உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை இபிஎஸ் பேசாதது ஏன்: கேட்கிறார் துரைமுருகன்!

வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை இபிஎஸ் பேசாதது ஏன்: கேட்கிறார் துரைமுருகன்!

சென்னை: ''வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை இபிஎஸ் வாய் திறக்காதது ஏன்,'' என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை; கடந்த தேர்தல்களில் போலி வாக்காளர்களைச் சேர்த்து, அதன் மூலம் பாஜ தனது வெற்றியைச் சாத்தியப்படுத்தியதை லோக்சபா எதிர்க் கட்சித் தலைவர் ராகுல், ஆதாரங்களோடு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தேர்தல் மோசடி ஆதாரங்கள், தேர்தல் ஆணையம் பாஜ அரசின் கைப்பாவையாகவே மாறிவிட்டதை காட்டுகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கே பேராபத்து!மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வென்றதற்குக் காரணமே போலியாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள்தான். கூடுதலாகச் சேர்க்கப்பட்ட 41 லட்சம் வாக்காளர்களால் தேர்தல் முடிவே மாறிப் போனது. லோக் சபா தேர்தலில் வென்ற காங்கிரஸ் கூட்டணி, பாஜவும் தேர்தல் ஆணையம் கூட்டணி போட்டுச் செய்த சதித்திட்டத்தால் சட்டசபை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது. இதே பாணியில்தான் வரப் போகிற பீஹார் சட்டசபை தேர்தலிலும் மோசடிகளை அரங்கேற்ற பாஜ முயல்கிறது. SIR என்ற சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் பீகார் மாநில வாக்காளர் பட்டியலிலிருந்து பாஜவிற்கு எதிரான மனநிலை கொண்ட வாக்காளர்கள் பல லட்சம் பேரை நீக்கியிருக்கிறது மத்திய பாஜக அரசு. இது நாட்டின் ஜனநாயகத்திற்கு விடப்பட்டிருக்கிற மிகப்பெரிய அச்சுறுத்தல். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் தமிழகத்திலும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழக வாக்காளர்கள் தங்களது வாக்காளர் தகுதியை நிரூபிக்க வேண்டும் எனும் பெயரால் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதே போல முறையற்ற வகையில் லட்சக்கணக்கான பிற மாநில மக்களைத் தமிழகத்தில் சேர்க்கும் சதி திட்டத்தையும் பாஜ அரசு மேற்கொள்ளக் கூடும் . இது தமிழகத்தின் அரசியல் உரிமையையே அபகரிக்கும் செயல்.நாட்டில் ஜனநாயகத்திற்கும் தமிழக மக்களின் அரசியல் உரிமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில் வாய்மூடி கள்ள மௌனம் காத்து தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமி. அதிமுகவை அடமானம் வைத்தவர், தமிழக வாக்காளர்களையும் டில்லியிடம் அடமானம் வைக்கத் துணிந்துவிட்டாரா? வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏன்?தமிழகத்தில் அரசியல் ரீதியாகப் போராடி வெற்றி பெற முடியாத அடிமைகளும் அவர்கள் எஜமானர்களும் குறுக்கு வழியில் வெற்றி பெற்று விடலாம் என்று கனவு கண்டால், அது ஒருபோதும் நடக்காது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

M Ramachandran
ஆக 08, 2025 22:18

அவர் ஏன் கருத்து சொல்லணும் நீங்க ராகுலு ஓத்த குண முதியவர்கள். ராகுலுக்கு மத்தளம் தட்ட அவசியம். அதாவது ஒரே உரையில் இருக்கும் 2 கத்திகள். அவர் ஒன்னும் கள்ள ஒட்டு போடணும்னு எங்காலேயே. உங்க கும்பல் தானே அயல் நாட்டு காரங்களை வைத்து கள்ள ஒட்டு போடணும்னு ஏங்குது


V RAMASWAMY
ஆக 08, 2025 18:56

உங்கள் பேத்தல், உருட்டல்களெல்லாம் பா ஜ கவிடம் நடக்காது.


MARUTHU PANDIAR
ஆக 08, 2025 18:29

அடடா ஜனநாயகத்தின் மேல என்ன ஒரு காரை என்ன ஒரு அக்கறை? தோற்றதாக அறிவிக்கப்பட்ட சிதம்பரம் "ரீக்கவுண்டு" மூலம் ஜாஎயித்து சாரி ஜெயிச்சுட்டார்னு சொல்ல வச்சு அவுரு மத்தியில் அமைச்சரு கூட ஆகி ... இதெல்லாம் என்னனு மக்கள் கேக்கறாங்க.


Mecca Shivan
ஆக 08, 2025 17:43

எவனாவது எதாவது எழுதிக்கொடுத்தா அப்படியே பேசவேண்டியது ..


Rameshmoorthy
ஆக 08, 2025 17:39

Why no talk on 30000 cr Mr Durai as revealed by madurai MLA


Rameshmoorthy
ஆக 08, 2025 17:36

Why no talk on law and order Mr. Durai??


Krishnaswame Krishnaswame
ஆக 08, 2025 17:01

மக்கள் நலப் பணியாளர்களை ஏதோ திமுக கட்சிக்காரர்கள் போல வீடு வீடாக வந்து போன் நம்பர் கேட்கும் தகிடுதத்தம் பற்றி பர்ஸ் வாய் ஏன் எதுவும் பேசவில்லை அதே போலத்தான் திரு. இபிஎஸ் சும் வாக்காளர் பட்டியல் பற்றி பேசவில்லை


சகுரா
ஆக 08, 2025 16:49

அப்போ தீமுக தேர்தல்ல வெற்றி பெற்றதும் பிஜேபியின் சூழ்ச்சியா?


Easwar Kamal
ஆக 08, 2025 16:40

eps எப்படி பேசுவார். உங்கள் திமுகவுக்கு ஆப்பு வைக்க போறதே இந்த தேர்தல் கமிசன் தன. அப்புறம் எப்படி இந்த நேரு /வேலுக்கு எல்லாம் லாடம் கற்றது. இவனுங்க காலத்துக்கும் கொள்ளை அடிப்பானுங்க அனல் எப்படியோ மத்தியில் உள்ளவர்களுக்கு கப்பம் கொடுத்து தப்பிகிறானுங்க. மற்றது இந்த செந்தில் பாலாஜி போன்றோரோதான். பிஜேபி கொஞ்சம் இந்த திருடர்கள் களை எடுத்தால் தமிழக்தில் தாமரை மலரும்.


Keshavan.J
ஆக 08, 2025 16:11

ஏன் என்றல் 6.5 லக்ஷம் நீங்கள் உருவாக்கிய போலி வாக்காளர்கள் நீக்க படுவார்கள் . அது EPS க்கு சாதகம் புரிஞ்சதா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை