உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 ஆண்டு வளர்ச்சியை பார்க்காதது ஏன்?: இது உங்கள் இடம்

10 ஆண்டு வளர்ச்சியை பார்க்காதது ஏன்?: இது உங்கள் இடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உலக தேசிய, தமிழக நிகழ்வுகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த 10 ஆண்டு கால மத்திய பா.ஜ., ஆட்சியில், 100 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது' என, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி குற்றம் சாட்டி இருக்கிறார்.கடந்த 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் நாடு இருந்த நிலையையும், நாட்டு மக்கள் வாழ்ந்த காலத்தையும் சற்று பின்னோக்கி பார்த்தோம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாடு எவ்வளவு சுபிட்சமாக, தன்னிறைவு பெற்று, எவ்வித குறையும் இல்லாமல் இருந்தது?கங்கையிலும், காவிரியிலும் தண்ணீரா ஓடியது? தேனும், பாலும் அல்லவா கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக, சுபிட்சமாக, கடனோ, உடனோ இன்றி அவரவர் சொந்த வீடுகளில் வாழ்ந்தனர். வேலை இல்லாத ஒரு இளைஞனை கூட காண முடியாதே.பொருளாதாரத்தில் நாடு எவ்வளவு தன்னிறைவு பெற்று விளங்கிக் கொண்டிருந்தது. அதன் விளைவு? உலக வங்கியும், சர்வதேச நிதியமும் நம்மிடம் கடன் வாங்க, காத்து கிடந்தன.வெளிநாடுகளுக்கும், உலக வங்கிக்கும் கடன் வழங்கியது போக, மீதி இருந்த நிதியை, விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற உள்ளூர் பிரமுகர்களுக்கும் கடன்களாக வாரி வழங்கி, அவர்கள் வெளிநாட்டுக்கும் தப்பியோட வழி வகுத்து கொடுத்த ஆட்சி அல்லவா.காங்., ஆட்சியின் ஊழல்களை போபர்ஸ், டெலிகாம், 2ஜி, காமன்வெல்த் விளையாட்டு போட்டி, சர்க்கரை, நிலக்கரி என, பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாமே.ஆனால், இந்த 10 ஆண்டு பா.ஜ., ஆட்சியில் ஒரு ஊழல் புகாரை அழகிரியால் சுட்டிக்காட்ட முடியுமா? இந்த, 100 லட்சம் கோடி கடன்களை மத்திய அரசு வாங்கியிருந்தாலும், 10 ஆண்டுகளில் நம் பொருளாதாரம் அதை விட, பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ந்திருப்பதை கவனிக்க தவறியதேன்?என்னமோ, இந்த 100 லட்சம் கோடி ரூபாய் கடனை பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் அவர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றதை போல அழகிரி பேசுகிறாரே... 10 ஆண்டுகளில் நாடு அடைந்த வளர்ச்சியை பார்க்காமல், பா.ஜ.,வை குறை சொல்லியே ஆக வேண்டும் என்பதற்காகவே, அழகிரியின் குற்றச்சாட்டு இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sridhar
ஜன 13, 2024 13:10

காங்கிரஸ் ஆட்சியில் நூறு லட்சம் கோடி ஊழல் அல்லவா நடந்தது.


P Sundaramurthy
ஜன 13, 2024 11:00

"எவ்ளோ செஞ்சிட்டோம் இதை செய்யமாட்டமா ....


RAMAKRISHNAN NATESAN
ஜன 13, 2024 09:46

அழகிரி ஒரு வீணாப்போன ஆள் ...... காங்கிரஸிலேயே ஒரு குக் கல் கூட மதிப்பதில்லை .....


VENKATASUBRAMANIAN
ஜன 13, 2024 09:22

இவர் ஒரு காமெடி பீஸ். 60 ஆண்டு காலம் ஒன்றுமாக செய்யாமல் இப்போது பொறாமையில் பேசுகிறார்.


S.kausalya
ஜன 13, 2024 08:46

அவர் தன்னை சுற்றி உள்ள வளர்ச்சி மட்டுமே பார்க்கிறார். நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி கண்ணில் படாமல் பார்த்து kolvadhil கவனமாக உள்ளார்


நரேந்திர பாரதி
ஜன 13, 2024 07:07

இந்தாளு மட்டும் எப்படி போதையில இருக்குற மாதிரி வேற உலகத்துலயே இருக்காரு


sureshpramanathan
ஜன 13, 2024 05:07

Alagiri You must be blind not to see phenomenal growth India achieved and today India is fifth largest economy in the world Look at all infra airports looks like western countries Trains fantastic Alagiri is sick needs to change and be honest otherwise people will throw you out soon


Venkatesh
ஜன 13, 2024 03:52

இவர்கள் போன்றோரை ஆண்டவன் ஏன் மனிதனாக படைத்தார் என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.


ரமேஷ்VPT
ஜன 13, 2024 02:46

இந்த காங்கிரஸ் பயலுகளுக்கு எங்கே, எப்படி கோள் மூட்டி சந்தோஷப்படலாம், யாரை நோண்டலாம் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது, உருப்படியாக ஏதாவது நாட்டிற்கு செய்திருக்கிறார்களா என்றால் நாட்டின் சொத்தை சூறையாடி அவர்கள் கொழுத்தது தான் மிச்சம். இந்த 10 ஆண்டுகளில் நாடு எவ்வளவோ முன்னேறியுள்ளது, அது அழகிரி கண்ணுக்கு தெரியலையா? இல்ல அந்த பழைய காங்கிரஸ் புத்தியோட தான் இருக்கிறாரா என்று தெரியவில்லை. இன்று இந்தியாவை உலகநாடுகள் பாராட்டும் விதமாக நாட்டை முன்னேற்றியிருக்கிறார் மோடி, அது இல்லை என்று சொல்லமுடியுமா இந்த காங்கிரஸ் பயலுகளால். 2024 தேர்தலில் மக்கள் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். அதுவுமில்லாமல் ஜாதி, மத கலவரத்தை தூண்டுவதும் தான் இவர்களது அரசியல்.


A Viswanathan
ஜன 13, 2024 07:22

இவருடைய மனநிலை குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி