உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் யாருக்கு கமிஷன் தரப்படுகிறது: உண்மையை உடைக்கிறார் திமுக எம்எல்ஏ

யார் யாருக்கு கமிஷன் தரப்படுகிறது: உண்மையை உடைக்கிறார் திமுக எம்எல்ஏ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: த.வெ.க., தலைவர் விஜய், நேற்று முன்தினம், திருவாரூரில் பேசும் போது, 'டெல்டா மாவட்டங்களில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் கொடுக்குறாங்க. ஆனா, அதுக்கு மேல 40 ரூபாய் கமிஷன் வாங்கறாங்க. இப்படி பல கோடி ரூபாய் கமிஷனா பிடுங்கப்படுது' என பேசினார்.விஜய் பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய திருவாரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பூண்டி கலைவாணன், 'அ.தி.மு.க., ஆட்சி காலத்திலும் மூட்டைக்கு 40 ரூபாய் வசூலித்தனர். இதில் முதல்வருக்கோ, தி.மு.க., அரசுக்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை. 'இந்தத் தொகையை விவசாயிகளிடம் இருந்து பெறுவது, சுமை துாக்கும் தொழிலாளர்கள் தான். விவசாயிகள் தான் விருப்பப்பட்டுக் கொடுக்கின்றனர். விருப்பப்பட்டுக் கொடுத்தாலும், விவசாயிகளுக்கு பாதிப்பு இருப்பதால், அதை கட்டுப்படுத்தும் வழிகளை அரசு யோசித்து வருகிறது' என்று தெரிவித்தார். இது, சுமை துாக்கும் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்ட சுமை துாக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:மூட்டையை எடுத்து செல்லும் லாரி டிரைவர்களுக்கு மாமூல்; ஆய்வுக்கு வரும் அரசு அதிகாரிகளுக்கு மாமூல், நெல் எடையிழப்பு ஏற்படாமல் சமாளிக்க மாமூல் என, நெல்லை விற்க வரும் விவசாயிகளிடம் லஞ்சமாக வாங்குகின்றனர். நெல்லை கொள்முதல் செய்யும் பணியாளர்கள், நேரடியாக அந்த பணத்தை விவசாயிகளிடம் வாங்கினால், லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் சிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், சுமை துாக்கும் தொழிலாளர்களை, கருவியாக பயன்படுத்துகின்றனர்.நெல் கொள்முதல் செய்யும் அலுவலர் முதல், நெல்லை குடோனுக்கு கொண்டு செல்வது வரை, அதிகாரிகள் பலருக்கும் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது.இந்த லஞ்சத்தை சுமை துாக்கும் தொழிலாளர்கள் வாயிலாக அலுவலர்கள் வாங்குவதால், விவசாயிகள், சுமை துாக்கும் தொழிலாளர்கள் மீது எரிச்சல் அடைந்துள்ளனர். இந்த உண்மை புரியாமல், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், சுமை துாக்கும் தொழிலாளர்கள் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Rajan
செப் 24, 2025 00:58

விவசாயிகள் வயிற்றில் அடித்து பிடுங்க வேண்டியது அவன் ஏன்டா இந்த பொழப்பு நமக்குன்னு விட்டுட்டு போகும் அளவுக்கு செய்யவேண்டியது. பிறகு உழவுத்தொழில் முதுகெலும்பு அப்படி இப்படின்னு மைக்க பிடிச்சிக்கிட்டு கதைவிட வேண்டியது.....


Raghavan
செப் 22, 2025 13:57

தினமலரில் இது உங்கள் இடத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு சாதாரண போலீஸ்காரர் ஒரு செய்தி எழுதியிருந்தார். அது என்னவென்றால் அந்த போலீஸ் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் எல்லோரும் லஞ்சம் வாங்கி கிரேடுக்கு தகுந்தாற்போல் பிரித்துக்கொள்ளுவார்கள். அப்படி பிரிக்கும்போது இந்த போலீஸ்காரருக்கும் ஒரு பங்கு பிரிப்பார்கள். ஆனால் அவர் தனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிடுவார். சில வருடங்களுக்குப்பிறகு மற்றவர்கள் ஓய்வு பெற்று செல்ல இவர் பதவி உயர்வு பெற்று இன்ஸ்பெக்டராக ஒரு ஊரில் இருக்கும்போது ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரை பார்த்து எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்க அவர் என்பையன் படிக்காமல் ஊதாரியாகவும் என் பெண் கல்யாணமாகி 6 வருடங்களுக்குள் அவருடைய கணவர் இறந்துவிட கையில் ஒரு குழந்தையுடன் என்னிடம் இருக்கிறாள். என்னுடைய மனைவிக்கு பக்கவாதம் வந்து படுத்தப்படுக்கையாக உள்ளாள். எனக்கும் ரத்தஅழுத்தம் சர்க்கரை நோய் உள்ளது என்று சொல்லியுள்ளார். பிறகு நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்க அவர் என்பையன் படித்துவிட்டு ஒரு பெரிய I.T கம்பெனியில் கைநிறைய சம்பாதிக்கிறான் பெண்ணையும் நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்துவிட்டேன் இதுவரை நான் மருத்துவரிடம் போனதில்லை பையனுக்கும் நல்ல இடத்தில் பெண் பார்த்தது இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவரிடம் நான்தான் அப்பொழுதே சொன்னேன் நீங்கள் யாரும் என்பேச்சை கேட்காமல் லஞ்சம் வாங்கியதால் தான் உங்களுக்கு இப்போது இவ்வளவு இன்னல்கள் என்றார். அரசு அன்று கொள்ளும் தெய்வம் நின்று கொள்ளும்.


Chandru
செப் 22, 2025 13:34

கேவலத்தின் மறுபெயர் திமுக . இது அடுத்த வருடம் ஒழிக்க பட vendum


Ramesh Sargam
செப் 22, 2025 13:16

திமுக ஆட்சியில் இறந்த உடலை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் கூட லஞ்சம் வாங்குகிறார்கள். அதைப்பற்றியும் ஒரு விரிவான செய்தி வெளியிடவேண்டும்.


Muralidharan S
செப் 22, 2025 12:11

பணம், குவாட்டர், பிரியாணி மற்றும் இலவசங்களை வாங்கிக்கொண்டுதான் ஒட்டு.. நடைபாதைகளையும் பொதுஇடங்களையும் ஆக்ரமித்து, கடைபோடுதல்,, வீடுகட்டிக்கொள்ளுதல் இதற்க்கு மாமூல் வாங்கிக்கொள்ள ஒரு பெரிய கூட்டம் - பல துறைகளில் இருந்து, ரவுடிகள் வரை, தங்கள் தங்கள் வீடுகளின் முன்பு, நடைபாதைகளையும், சாலைகளையும் ஆக்ரமித்து நிரந்தரமாக வண்டி வாகனங்களை நிறுத்திக்கொண்டு சாலையில் நடப்பவர்களுக்கு, வாகனப்போக்குவரத்திற்கும் பெரிய இடைஞ்சலாக இருக்கின்றனர்.. இந்த பொது இடம் இவர்களுக்கு இலவசம்தானே.. பொது இடங்களை, ஏரிகளை, ஆற்றங்கரைகளை, கடற்கரைகளை எல்லாம் இலவசமாக ஆக்ரமித்து குடிசைகளை போட்டுக்கொள்கின்றனர்....இவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றால், இவர்களுக்கு அரசாங்கம் வீடு கட்டிக்கொடுத்தால்தான் அதுவும் இவர்கள் விரும்பும் சௌகரியமான இடத்தில்...இவர்களை அப்புறப்படுத்த முடியும். இதிலும் ஒட்டு வாங்கி அரசியல் வேறு ... இப்படி ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை எல்லா மட்டத்திலும் சாதாரண பொது மக்களே கறைபடிந்த கிடக்கின்றனர்.. சாதாரண பொதுமக்களே இப்படி என்றால், அரசியல்வியாதிகளை பற்றி ஒன்றும் சொல்லவே வேண்டாம்.. இயேசு சொன்னது உங்களில் யார் குற்றம் அற்றவர்களோ / தவறே செய்யாதவர்களோ, அவர்கள் கல் எறியுங்கள் - இங்கே எல்லோருக்கும் பொருந்தும்... மொத்தத்தில் லஞ்சமும் ஊழலும் எல்லோரிடமும் எல்லார் மட்டத்திலும் புற்றுநோய் போல பரவி தீர்க்கமுடியாத நோயாக உள்ளது.


Thravisham
செப் 22, 2025 11:59

காசுக்கு ஆசப்பட்டு திருட்டு த்ரவிஷன்களுக்கு தங்களையே விற்றுவிட்ட சோற்றாலடித்த ...ங்கள் தான் தமிழக மக்கள்


Muralidharan S
செப் 22, 2025 11:36

அரசாங்கத்தில் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கப்படுகிறது.. அதையும் தாண்டி லஞ்சம் வாங்குவது மிகவும் ஈனத்தனமான செயல். நம் நாடு கடைநிலை ஊழியர் முதல் உயர்மட்டம் வரை லஞ்சத்தில் சர்வ நாசமாகி இருக்கிறது... ஊழலும் லஞ்சமும் ஒழியாமல், ஒழிக்காமல் ஒரு நாடு முன்னேறிய நாடாக கண்டிப்பாக மாறவே மாறாது. படித்து விட்டு வேலை கிடைக்காமல் கூட்டமாக இளைய சமுதாயம் இருக்க, அரசாங்க ஊழியர்களுக்கு வேலைக்கு நல்ல சம்பளம், ஓய்வு ஊதியம், இதர சலுகைகள்.. இதை எல்லாம் தாண்டியம் லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால் பேராசைதான். வேறு என்ன சொல்வது.. ஆனால் ஒன்று மட்டும் உறுதி.. லஞ்சப்பணத்தில் ஊறிக்கிடக்கும் இவர்களுக்கு இன்று உல்லாசமாக வாழ்க்கை இருக்கும்... கடைசி காலத்தில் சம்பாரித்த மொத்த பணமும் மருத்துவ செலவுகளுக்கே போய்விடும்....காசு போவது ஒரு புறம் இருக்க உடல் உறுப்புகள் நோயினால் ஒவ்வென்றாக செயலிழந்து படுத்த படுக்கையாக வாழ்க்கைத்தான் மிஞ்சும்.. எல்லாவற்றிற்கும் ஆள் வைத்து வாரும் நிலைமை வரும். லஞ்சப்பேய்களின் குழந்தைகளும் குடும்பமும் எதற்கும் பிரியஜனம் இல்லாமல் போய்விடும்.. லஞ்சப்பேய்களின் லஞ்சப்பணத்தில் வாழும் குடும்பத்தினரரும் பெரிய பெரிய வியாதிகளால் கடைசிகாலம் வரை அவஸ்தைப்படுவார்கள்.. இப்படி சொல்வது நிச்சயமாக வசவோ , சாபமோ கிடையாது.. லஞ்சத்தில் திளைத்த ஒருவரின் குடும்பத்தை கண்கூட பார்த்த உண்மை.. மகனுக்கு படிப்பு மண்டையில் ஏறவில்லை.. சகவாச தோஷத்த்தால் உருப்படாமல் போய்விட்டான்.. மகளுக்கு உடம்பில் எல்லா வியாதிகளும் நிறைந்து இருக்கிறது.. லஞ்சம் வாங்கி உல்லாசமாக இருந்தவரும் போய்சேர்ந்துவிட்டார். லஞ்சப்பிசாசுகளின் இன்றைய சந்தோஷம் நாளை கண்டிப்பாக தீராத துன்பமாக மாறும். லஞ்சமாக சேர்த்த காசு எல்லாம் விரைய வழியில் வீணாக கரையும்.. இதுதான் உண்மை.. திருந்துங்கள் ஊழல்வாதிகள்... லஞ்சப்பேய்ங்களே..இல்லையேல் கர்மா விடாது..


சாமானியன்
செப் 22, 2025 11:33

கமிஷன் கொடுப்பதை ஏதோ மிட்டாய் கொடுக்கிற மாதிரி சொல்கிறார். அப்பாவி திமுக ஆள். இந்த ஜன்மத்தில் யாராவது இந்த மாதிரி கமிஷன் வாங்கினா, அடுத்த ஜன்மத்தில் கோவில் வாசலில் பிச்சை எடுக்க வேண்டி வரும்.


Keshavan.J
செப் 22, 2025 11:29

I think First time Vijay joseph spoke about social Issue at his rally. Correct me If i am wrong. I dont like him but I wish his party and Seeman party win 30 seats each. DMK should never come. Coalition rule with all party ministry is good for the state.


Anand
செப் 22, 2025 11:27

எப்படிப்பார்த்தாலும் கமிஷன் தரப்படுகிறது என்பது உண்மைதானே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை