார். அவர், சுரேந்தரிடம், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இந்த விவரத்தை சுரேந்தர், விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.போலீசார், சுரேந்தரிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை சரவணனிடம் மதியம் சுரேந்தர் கொடுத்தார். பணத்தை பெற்ற சரவணனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

NSRamesh
டிச 24, 2025 21:53

ஏன் இந்த வி ஏ ஓ- க்கள் மட்டுமே மாட்டிக் கொள்கிறார்கள்? பங்கு என்னமோ ஆர். ஐ, தாசில்தார் என பல நிலைகளில் போட்டுக் கொள்வார்கள். ஏன் அவர்களை பற்றிய செய்தியோ கைதோ? வருவதில்லை?


Raghavan
டிச 25, 2025 00:09

VAO மாட்டிக்கொண்டதால் அவருக்கு மேல் உள்ள அதிகாரிகள் இவருக்கு பட்டா கொடுப்பதற்கு முட்டுக்கட்டையாக இருப்பார்கள். இவரால் இந்த ஜென்மத்தில் பட்ட வாங்க முடியாது. உதவி தாசில்தார் தாசில்தார் எல்லோரும் VAO மூலமாகத்தான் லஞ்சம் பெறுகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை