உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவின் மொத்த கடன் ரூ.2,900 லட்சம் கோடி யாக உயர்வு

அமெரிக்காவின் மொத்த கடன் ரூ.2,900 லட்சம் கோடி யாக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்க அரசின் கடன் மதிப்பு, முதல் முறையாக 2,900 லட்சம் கோடி ரூபாயை கடந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.அமெரிக்க அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, அமெரிக்காவின் மொத்த கடன் மதிப்பு, கடந்த திங்களன்று 2,900 லட்சம் கோடி ரூபாயை கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி மாதம் தான் அந்நாட்டின் மொத்த கடன் மதிப்பு 2,800 லட்சம் கோடி ரூபாயை தாண்டிய நிலையில், அடுத்த ஆறே மாதங்களில் 2,900 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, நடப்பு காலாண்டில், அமெரிக்க அரசின் கடன் குறித்த மதிப்பீட்டையும் நிதித்துறை குறைத்துள்ளது.இதன்படி, நடப்பு ஜூலை - செப்டம்பர் காலாண்டில் அரசின் நிகர கடன் கிட்டத்தட்ட 61 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணித்துள்ளது. இதற்கு முன்பு, 70 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணித்திருந்தது.இதுமட்டுமல்லாமல், நடப்பு செப்டம்பர் காலாண்டின் முடிவில் அரசின் கையிருப்பு, 71 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது.மேலும், அரசின் நிதி இருப்பு, நடப்பாண்டு இறுதி வரை போதுமானதாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mr Krish Tamilnadu
ஆக 02, 2024 21:07

எல்லா நாடும் கடன்கார நாடு –னா? யார் தான் கடன் கொடுக்கிறா? இந்த கடனை எல்லாம் திருப்பி அடைப்பாங்களா? மாட்டாங்களா? நில் பேலன்ஸ் என்னைக்கி வரும். நம்ம வேற நாட்டுபற்று, நாம் இந்தியா கடனை அடைக்கணும், அப்படினு தேவையில்லாம உணர்ச்சி வசப்படாம இருப்போம். தெரிஞ்சவங்க தெளிவா சொல்லுங்க.


Ramesh Sargam
ஆக 02, 2024 20:51

அமெரிக்காவே கடனில் தத்தளிக்கும் போது, தமிழ்நாடு தத்தளித்தால் என்ன என்று ஒருசில அல்லக்கைகள் இப்பொழுது விவாதம் செய்யும் பாருங்க...


மணியன்
ஆக 02, 2024 13:01

இவ்வளவு கடனை வைத்துக்கொண்டு இந்தியாவை உடைத்து கொள்ளையடிக்க திட்டம் பாடுகிறான்.


Anand
ஆக 02, 2024 12:54

இவிங்களுக்கு அப்படி யார்தான் கடன் கொடுத்தார்கள்?


MADHAVAN
ஆக 02, 2024 11:46

இலவசம் கூடாதுன்னு சொல்ற நீ, மோடி இலவசம் இலவசம் னு சொன்னபோது எங்க போயிருந்த?


ஆரூர் ரங்
ஆக 02, 2024 10:19

டாலர் உலக கரன்சி எனும் நிலையிலிருந்து கீழே போனால் இவ்வளவும் வாராக்கடன் ஆகிவிடும். டாலரில் வர்த்தகம் செய்வதன் மூலம் ஏகாதிபத்தியத்திற்கே உதவுகிறோம்.


அப்பாவி
ஆக 02, 2024 10:15

அடுத்தது நாமதான். வல்லரசுதான்.


Rajarajan
ஆக 02, 2024 06:40

கவலைப்படாதீங்க பாஸ். உங்களுக்கு துணையா தமிழக கடனும், ஒட்டுமொத்த இந்திய கடனும் போட்டிபோட்டு வந்துகிட்டே இருக்கு. தேவையற்ற இலவசங்கள் / நஷ்டங்கள் இருக்கும் வரை, எங்களை கடனில் யாரும் அசச்சிக்க முடியாது.


Kasimani Baskaran
ஆக 02, 2024 05:32

அமெரிக்காவின் கடனுக்கு ஈடாக அவர்களிடம் உலகையே புரட்டிப்போடும் தொழில் நுணுக்கங்கள் பல உண்டு. அதை சரியாக பயன்படுத்தினார்கள் என்றால் கடனில் இருந்து மீண்டு விட முடியும். எப்பொழுதுமே நாட்டாண்மையாக இருக்க முயன்றால் கடன்தான் எகிறும். தமிழகம் போல இலவசம் கொடுக்க கடன் வாங்கும் அரசு உலகில் ஆப்பிரிக்காவில் கூட கிடையாது. இந்தியாவின் இரண்டாவது பெரிய தொழில் வள மாநிலம் இன்று நீட் தேர்வு எழுத பயப்படும் நிலையில் இருக்கிறது. 40000 பேர் தாய் மொழித்தேர்வை எழுதக்கூட பயப்படுகிறார்கள். கொள்ளை லாபம் பார்க்க வசதியுள்ள மின்சாரத்துறை லட்சக்கணக்கான கோடிகளில் கடனில் எப்பொழுது திவாலாகுமோ என்ற நிலையில் நடத்தப்படுகிறது.


Srinivasan K
ஆக 02, 2024 06:46

this is not correct. going forward, people will face unmanageable inflation already middle class onus facing this. very little saving left for uncertain future edge on technology is no longer true. even in gen ai many first time breakthrus happen outside us


Mani . V
ஆக 02, 2024 04:48

அப்பு, இது மட்டுமல்ல இன்னும் இரண்டு நாட்டுடைய கடனையும் சிங்கிள் பேமெண்டில் எங்களின் கோபாலபுர குடும்பம் செட்டில் செய்து விடும். தெரிஞ்சுக்கோங்கோ.


மேலும் செய்திகள்