உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வருக்கு வானளாவிய அதிகாரம் வந்துடுமா? மஹா., கவர்னர் ராதாகிருஷ்ணன் கேள்வி

முதல்வருக்கு வானளாவிய அதிகாரம் வந்துடுமா? மஹா., கவர்னர் ராதாகிருஷ்ணன் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல்வருக்கு வானளாவிய அதிகாரம் வந்துடுமா? என திருநெல்வேலியில் நிருபர்கள் சந்திப்பில் மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் திருநெல்வேலி வந்திருந்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். திருநெல்வேலியில் மாநில பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு சென்றார். நடுக்கல்லூரில் கோவில் நிகழ்வில் பங்கேற்றார். திருநெல்வேலியில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n4nf8r2h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நல்லதே போற்றப்பட வேண்டும். சமுதாயத்திற்கு ஊறு விளைவிப்பதை எதிர்க்க வேண்டும். இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொருவருக்குமான அதிகாரத்தை வரையறுத்துள்ளது. முதல்வருக்கு மகத்தான அதிகாரங்கள் உள்ளன. அதிகாரங்களை முறையாக பயன்படுத்தினால் மாநில மக்களுக்கு எத்தனையோ நன்மைகளை செய்ய முடியும். கவர்னர்களுக்கு இருக்கும் ஒன்றிரண்டு அதிகாரங்களுக்குள் புகுந்து அது கூட இருக்கக் கூடாது என்ற நினைப்பது சிறந்த அணுகுமுறை அல்ல. அரசியல் சாசனப்படி கவர்னர் தான் ஒரு மாநிலத்தின் முதல் குடிமகன் ஆவார். மதச்சார்பற்ற தன்மை என்பது யார் மனதும் புண்படாமல் செயல்படுவது தான். ஒருவர் மற்றவர் நம்பிக்கையை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு தான் உள்ளது என கேரள வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. நான் நான்கு மாநிலங்களில் கவர்னராக இருந்திருக்கிறேன். அவை காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி செய்யும் மாநிலங்களாகும். அங்கெல்லாம் இத்தகைய பிரச்னைகள் வரவில்லை.கவர்னர், முதல்வரின் அதிகார வரம்புக்குள் வரக்கூடாது என கூறுபவர்கள், கவர்னரின் அதிகார வரம்புக்குள் முதல்வர் வரக்கூடாது என்பதான் சரியான அணுகுமுறை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல்வருக்கு வானளாவிய அதிகாரம் வந்துடுமா?அப்படியானால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு தான் அதிக அதிகாரம் என எதேச்சதிகாரமாக நடந்து கொள்ள முடியுமா? இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வெறும் கரும்பலகையா?

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தொகுதி நிதி ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்ட வகுப்பறையை மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். நயினார் நாகேந்திரன், துணைவேந்தர் சந்திரசேகர் ஆகியோர் ஒரு பெஞ்சில் அமர்ந்தனர். அப்போது கவர்னர் சி.பி.ஆர்., 'என்ன சார் ... துவக்க பள்ளிகளுக்கே இப்போது ஸ்மார்ட் போர்டு வந்துவிட்டது.... பல்கலைக்கு வெறும் கரும்பலகைதானா என கேட்டார்... ஸ்மார்ட் போர்டுக்கும் நயினார் நாகேந்திரன் ஏற்பாடு செய்வார் என்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

புறக்கணிப்பு

தமிழக அரசின் சட்டசபை நிதியில் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தை வேறு மாநில கவர்னர் திறந்து வைக்கலாமா என்ற சர்ச்சை எழுந்தது. எனவே இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

varatha rajan
ஜூலை 12, 2025 08:33

இந்த மாதிரி அரசியல் பேசும் கவர்னர்களை இதுவரை நான் பார்த்ததில்லை இவர் வேலையை மட்டும் இவர் செய்தால் போதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை விமர்சிக்கும் தகுதி எவருக்கும் கிடையாது கவர்னர் கவர்னர் ஆக மட்டும் இருந்தால் போதும் பிஜேபியின் சாயமாக இருக்கக் கூடாது அது நாட்டுக்கு கேடு


Ranga
ஜூலை 12, 2025 06:51

hello sir..this is applicable for PM also sir..cm or pm has been ed by the people...


vivek
ஜூலை 12, 2025 11:20

ranga sir, but our cm have no brain sir....you have brain sir to put this comment sir....


திகழ்ஓவியன்
ஜூலை 12, 2025 00:38

நீர் கவர்ணர் மக்களிடம் தோற்றதால் கோவெர்னெர் உள்ளேர் இல்லை என்றால் நீர் இப்போ தெருவில் தான் அண்ணாமலை போல கூவி கொண்டு இருந்து இருப்பேர்


GMM
ஜூலை 11, 2025 20:11

முதல்வர், அமைச்சருக்கு கல்வி தகுதி தேவையில்லை. மக்கள் பிரதிநிதிகள் தான். அரசியல் சாசனம் பரிந்துரை அதிகாரம் மட்டுமே வழங்கியுள்ளது. பத்திரிக்கை, மீடியாவில் முதல்வர் அதிரடி உத்தரவு என்று கூறுவது கருத்து சுதந்திரம். அதிகாரிகள் ஏற்கவில்லை என்றால், அவர் உத்தரவு செல்லாது. கருவூலத்தில் ஒரு ரூபாய் செலுத்த, எடுக்க உரிய அதிகாரிகள் கையெழுத்து இல்லாமல் முதல்வர், அமைச்சரால் முடியாது. அது போல் அனைத்து துறைகளிலும் நேரடியாக நிர்வகிக்க முடியாது. எந்த நேரடி அதிகாரமும் சாசனம் கொடுக்கவில்லை. கவர்னர் அரசியல் சாசன பதவி. மாநில அளவில் முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் வக்கீல் தவறான வாதம் புரிந்து வருகின்றனர். மக்களிடம் இந்த மாயை ஒழிய வேண்டும்.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 11, 2025 21:35

நடப்பது இங்கிலாந்து ராணியின் ஆட்சி கிடையாது. மக்களாட்சி. முதல்வர் மக்களின் பிரதிநிதி. கவர்னர் அரசியல் சாசன நியமன பதவி. ஆட்டுக்கு தாடி எவ்வளவு அவசியம் போல அரசியல் சாசனத்தில் அவருக்கு என்ன அதிகாரங்கள் இல்லை, உண்டு என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது.


Ramesh Sargam
ஜூலை 11, 2025 19:59

தமிழக முதல்வருக்கு அடுத்த கிரகத்திலும் கூட அதிகாரம் செலுத்தும் பவர் உள்ளது.


ManiK
ஜூலை 11, 2025 18:56

அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்ததும் திமுக கும்பல் அவர் துணைவேந்தரை நியமித்தால் குய்யோ- முய்யோனு கூச்சலிடுவார்கள்.


sankaranarayanan
ஜூலை 11, 2025 18:35

தமிழக அரசின் சட்டசபை நிதியில் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தை வேறு மாநில கவர்னர் திறந்து வைக்கலாமா என்ற சர்ச்சை எழுந்தது. எனவே இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். கலெக்டர் ஓர் அரசாங்க அதிகாரி அவர் ஓர் அரசியல்வாதி அல்ல இந்த விழாவில் அவரை கலந்து கொள்ளாமல் தடுத்த திராவிட மாடல் அரசு சீக்கிறமே விளைவுகளை சந்திக்கும்


அப்பாவி
ஜூலை 11, 2025 18:29

நியமன ஆளுக்கே இவ்ளோ கேள்வி கேக்கிற கெத்து வந்துருச்சே... ஒரு கவுன்சிலர் எலக்ஷனில் நின்னு ஜெயிச்சிருந்தாத் தானே.


Mahendran Puru
ஜூலை 11, 2025 18:23

எத்தனை அடி உச்ச நீதிமன்றம் கொடுத்தாலும் திருந்தாத ஜென்மங்கள்.


Karthik Madeshwaran
ஜூலை 11, 2025 17:40

நயினார் நாகேந்திரனிடம் தேர்தல் சமயத்தில் பிடிபட்டு மாட்டிக்கொண்ட அந்த 5 கோடி யாருடையது என்று கேட்க துணிவு உண்டா ? பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டு கோப்புகளின் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்க கையெழுத்து இடாத தமிழ்நாட்டு ஆளுநர் ரவி பார்த்து கேள்வி கேட்க துணிவு உண்டா ? நீங்கள் எல்லாம் நியாயத்தை பேசுவது தான் அநியாயம். ஆளுநர் என்ற நியமன பதவியில் அமர்ந்தாலும் உங்களுக்கும் மக்கள் தான் எஜமானர்கள். தான் சார்ந்த கட்சி அல்ல என்பதை எல்லா ஆளுநர்களும் முதலில் உணர வேண்டும்.


K V Ramadoss
ஜூலை 11, 2025 20:31

மேலே ல்லப்பட்ட 2 கேள்விகளுக்கு யாராவது பதில் சொல்லமுடியுமா ? இந்த கேள்விகள் தகுந்த ஆதாரத்துடன் கேட்கப்பட்டதா அல்லது எதோ வாய் புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோ என்று கேட்கப்பட்டதா என்று தெரிய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை