உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாருடன் கூட்டணி என இனி கேட்காதீங்க; தெளிவாகச் சொன்னார் திருமாவளவன்!

யாருடன் கூட்டணி என இனி கேட்காதீங்க; தெளிவாகச் சொன்னார் திருமாவளவன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் இருக்கும். இனி யாருடன் கூட்டணி என்று எங்களிடம் கேட்காதீர்கள் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக கூறி உள்ளார். திருச்சியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=biauapmn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கட்சி, கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்வை. ஏற்கனவே நாங்கள் தொடர்ந்து 7 ஆண்டுகளாக தி.மு.க., கூட்டணியில் வெற்றிகரமாக இருக்கிறோம். அகில இந்திய அளவில் இண்டியா கூட்டணியில் உள்ளோம்.இந்த இரண்டு கூட்டணிகளை உருவாக்கியதில் விடுதலை சிறுத்தைகளுக்கு பங்கு உள்ளது. எனவே நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும், அதை வெற்றிகரமாக முன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் தான் எங்கள் கவனம் இருக்கிறது.இந்த கூட்டணியை விட்டுவிட்டு, வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவை இல்லை. இதை பலமுறை நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். வேண்டும் என்றே, திட்டமிட்டே விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். எங்களின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்க முயற்சிக்கிறார்கள். இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த ஊசலாட்டமும் இல்லை. நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். இந்த கூட்டணியை சிதறடிக்க வேண்டிய தேவை விடுதலை சிறுத்தைகளுக்கு எங்கிருந்து எழுந்தது.யாரோ எவரோ போகிற போக்கில் ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்லி, சந்தேகத்தை எழுப்புவது ஏற்புடையது அல்ல. அதை 100 விழுக்காடு நான் மறுக்கிறேன். 2026ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் தி.மு.க., கூட்டணியில் தான் இடம்பெறும். இதில் கேள்விக்கே இடமில்லை, இனி யாரும் அப்படி ஒரு கேள்வியை எழுப்ப வேண்டாம்.டிசம்பர் 6ம் தேதி புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்கிறேன் என்பது ஓராண்டுக்கு முன்பே எடுத்த முடிவு. விழாவில் பங்கேற்க இசைவு அளித்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது. ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி இந்த புத்தகம் வெளியிடுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.ஏப்ரல் 14ம் தேதி வெளியீடு நடைபெறுவதாக இருந்திருந்தால் முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று வெளியீட்டாளர்கள் சொல்லி இருந்தார்கள். ராகுல் காந்தியையும் அழைக்கிறோம் என்று திட்டமிட்டு இருந்ததாக கூறி இருந்தனர். என்னிடமும் புத்தகத்துக்காக கட்டுரை கேட்டிருந்தார்கள். ஆகவே இந்த புத்தக வெளியீட்டு விழா இப்போது முடிவானதல்ல.முதல்வருக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்கள் என எனக்கு தகவல் சொல்லப்பட்டு இருந்தது. இப்போது ஒருசில வாரங்களுக்கு முன்பு, த.வெ.க., மாநாடு நடைபெறுவதற்கு முன்பு விஜயை அழைக்க இருக்கிறோம், அவர் வருவார் என்று தகவல் சொன்னார்கள். ரஜினிகாந்தும் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது என்றும் தகவல் சொன்னார்கள். இப்படித்தான் எங்களிடம் சொல்லப்பட்டது. நாங்களும் அதற்கு இசைவு அளித்திருந்தோம்.இப்போது நடிகர் விஜய் பங்கேற்க போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி அதை நாங்கள் முடிவு செய்வோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

sankar
நவ 12, 2024 12:27

ஆமாம் - அப்புறம் அவரே சொல்வார்


சாண்டில்யன்
நவ 06, 2024 16:52

நம்ம மெரட்டலாம்னு பாத்தா நம்மள அநியாயமா ஆளாளுக்கு மெரட்டிட்டானுங்களே துண்டு வாணாம் கைகுட்டை கெடைச்சாலே போதும்னு பண்ணிட்டாங்கப்பா


Jay
நவ 05, 2024 21:56

அவ்வளவுதானாவா...நடந்த நாடகங்கள்? ஆட்சியில் பங்குனு பேசியதெல்லாம்? வாயை அடைக்கும் டானிக் கிடைத்துவிட்டதா?


தாமரை மலர்கிறது
நவ 05, 2024 21:12

திருமா திமுக அணியிலிருந்து விலகி பிஜேபி அல்லது அதிமுக, விஜய் கூட்டணியில் சேர்வது அவரது கட்சிக்கு நல்லது. ஏற்கனவே ஆதவ் அர்ஜுனா பண்ணிய வேலையால், திமுக சிறுத்தையை எலியாக்க திட்டம் போட்டுள்ளது.


M Ramachandran
நவ 05, 2024 20:40

திருமா காட்டிலே மழை. நல்லா காலை கட்டிக்கிட்டு இந்த தேர்தலுடன் செட்டில் ஆகிட வேண்டியது தான் . முன்பு போல எஜமான் பார்த்து கூடுங்க என்று தான் கேட்க வேண்டிய அவசியமில்லை. பெரிய தொகை மடியிலேயெ வந்து விழும்.


சாண்டில்யன்
நவ 06, 2024 18:30

இந்த நினைப்புதான் பொழப்ப கெடுத்துடுச்சு


தமிழன்
நவ 05, 2024 20:32

சிறுத்தைகள் பூனைகள் ஆகும்மா


Vijay D Ratnam
நவ 05, 2024 18:47

என்ன தலிவா பொசுக்குன்னு இப்டி சொல்ட. நாளைக்கு இவிங்கள விட அவிங்க பத்து கோடி அதிகம் கொடுக்கலாம். அவுங்களவிட மேலே உள்ளவிங்க கூட பத்து கோடி கொடுக்கலாம். பெட்டிக்குத்தானே ஜாதியை வச்சி 40 வருஷமா பொழப்பு நடத்திக்கிட்டு இருக்கீங்க. இப்படி சொன்னா ஜப்தி ரோட்ல டீல் முடிஞ்சிடுமே.


Narasimhan
நவ 05, 2024 18:26

கையெழுத்து வேணுமானாலும் போட்டு தருகிறேன். திமுகவின் நம்பர் ஒன் கொத்தடிமை கூட்டம் நாங்கள்தான் என்று. போய் வேலை வெட்டியை பாருங்க


பாலா
நவ 05, 2024 18:23

கொலைகார ராயபக்சா அளித்த விருந்துக்கு நன்றி தெரிவித்து வந்தவர். இப்பொழுது கொலைகாரா திருட்டுத் திராவிடிய மாதிரிக் கும்பல்களினத்துடன் இருப்பவருக்கு இப்படியான கேள்விகள் மூலம் கிடைக்காது.அதனால் என்ன சொல்வார்?


Rpalnivelu
நவ 05, 2024 17:42

எங்கே பெட்டியோ நானும் அங்கேதான். கொள்கை கூட்டு கொள்ளை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை