உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ரூ.309 கோடியில் கட்டப்பட்ட கிடங்குகள் எங்கே?

 ரூ.309 கோடியில் கட்டப்பட்ட கிடங்குகள் எங்கே?

நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க, சேமிப்பு கிடங்குகள் மற்றும் உணவு கிடங்குகள் அமைக்க, 309 கோடி ரூபாய் செலவிட்டதாக, தி.மு.க., அரசு கணக்கு காட்டியிருக்கிறதே, எந்த மாவட்டத்தில் எத்தனை கிடங்குகள் அமைக்கப்பட்டது என்பதற்கு, வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? குறித்த நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாமல், வாகனங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், 160 கோடி ரூபாய் ஊழல் செய்ததால், நெல் கொள்முதலில் தாமதம் ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு இன்னும் ஏன் முதல்வரோ, உணவு துறை அமைச்சர் சக்கரபாணியோ பதிலளிக்கவில்லை? கொள்முதல் செய்வதில் தி.மு.க., அரசு ஏற்படுத்திய தாமதத்தால், விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, ஈரப்பதம் அதிகமானதற்கு யார் காரணம்? ஊழலுக்காக, தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கும் தி.மு.க., அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு, மத்திய அரசின் மீது பழிபோட கூச்சமாக இல்லையா? -- அண்ணாமலை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
நவ 21, 2025 07:22

ஊழலுக்காக, தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கும் தி.மு.க., அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு, மத்திய அரசின் மீது பழிபோட கூச்சமாக இல்லையா? என்று அண்ணாமலை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் கூறியுள்ளார். அதற்கு பதில் கிடைக்கப்போவதில்லை. ஏனெனில் ஸ்டாலின் மனதிற்குள் நினைப்பது, கூச்சமா, எனக்கா, அது என்றைக்குமே எங்கள் பரம்பரைக்கே கிடையாதே. எனக்கும் கூச்சமில்லை, எங்கள் குடும்பத்திலுள்ளோர்கள் மற்றும் எங்கள் கட்சியில் உள்ளவர்கள் எவருக்குமே கூச்சமில்லையே.


மேலும் செய்திகள்