உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தமிழகத்தில் தொழில் தொடங்க மேலும் 2 நிறுவனம் ஆர்வம்; முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்!

தமிழகத்தில் தொழில் தொடங்க மேலும் 2 நிறுவனம் ஆர்வம்; முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஈட்டன், அஷ்யூரண்ட் நிறுவனத்தினர், தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=clxh5m2z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட அமெரிக்க நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சிகாகோ வருகை தந்த போது தமிழ்ச் சங்கங்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை முதல்வர் சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக, மின் மேலாண்மை மற்றும் ஹைட்ரோலிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான ஈட்டன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனம் தமிழகத்தில் ரூ.200 கோடி முதலீடு செய்ய உள்ளது. அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் அமைக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஸ்டாலின் சமூகவலைதளப்பதிவு

“சென்னையில் ரூ.200 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பொறியியல் மைய விரிவாக்கத்திற்காக ஈட்டன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் ஒப்பந்தம் மூலம் 500 பேருக்கு வேலை கிடைக்கும்' என முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த ஸ்டாலின்

முன்னதாக, சிகாகோ கடற்கரையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார். சாலைகள் மற்றும் கடற்கரை சாலையில் முதல்வர் உற்சாகமாக சைக்கிள் ஒட்டிச்சென்ற காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

ஆரூர் ரங்
செப் 04, 2024 19:03

அவர் துவக்கிய மீத்தேன் திட்டத்திற்கும் முதலீட்டை ஈர்ப்பாரா?.


ஆரூர் ரங்
செப் 04, 2024 19:02

ஆலைகளுக்கு அத்தியாவசியமான தண்ணீருக்கே அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலையில். இருப்பவை எல்லாம் விவசாய நிலங்கள் அல்லது சதுர கம்பெனி பிளாட் போட்டது. டெல்டா மாவட்டங்களில் வேளாண்மை தவிர்த்த வேறு தொழில் துவங்கத் தடை. உழைக்கும் வயதில் குடிக்கு அடிமையானவர் எண்பது சதவீதம். என்ஜினீயரிங்( காகித) பட்டதாரிகளில் 99 சதவீதம் பேருக்கு மென்திறன் குறைபாடு. வரும் எல்லா முதலீடுகளும் சென்னையைச் சுற்றி? இதில் எதையோ ஈர்க்கிறார்?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 04, 2024 17:40

அது வெளிநாட்டு மூதலீடோ அல்லது உள்நாட்டு முதலீடோ .... அதற்குத் தேவை நல்ல அடிப்படைக் கட்டடமைப்பு ..... அதாவது தடையற்ற சீரான மின் வசதி, தண்ணீர் வசதி, தரமான சாலைகள் மற்றும் சீரான போக்குவரத்து போன்றவை ..... ஊழலற்ற நிர்வாகம், குழப்பமற்ற வரிகள் ..... இவை இருந்தால் எந்த கட்சி தலைமை இருந்தாலும் முதலீடுகள் குவியும் .....


vbs manian
செப் 04, 2024 17:27

சைக்கிள் சினிமாவுக்கு அமெரிக்கா போகணுமா. ஒரு நாட்டுக்கு வரும் எந்த தலைவரும் இப்படியெல்லாம் செய்வதில்லை. வெள்ளத்தனைய மலர் நீட்டம்.


J.V. Iyer
செப் 04, 2024 17:10

எவ்வளவு வேணுமானாலும் இப்போது சொல்லலாம். கடைசியில் வருவது என்னவோ பூஜ்யம். ஆமாம், யாரு நாற்பது பர்ஸன்ட் கமிஷன் கொடுத்து முதலீடு செய்வார்கள்?


Easwar Kamal
செப் 04, 2024 17:07

தலைவரே எல்லாம் நல்லாத்தான் இருக்கு. சும்மா அமெரிக்காவில் பார்தத அப்படியே கனவோடு போகாமல் அதை தமிழகத்தில் செய்து தமிழகத்தை இந்தியாவிலே சிறந்த தூயமயன மாநிலமாக உருவாக்குங்கள். உங்கள் காலத்தில் தன சென்னையில் குப்பை அள்ளுவது எல்லாம் வெளி நாட்டில் உள்ளது போல நடந்தது ஆனால் அள்ளிய குப்பைகளை எல்லாம் ஒழுங்கு படுத்தவே இல்லை. ரோடு எல்லாம் சேரி படுத்த வேண்டும். இதுக்கு பணமும் வேண்டும். கொஞ்சம் உருப்படியா ஏதாவது செய்தல் இந்த ரெட்டை குழல் துப்பாக்கி காதில் இருந்து புகை வரும். இவர்களை மீறி எதிர் காட்சிகள் முன்னேற வேண்டும் அதுதான் இப்போது நிலை.


ராமகிருஷ்ணன்
செப் 04, 2024 16:44

அமெரிக்க தொழில் அதிபர்களிடம் நம்ம ஸ்டாலின் பேசும் ஒரே ஒரு வீடீயோ பார்க்க வேண்டும். முடியுமா, முடியாதா


Sridhar
செப் 04, 2024 16:01

கொஞ்சம் கொஞ்சமா அமௌன்ட் குறைஞ்சி இந்த வார கடைசியில ஒரு கம்பெனி 1 லச்ச ரூபா முதலீடுன்னு... இல்ல இல்ல புரிந்துணர்வுன்னு செய்தி வரும் பாருங்க. இவிங்கள ஜோக்கர் வரிசலகூட சேக்கமுடியாதுபோலருக்கே


vbs manian
செப் 04, 2024 15:41

யு பி குஜரா த்தில் எந்த வெளிநாட்டுக்கும் போகாமல் உள்ளூரில் உலகளாவிய முதலீட்டார் மாநாடு நடத்தி பதினைந்து இருபதாயிரம் கோடி முதலீடு ஈர் கப்படுகிறது. சிலர் ஆழ்கடலில் முத்துகுளிக்கின்றனர். வேறு சிலர் கடற்கரையில் கிடக்கும் சங்கு கூழாங்கல் எடுத்து திருப்தி அடைகின்றனர்.


ram
செப் 04, 2024 15:08

நல்லா காட்டுரீங்க பபடம்.. அதுவும் பயாஸ்கோப்.. இன்னுமாடா நம்புரீங்க..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை