உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனைகளை கூட பராமரிக்காமல் என்ன தான் செய்கிறது அரசு: அண்ணாமலை

மருத்துவமனைகளை கூட பராமரிக்காமல் என்ன தான் செய்கிறது அரசு: அண்ணாமலை

சென்னை:'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, சுகாதாரத் துறை தரம் தாழ்ந்து போய் விட்டது' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: ஒரே நாளில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனையிலும், சென்னை வண்ணாரப்பேட்டை மகப்பேறு மருத்துவமனையிலும் மின்சாரம் இல்லை. பராமரிப்பற்ற ஜெனரேட்டரை பயன்படுத்த முடியாமல், மொபைல் போன் வெளிச்சத்தில் மருத்துவம் பார்த்தும், அறுவை சிகிச்சை அறையில் கர்ப்பிணி பெண்ணை உயிருக்கு ஆபத்தான நிலையில் பரிதவிக்க விட்டும், அவல நிலையில் தள்ளியிருக்கிறது, தமிழக சுகாதார துறை. மாநில தலைநகரில் அமைந்துள்ள மகப்பேறு மருத்துவமனையில் கூட, மின்சாரம் துண்டிக்கப்படுவதும், போதிய மாற்று ஏற்பாடுகள் இல்லாததும், தமிழகத்தின் சாபக்கேடு. சட்டசபையில் மின் துறை அமைச்சரும், சுகாதார துறை அமைச்சரும், தங்களுக்கு தாங்களே பாராட்டு பத்திரம் வாசித்து கொண்டிருக்கையில், தமிழகத்தின் உண்மை நிலை இப்படியாகஇருக்கிறது.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, சுகாதார துறை தரம் தாழ்ந்து போய் விட்டது. அடிப்படை தேவையான மருத்துவமனைகளை கூட முறையாக பராமரிக்காமல், நான்கு ஆண்டுகளாக அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறது திமு.க., அரசு.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி