உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வு அதிகாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி பெண் கைது

ஓய்வு அதிகாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி பெண் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற அதிகாரியிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 8 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலியில் 2016 ல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல மேலாளராக பணியாற்றியவர் தாசன் 70. ஓய்வுக்கு பிறகு கே.டி.சி.நகர் பகுதியில் வசிக்கிறார். மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 2016 ல் திருநெல்வேலியில் விளையாட்டு அதிகாரியாக பணியாற்றிய போது தியாகராஜநகரை சேர்ந்த பெனிட்டா ரெஜினால்ட் 30, என்ற பெண் பழகினார். தமக்கு மத்திய அரசில் பெரிய அதிகாரிகளை தெரியும் எனவும் தாசன் மகளுக்கு அரசு மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி இரு தவணைகளில் ரூ.8 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை. 2020 ல் போலீசில் தாசன் புகார் செய்தார். பெனிட்டா தலைமறைவானார். 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெனிட்டா நேற்று கைது செய்யப்பட்டார். சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

shakti
ஜூன் 06, 2025 23:06

ஏசப்பா , இவருக்கு பாவமன்னிப்பு கொடு


R.RAMACHANDRAN
ஜூன் 05, 2025 16:19

லஞ்சம் கொடுத்து வேலை வாங்க முயற்சிக்கும் குற்றவாளிகளையும் சேர்த்து சிறைக்கு அனுப்புவதற்கு பதிலாக அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள் குற்றவாளிகள்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 05, 2025 09:41

பெனிட்டா ரெஜினால்ட் 30, என்பவர் பெண்ணாக இல்லாமல் ஆணாக இருந்திருந்தால் இவர் இப்படி ஏமாந்திருக்க மாட்டார். சபலத்தின் விளைவால் பணத்தை இழந்திருக்கிறார்


SIVA
ஜூன் 05, 2025 08:49

பெனிட்டா பின்னிட்டா ....


VENKATASUBRAMANIAN
ஜூன் 05, 2025 07:40

இன்றும் மக்கள் திருந்த வில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை