உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏழை கைதிக்கு ஜாமின் உத்தரவாதம் வழங்க எந்த அரசு ஊழியர் முன்வருவர்: ஐகோர்ட்

ஏழை கைதிக்கு ஜாமின் உத்தரவாதம் வழங்க எந்த அரசு ஊழியர் முன்வருவர்: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'ஏழை கைதிக்கு ஜாமின் உத்தரவாதம் அளிக்க, எந்த அரசு ஊழியர் முன்வருவர்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.வேலுார் சிறையில் உள்ள பெண் கைதிக்கு ஜாமின் வழங்கி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது; நிபந்தனைகளும் விதித்திருந்தது. ஜாமின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், 300 நாட்களாகியும் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து, பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.இதையடுத்து, ஜாமின் கிடைத்தும் சிறையில் இருந்து வெளியே வர முடியாத கைதிகளின் எண்ணிக்கை குறித்த விபரங்களை தாக்கல் செய்யும்படி, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது. உத்தரவாதம் அளிக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால், 175 கைதிகள் சிறையில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஜாமின் கிடைத்தும் சிறையில் இருப்பது துரதிருஷ்டவசமானது என்று கூறிய நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். உள்துறை செயலர், சிறைத்துறை டி.ஜி.பி., மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலரை, வழக்கில் சேர்த்தனர்.வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, ''தமிழகம் முழுதும், 153 விசாரணை கைதிகள், 22 தண்டனை கைதிகள், உத்தரவாதம் செலுத்த முடியாததால் வெளிவர இயலவில்லை. ''மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து ஜாமின் உத்தரவுகள், சிறைக்கு தாமதமாக அனுப்பப்படுகின்றன. மத்திய அரசு திட்டத்தை பின்பற்றி, ஏழை கைதிகளுக்கு நிதி உதவி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது,” என்றார். ஜாமின் கிடைத்த ஏழு நாட்களில் கைதிகள் வெளிவருவதை உறுதிசெய்ய, சட்டப் பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி, நீதிபதிகள் அறிவுறுத்தினர். கீழமை நீதிமன்றங்கள் ஏழை கைதிகளுக்கு கடுமையான ஜாமின் நிபந்தனைகளை பிறப்பிக்கக்கூடாது எனவும், ஜாமின் உத்தரவாதம் அளிக்க, எந்த அரசு ஊழியர் முன்வருவர் எனவும், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதையடுத்து, தேவையின்றி சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க, சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்யவும், சட்ட உதவி மையங்கள் வாயிலாக மனுத்தாக்கல் செய்வதை உறுதி செய்யவும், உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர், புதுச்சேரி தலைமை செயலர் ஆகியோரை, வழக்கில் நீதிபதிகள் சேர்த்தனர். பதிவுத்துறை உடன் ஒருங்கிணைந்து துரித நடவடிக்கை எடுப்பதாகவும், கைதிகளுக்கு சட்ட உதவி அளிப்பதாகவும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஏழை கைதிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்ட விபரங்கள், நிலுவையில் உள்ளவை குறித்த விபரங்களை அளிக்கவும், தகுதியான கைதிகள் நிதி உதவி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை, ஜனவரி 6க்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Kanns
டிச 10, 2024 19:10

For Most World Maladies, CrlCase Hungry Criminals police & magistrates, News-HungryBiasedMedia, VoteHungryParties are Responsible. Sack & PUNISH Judges Not Giving Unbiased-Quality-Fast Judgements at Cheaper Costs Jr advocates and Not Punishing them, Power-Misusing Rulers, Stooge Officials& Vested FALSE COMPLAINT GANGS women, unions/groups, SCs, advocates etc. Appoint Only Acquitted NonAdvocate Citizens as Judges with post-Selection Law Trainings & Promotions till SC purely on above Merits. ABOLISH failed POLICE SUPERIORS


joe
டிச 10, 2024 17:02

வசதி படைத்த ஊழல்வாதிகளுக்கு காவல் துறை சப்போர்ட் செய்வதாலும் இப்படி நடக்கலாம் .காவல் துறையில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் சுறுசுறுப்பாக பணியாற்றி ஊழல் அதிகாரிகளையும் ஊழல் காவல் பணியாளர்களையும் உடனுக்குடனே நீக்கவேண்டும்.


அப்பாவி
டிச 10, 2024 16:36

ஆளுக்கு பாஞ்சி லட்சம் போட்டிருந்தா ஏழைன்னு ஒருத்தன் இருப்பானா? முதலில் தப்பே பண்ணி ஜெயிலுக்கு போயிருக்க மாட்டான். அப்படி போயிருந்தாலும் பெயிலுக்கு பணம் கட்டி வெளியே வந்திருப்பான்.


N Sasikumar Yadhav
டிச 10, 2024 17:51

இந்திய தெரியாத கோபாலபுர கொத்தடிமைகள் இன்னும் பாஞ்சிலட்சம் ஓசியாக கிடைக்கும்னு வாயை பிளந்துக் கொண்டு திரியுதுங்க


அப்பாவி
டிச 10, 2024 08:51

அடடா... இருக்கற கேசுங்களை சீக்கிரம் விசாரிச்சு முடிச்சு வெச்சா சிறையில் இருக்கறவங்க எண்ணிக்கை பாதியாயிரும். போட்ரா பத்து பர்சண்ட் காளிக்கை வரி.


அப்பாவி
டிச 10, 2024 08:47

பெரிய ஜீ யைக் கேட்டுப் பாக்கலாம். 140 கிடி நக்களுக்கும் அவரே கதி.


RAAJ68
டிச 10, 2024 08:31

மண்முடி தெரிந்தே தவறு செய்ய வில்லையா..... அவருக்கு எப்படி ஜாமின் கிடைத்தது.


BALACHANDRAN
டிச 10, 2024 08:19

முதலில் தினமலருக்கு நன்றி ஒவ்வொரு அரசு துறையிலும் நீதித்துறையிலும் நிர்வாகத்தில் இருப்பவர்கள் அதை தெளிவாக மேல் அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் யார் யாரை கேட்பது நம்ம சொன்ன கருத்தை அவர் தெளிவாக விரிவாக நடைமுறைப்படுத்துவாரா இதில் ஏற்படும் காலதாமதம் எதற்காக சிறையில் அடைக்கப்பட்டாரோ அவரிடம் யாரும் கவுன்சிலிங் எடுக்கப்படவில்லை இந்த மாதிரி நீதிபதிகள் முன்வந்து செய்யும்பொழுது தர்மம் நிலைத்து நிற்கும்


Nandakumar Naidu.
டிச 10, 2024 07:42

தவறு செய்யும் போது ஏழை என்று தெரியவில்லையா? தவறு செய்யாமல் பொய்வழுக்குகளில் சிறையில் இருந்தால் இவர் சொல்வது சரிதான். ஆனால், தெரிந்தே தவறு செய்திருந்தால் இருக்கட்டுமே சிறையில்.


rasaa
டிச 10, 2024 08:51

இவரின் கருத்தில் உள்நோக்கம் உள்ளது. தியாகி அமைச்சர் உள்ளேயே இருக்கட்டும் என எண்ணுகின்றாரா?


ديفيد رافائيل
டிச 10, 2024 09:25

பணம் இருக்குறவங்க தப்பு பண்ணி court மூலம் ஜாமீன்ல வர்றாங்க அவங்க தப்பு மட்டும் தப்பு இல்லையா?


R.RAMACHANDRAN
டிச 10, 2024 07:40

இந்த நாட்டில் குற்றவாளிகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க முன்வருகின்றன நீதி மன்றங்கள்குற்றங்களை அவர்கள்தான் செய்தார்களா அல்லது உண்மை குற்றவாளிகளை பாதுக்காக்க பலி ஆடுகளாக பொய் வழக்கு போட்டு தண்டனை பெற்றுத் தந்தனரா என்பது வேறு விஷயம்.ஆனால் நேர்மையானவர்கள் குற்றவாளிகளுடன் சமரசம் செய்துகொள்ளவில்லை என்பதால் அவர்களை ஒடுக்கும் பணிகளை நீதிமன்றங்களின் பெயரால் செய்கின்றனர் அவற்றில் உள்ள குற்றவாளிகள்.குற்றவாளிகளின் ராஜ்யத்தில் நேர்மையானவர்களுக்கு இடமில்லை.


visu
டிச 10, 2024 07:37

கைது அவசியமற்ற பெரும்பாலான வழக்குகளில் கைது செய்வது ஏன் அதை தவிர்த்தாலே போதும் தவிர நீதிமண்ற நடைமுறைகள் சிறுவழக்குகளில் காலதாமதத்துக்கு காரணமாகின்றன .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை